துரியோதனன் – சொ.கா.சூ

ஒருவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்... இல்லையென்றால் சொந்த காசில் சூனியம் (சொ.கா.சூ) வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மஹாபாரதத்தில் அதை மிக அழகாக சொல்லியிருப்பதை பார்க்கலாம். கிருஷ்ணன் துரியோதனனை சந்தித்து பேசுகிறார், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது. சரி இனி இவனிடம் பேசி பயனில்லை என்று கிருஷ்ணன் அவன் மாளிகையிலிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும் போது மாளிகை வாயில் பாதையில் அஸ்வதாமன் வருவதை பார்க்கிறார், துரியோதனன் கோபத்தில் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறார். சரி இதுதான் சமயம் இவன வெச்சு அவன் மண்டைய குழப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி காய் நகர்த்துகிறார்.

எதிரணியில் கிருஷ்ணன் இருந்தாலும், அஸ்வதாமன் மரியாதை நிமித்தம் கை குவித்து கிருஷ்ணனுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அதுதான் சமயம் என்று கிருஷ்ணன் தன் மோதிரத்தை கழட்டி கீழே விட, கிருஷ்ணன் மரியாதைக்குரியவர் என்பதால் அஸ்வதாமன் அதை குனிந்து எடுத்து கிருஷ்ணன் கையில் கொடுக்கிறான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் (சிறிது கயை பிடித்து அழுத்தி) வாங்கி கொள்கிறார். ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை, பிறகு இருவரும் வணங்கி விடை பெருகின்றனர்.

மாளிகையின் மாடியிலிருந்து இந்த காட்சியை ஊமைப் படமாய் துரியோதனன் பார்க்கிறான். கிருஷ்ணன் அஸ்வதாமனிடம் பேசி அவனை அவர்கள் (பாண்டவர்கள்) பக்கம் மாற்றிவிட்டான் என எண்ணுகிறான்.

இனி... துரியோதனனும் அஸ்வதாமனும் பேசிக்கொண்டது…

துரி: ஏண்டா பண்ணாட... அவ்ந்தான் நம்ம எதிரியாலுன்னு தெரியும்ல... அவன் கைல உனக்கின்னாடா பேச்சி வேண்டிகிடக்கு?

அஸ்: தோ...டா. என்னமோ புச்சா சொல்லவந்திட்டாரு. நாங்களும் உப்பு போட்டுதான் சோறு துண்றோம்... எங்களுக்கும் சொரண இருக்கு... நான் எவ்ன் கைலியும் பேஸ்ல... சும்மா மரியாதைக்காண்டி ஒரு அலோ சொல்லிகினோம்...
துரி: சரி நீ பேஸ்ல... உன்ன நம்பறேன்... ஒரு பேச்சுக்கு நீ பேஸ்லன்னே வெச்சுகிறன். நான் இங்கன இருந்ததால நீ பேஸ்னயா இல்லியான்னு என்னால கட்டன்ரைட்டா சொல்லமுடியல. ஆனா அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணியே... இன்னா மேட்டரது... அத்த சொல்லு.

அஸ்: இன்னாது... நான் அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணினா? யாம்பா... உன்கு ஏதாவது மண்ட கிண்ட ஓடிப்போச்சா? இல்ல... ராத்திரி அட்ச்ச மப்பு இன்னும் தெளியலயா?

துரி: நீ என் கைல டபாய்ககாத... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். தரையிலேருந்து மண்ண எடுத்து அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணுன.

அஸ்: யோவ்... இன்னாயா உன்கூட படா பேஜாராகீது... பேசாதத பேஸ்னேங்கிற... செய்யாதத செஞ்சேங்கிற... இத்தான் பெரியவங்கோ சொல்றத கேட்கனுங்கிறது. நீ யான் தோஸ்த்து, நீதான் எனக்கு முக்கியம்னு... நீ தப்பானவன்னு தெரிஞ்சும் உன்கு உதவ வந்தம் பாரு... எம்புத்திய ஜோட்டால அடிக்கனும்... அக்காங்.

(எது எப்படியோ, கிருஷ்ணன் அவர் நினைச்ச வேளைய கச்சிதமா செய்து முடித்திட்டார்).

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், உடையவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே மெய்.

எனக்கு பிடித்த பத்து பெண்கள்...

என்னை நண்பர் கோபி பிருந்தாவனத்திலிருந்து இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்திருந்தார். நன்றி கோபி... இனி கூப்பிட்டா நிபந்தனை இல்லாம கூப்பிடுங்க. இல்லையா நிபந்தனைய கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என சொல்லுங்களேன். (சரி... சரி... ஏன் இவர கூப்பிட்டோம்ன்னு வருத்தப் படாதீங்க). கற்ப்புக்கரசி ஒருவரை சொல் என்றால் கண்ணகிக்குமுன் நமக்கு நினைவிற்க்கு வரவேண்டியவர்கள் நம் அன்னையும் பிறகு (திருமணமாகியிருந்தால்) நம் மனைவியுமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நிபந்தனை இல்லையெனில் கொஞ்சம் சோப்பு போட்டிருக்கலாம்...

1. குண்டு டீச்சர் : செம்பனார்கோவில் உதவி பெரும் நடு நிலைப்பள்ளியில் என் முதல் வகுப்பு ஆசிரியை, பெயர் ஜெயலெட்சுமி. நான் காலந்தவறாமையை கற்றுகொண்டது இவரிடம்தான் என்பேன். உட்கார்ந்த இடத்திலிருந்தே நெய்வேலி காட்டாமணி-யால் வகுப்பு எடுத்தவர். இவர் எனக்கு பிடித்தவர் மட்டும் அல்ல என் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்தவர்... எனக்கு முதலில் பிடித்தவர்.

2. அவ்வையார் : திருவள்ளுவரின் இரு வரியில் நான் உலகை அறியும் முன் ஒரு வரியில் பல உண்ணதங்களை “ஆத்திச் சூடி”-யின் மூலம் அறிய செய்தவர். அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அவரை மறக்குமா என் மனம்?

3. புஷ்ப்பவள்ளி டீச்சர் : மயிலாடுதுறை தி.ப.தி.அர. மேனிலைப் பள்ளியில் எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர். அவர்களை பிடிக்க இரண்டு காரணங்கள், 1. எப்போதும் புன்னகை, 2. மாணவர்களின் மனமறிந்து பாடம் சொல்லிக்கொடுத்த தன்மை. வெட்கப்படாமல் தந்தி ஆங்கிலம் பேசு என்று தட்டிக்கொடுத்தவர்... ஏறிங் த மாடி, அடிச்சிங் த பம்ப் என்று சொல்லு என சொல்லி... சிரிக்காமல் புன்னகைத்தவர். (டீச்சருக்கு தெரியாது, தந்திக்கு பிறகு இண்டர்னெட்டு, ஈமெயிலு-ன்னு வந்திருச்சு... ஆனா தம்பி இன்னும் தந்திதான் அடிச்சிகிட்டு இருக்காருன்னு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

4. மேரி-கியூரி : மரியா எனும் இயர்பெருடன் பிறந்து, மணமானபின் கணவர் பியரி-கியூரின் பெயரால் மேரி-கியூரி ஆகி அணு ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்றவர். கணவன் இறந்த பின் கைம்பெண்ணாக இருக்காமல் கியூரி அணுகதிர்வீச்சு சோதனை மையத்திற்க்கு தலைமை ஏற்றதோடு ரேடிய-கதிர்வீச்சை மனித சிகிச்சைக்கு தக்கவாறு பிரித்தெடுத்த பெருமைக்குரிய நோபல் மங்கை.

5. அன்னை தெரசா : அண்டைய தேசத்திலிருந்து கல்வி கற்றுக்கொடுக்க வந்தவர்தான், க(கொ)ல்கத்தா சாலைகளில் அவர் கண்ட காட்சி… அவரை கல்விப் பணியிலிருந்து களப்பணிக்கு அற்பணிக்க வைத்தது. நோபல் பரிசுக்கு இவரால் பெருமை... அவரைப் பிடிக்கா விட்டால் என் மனதில் ஏதோ சிறுமை.

6. ஸ்டெஃபி கிராஃப் : ஸ்டெஃபி... அழகில் குல்ஃபி, டென்னிஸ் உலகில் ஆட்டத்தில் பேட்டா ராஃப்... இருப்பினும் நான் இதுவரை வாங்கவில்லை அவரிடம் ஆட்டோகிராஃப்.

7. ஷான் ஜான்சன் : பார்க்கத்தான் ஆள் குட்டி, பல்டி அடிப்பதில் படு சுட்டி. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் எனக்குப் பிடித்த குட்டி(ப் பிசாசு).

8. நடிகை காஞ்சனா : காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தவர். விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றி பின் நடிகையாகி தமிழ் சினிமாவை அழகு படுத்தியவர். (தற்போது அவர் பொருளாதாரத்தில் நலிவடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாக எங்கோ படித்தேன்... வருத்தமாக இருந்த்து)

9. பாடகி அனுராதா ஸ்ரீராம் : அழகிய குரல்களால் என்னை கவர்ந்தவர். எவ்வளவோ பாடல்கள்... மல்லிகையே... மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் கூறு... என்று என்னைத் தேடி இருந்தாலும்... கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

10. கவிஞர் தாமரை : ஒரு கவிஞராய்தான் எனக்கு தெரிந்தவர், பிறகு பாடலாசிரியையாய்... வியாபார உலகில், வளர்ந்து வரும் கலைஞர் எவர் ஒருவரும் செய்ய துணியாத ஒன்றை, என் எண்ணமும் எழுத்தும் ஒன்றே என தன்னை ஈழத் தமிழர்களுக்கான போரட்டத்தின் போது வெளிப்படுத்தியது... தெரிந்தவரை பிடித்தவர் ஆக்கியது.

கதவை தாண்டி வருவாயா...

குமுதத்தை திறந்தேன்
கட்டுரையை படித்தேன்
கதவைத் திறந்தேன்
காற்றாய் வந்தாய்!

கணனியைத் திறந்தேன்
பதிவை படித்தேன்
கணொளியைக் கண்டேன்
காணாமல் போனாய்!!

நித்யானந்தரே
நீர் ஒரு கல்பதரு
நான் ஒரு கவிதைதரு!!!

நாங்களும் ரவுடிதான்

விண்டர் ஒலிம்பிக்ஸ் - 2010

வாங்கூவர் - கனடாவில் 2010-ன் விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள்... கடந்த மூன்று வாரங்களாக பனி விளையாட்டுடன் கொண்டாட்டங்கள் என்று சொல்லும் அளவிற்க்கு நடந்து முடிந்துள்ளது.

நான் பெரும்பாலும் முதல் மற்றும் இறுதி நாள் கொண்டாட்டங்களை காணத்தவருவது இல்லை. இந்த வருடம்/முறை தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ன் உதவியால் அவதார் படத்தை மிஞ்சியது என்று சொன்னால் மிகையாகாது.

முதல் நாள் கொண்டாட்டங்கள்... காணொளிகள யுடியூப்ல பாருங்க... இங்க சில முக்கிய படங்கள்

நாங்களும் ரவுடிதான்...

கடந்த மூன்று விளையாட்டுகளை பார்த்த பொழுது மனதில் ஒரு சிறு வருத்தம் இருக்கும்... அத்தனை கொடிகளுக்கு இடையில் சக்கரம் பதித்த நம் மூவர்ண கொடி எங்கே என்று என் கண்கள் தேடும். இந்த ஆண்டு அதை ஒரு சிங்கம் சிங்கிளா உயர்த்தி பிடித்த பொழுது நினைத்தேன்... இனி நாங்களும் ரவுடிதான்.

இம்முறை இந்தியா கலந்து கொண்ட மூன்றில் லூஜ் எனப்படும் ஸ்லெட் பனி சறுக்கில் உலக தரவரிசையில் 29-ம் இடத்தை பெற்று தந்த "சிவ கேசவன் கண்ணன் பாலன்".

அடியால்... ரவுடி... தாதா

இந்த விளையாட்டு போட்டிகள் நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடம் என்ன?

ஒரு விசயத்தை பற்றி தெரிந்து வைத்திருந்தாலே நாம் எதையோ சாதித்துவிட்டோம் என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றி...

அந்த விசயத்தில் நாம் திறமை வாய்ந்தவராகவிட்டால் நாம் அந்தத் துறையில் இருந்து தூக்கியெறியப்படுவோம் என்பதை உணர்த்தியதோடு...

இன்று அந்த துறையில் வல்லமை அல்லது நிபுணத்துவராக இருக்க வேண்டும் என்பதை பறைசாற்றுகிறது.

தங்கத்திற்க்கும் வெள்ளிக்கும், வெள்ளிக்கும் வெண்கலத்திற்க்கும் இடைவெளி வினாடிகளில் நூற்றில் ஒரு பகுதி... உதாரணதிற்க்கு ஒன்று பாப்ஸ்லெய் என்ற பனிசறுக்கில் அமெரிக்கா எடுத்துகொண்ட நேரம் 3:24:46 - மூன்று நிமிடம் 24 வினாடி நூற்றில் 46 வினாடி, ஜெர்மனி 3:24:84, அமெரிக்காவை விட நூற்றில் 38 வினாடிகள்தான் குறைவு (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்), மூன்றாம் இடம் வந்த கனடா 3:24:85... நூற்றில் ஒரு வினாடியில் ஜெர்மனியிடம் வெள்ளியை பறிகொடுத்தவர்கள்.

இனி நான் ரவுடி, அடியால்ன்னு சொல்லிக்கிறது ஒரு விசயமே இல்லை. தாதாவ இருந்தாத்தான் ஜீப்புல (பிழைக்க) ஏற முடியும். ஜீப்பா இல்ல ஆப்பா?

அன்றும்... இன்றும்... -1

அன்று...
ஆசிரியர்: முருகா, வர வெள்ளிகிழமை விளையாட்டு போட்டிக்கு ஒரு 100 பேர் உட்கார பெஞ்சு போடனும்டா... அந்த வேளைய நீ பார்த்துக்கோ.

இன்று...
நண்பர்: முருகன், வர வெள்ளிகிழமை பிறந்த நாள் பார்ட்டி, ஒரு 100 பேர் உட்கார நாற்காலி ஏற்பாடு பண்ணும்... அத நீங்க பார்த்துக்கிறீங்களா?

முருகன்: சரி சார், காலைல ஏ.பி சார்கிட்ட சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டுட சொல்லுங்க... நான் கூட ரவிய அழைச்சிகிறேன், விளையாட்டு மைதானத்துல மதியம் பெஞ்ச இறக்கிடுறோம்.

ஒன்னும் பெரிய விசயம் இல்ல, ஒரு ஒன் அவர் அவே ஃப்ரம் டெஸ்க்னு போட்டுட்டு, மதியம் லன்ச் பிரேக்ல போயி எடுத்து கொண்டுவந்து வீட்டுல போட்டுடுறேன்.

டேய் ரவி வாடா ஒரு 20 பெஞ்சு ஏத்தனும், எங்க சிகப்பு காளை மாட்ட ஓட்டிக்கலாம், எங்க பார வண்டி சரிபடாது, உங்க வீட்டு டயர் வண்டிய எடுத்துப்போம், நம்ம தெருவிலேயே எடுத்து கொண்டாந்து இறக்கிடலாம்.

கணேஷ், லன்ச் பிரேக்ல ரெண்ட்-ய-பிளேஸ் வரை போயி கொஞ்சம் சேர் ஏத்திட்டு வந்திடலாமா? என் வண்டில ஏத்த முடியாது, யூகால்ல டிரக்க எடுத்துக்கலாம், அப்படியே ராஜ் வீட்டுல இறக்கிட்டு வந்திடலாம்.

பாட்டி: முருகா, பெஞ்ச ஒடைச்சி கொண்டாந்து போடுறீங்களா? காலு நொடிக்குது?

சேல்ஸ் லேடி: எச்சூசுமி, ரெண்டு சேரு டேமேஜ் ஆயிருக்கு

முருகன்: பாட்டி, அது ஏத்தும் போதே நொடிச்சிகிட்டுதான் இருந்துது... நீ பாக்கு இடிச்சி இடிச்சி... நொடிச்சி போச்சி. கவலை படாத அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு ஆசாரியார் வராரு அவர கூட்டிவந்து சரி பண்ணிதரேன்.

நாங்க செக் பண்ணல, உங்க டெலிவரிமேன் தான் லோட் பண்ணுனார், இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்திருக்கோம், அதுல கவர் பண்ணிக்கோங்க.

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...
ஆனால் முருகனும் நானும் வேறல்ல...


இந்தியாவில் பாதி... அமெரிக்காவில் மீதி...
அன்றும் இன்றும் நம் நினைவுகள் ஒன்றல்லோ...


இத கவியரசர் கண்ணதாசன் எவ்வளவு அழகா பாட்டா எழுதியிருக்கார்.... கேட்கனுமா... இங்க அழுத்துங்க.

சோதனை

இனிய காலை பொழுது, நண்பர்களுடன் வழக்கமாக கூடும் இடத்தில் அன்றும் வழக்கமான விசயங்களை பேசிக்கொண்டிருந்தான். அஞ்சல்காரர் அவ்வழி கடக்கும் போது சொன்னார்... தம்பி உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அதை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று.

கடிதம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. என்ன விவசாய கூட்டுறவு சங்கத்திலிருந்து கடன் கட்டச்சொல்லி வந்திருக்கும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நண்பர்களுடனான அரட்டையை தொடர்ந்தான்.

தெரு கைப்பம்பில் தண்ணீர் எடுக்க வந்த நண்பனின் அம்மா நண்பனை காலை சிற்றுண்டிக்கு கூப்பிட்டார், வழக்கம்போல நண்பர்களையும். நண்பர்கள் மறுத்து... மீண்டும் மாலை சந்திப்பதாக கூறி அவர் அவர் இல்லம் சென்றனர்.

வீட்டில் இட்டிலியுடன் அம்மா கடிதத்தையும் கொடுத்தார்... இதை பார் ஏதோ அரசாங்க கடிதம் போலிருக்கிறது என்று. உறையின் முகப்பை பார்த்தவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ”எய்ம் ஹை”, இந்திய விமானப் படையின் தாரக மந்திரத்துடன் வந்திருந்தது அந்த கடிதம்.

விவசாய குடும்பத்தில் பிறந்து அறிவியல் முதுகலை பட்டம் பெற்ற அவனுக்கு, ஊதியத்துடன் முனைவர் படிப்பும்பெற வாய்ப்புடனுள்ள ஒரு வேலைவாய்ப்பிற்க்கான அழைப்பானை அது. ஒரு வாரம் மைசூர் இந்திய விமான பயிற்ச்சி மையத்தில் உடல் மற்றும் அறிவு சோதனை, தேர்ச்சி பெற்றால் ஐந்தாம் நாள் நேர்முக தேர்வு என்றும், சென்று வர செலவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று கூறியது கடிதம்.

முதல் நாள் இரவு தொடர்வண்டி பயணம், மைசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல இந்திய விமானப்படைக்கு சொந்தமான லாரி வந்திருந்தது. மையத்தில் அழைப்பானை சரிபார்க்கப் பட்டு பயிற்சி சீருடைகள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்பட்டது.

முதல் நாள் “டெஸ்ட் ஆஃப் ரீசனிங்”, முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற வடிவங்களின் வரிசை பற்றியும், எண்களின் தொடரமைப்பு பற்றியுமான சோதனை. நெல்லை பார்த்து இது ஐ.ஆர்.எட்டு, டி.கே.எம்.ஒன்பது என்று சொல்லும் ஸ்லம்டாக் விவாசாயிக்கு இது ஒரு பெரிய சோதனையாக இல்லை, மிகச் சுலபமாக கையாண்டான்.

இரண்டாம் நாள் “டெஸ்ட் ஆன் பிஸிகல் பிஃட்னஸ்”, ஓடுதல், தாண்டுதல், கயறு ஏறுதல், வளையத்தில் புகுந்து வருதல் போன்ற சோதனை. வைக்கோல் பிரியை மாங்காய் மரத்தில் கட்டி ஏறிய அனுபவம், கோடை எள் சாகுபடியின் போது கட்டி முட்டியில் ஆடுகளை விரட்டி ஓடிய அனுபவம், வேலிகளின் இடுக்கில் புகுந்து வாழையை அழித்த பன்றிகளை விரட்டிய அனுபவம்... இன்றும் சோதனைகள் சுலபமாக.

மூன்றாம் நாள் “திட்டமிடல், குழு வழி நடத்துதல் மற்றும் குழு ஆளுமை” பற்றிய சோதனை... குறிப்பாக இக்கட்டாண கால கட்டத்தில் ஒருவரின் செயல்பாடு பற்றி கண்டறிய. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை கையில் உள்ள கயிறு மற்றும் மரப் பலகை கொண்டு கரையேற்ற வேண்டும். காவிரிப் படுகையில் வெள்ளத்தில் அறுவடை செய்தவன், மிதக்கும் வெள்ளத்தில் வாழை மரங்களை மிதவையாக்கி, அதன் மீது நெற்கதிர்களை சேர்த்துக்கட்டி களம் சேர்த்த அனுபவம் கை கொடுத்தது… ஸ்லம்டாக் விவசாயிக்கு இன்றும் வெற்றி.

நான்காம் நாள் காலை, முதல் மூன்று நாட்களுக்கான மதிப்பு வெளியீடு, தேர்வு பெற்றவர்களுக்கான “சோசியல் கேதரிங்” - சாப்பட்டு மேசை மற்றும் பழகுதல் பற்றிய சோதனை மற்றும் திறனாய்வு. வங்கி கடன்பெற கூட்டுறவு சங்க அலுவலர் வரும்வரை அருகில் உள்ள நூலகத்தில் அமர்ந்து படித்தன் பயன் இன்றும் கை கொடுத்தது. தெரிவுபெற்ற பத்து பேரில் மூன்றாம் இடத்தில் ஸ்லாம்டாக் விவிசாயி.

ஐந்தாம் நாள், விமான படை உயர் நிலை அதிகாரிகளுடன், கழுத்தில் தொங்கும் கோவணத்துடன் (டை), நேர்முக தேர்வு. ஒரு அதிகாரி அவன் தகுதி மற்றும் மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்தவர் அவன் பின்புலம் என்ன என்று வினவினார்... (ஸ்லம்டாக்) விவசாயம் என்று பெருமையுடன் சொன்னான். இறுதி ஆனை இல்லம் அனுப்பப்படும் என்ற வாசகத்துடன் விடைபெற்றான்... சேற்றில் செந்தாமரை இன்றுவரை முளைக்கவில்லை.

இன்றும் அவன் “எய்ம் ஹை” என்ற தாரக மந்திரம் விவசாயத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உ(ழ)ண்று வாழ்கிறான், ஆனால் வறண்டு போன காவிரியும், காலம் தவிர்த்து பெய்யும் வானமும் இன்றும் அவனுக்கு சோதனை மேல் சோதனையாய்... ”உன் எய்ம் பொய்” என சாதித்துக்கொண்டு இருக்கின்றன.

3 + 5 + 6 + 7 = 19

என்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா? இல்லை... நான் அவன் இல்லை.

தலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.

உற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.

உண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.

இன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆவணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.

3 + 5 + 6 + 7 = 19? இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19

மொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.

என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,