மார்ச், ஏப்ரல், மே மாதம் இந்தியாவில் பரிட்சை மற்றும் விடுமுறை காலம், இங்கு எங்களுக்கு ஸ்ப்ரிங்க் என்னும் வசந்த காலம், கடும் குளிரில் வீட்டில் அடைபட்டு கிடந்த குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதை பார்த்தவுடன் எழுத ஆரம்பித்து விட்டேன்.
ஆக்கப்பூர்வம் - கிரியேட்டிவிட்டி என்பதர்க்காண உரிய தமிழ் வார்த்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆக்கப்பூர்வ படைப்பு/சிந்தனை/கருத்து (கிரியேட்டிவ் ஆர்ட்/திங்கிங்க்/ஐடியா) -க்கு அடித்தளம் சிறந்த கற்பனை திறன், அந்த கற்பனை திறனை (சிறுவர்களிடம் இயற்க்கையாகவே இருக்கும், அதை கண்டு பிடித்து) வளர்க்க நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்.
இங்க நான் எப்படி அந்த ஆக்கப்பூர்வத்த வளர்க்கறது என்பதி பற்றி சொல்ல வரவில்லைங்க... என் சொந்தகதைய சொல்லுரேன் அவ்வளவுதான்.
ஆக்கப்பூர்வத்த உண்டாக்க இப்பவும் அப்பவும் பல விசயங்கள் இருக்கு அத ஒன்னு ஒன்னா சொல்லுரேன்.
இப்ப அத நம்ம இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சம்மர் கேம்ப் அப்படின்னு சொல்லிகிறாங்க... நமக்கு அது கோடை விடுமுறை... எனக்கு அது கோடையில் மாடு மேய்த்தல். அதாங்க நமக்கு சொர்க்கம்... நமக்குள்ள இருக்கிற பல பரிமாணங்கள் அப்பதான் வெளிவரும்.
பிளே டோவ்: வயல்ல அப்பதான் அறுவடை முடிந்து களிமண் நல்ல பதமா இருக்கும்...அதான் எனக்கு பிளே டோவ்... சைக்கிள், கார், பஸ் ஏரோ பிளேன்-ன்னு எல்லாம் செஞ்சு காய வெச்சு இயற்க்கை வண்ணம் பூசி (கரி-கருப்பு, செங்கள்-சிவப்பு, பூலம் பழம்- நீலம்) வாழை மட்டைல நாறு உரித்து, வாய்ல சவுண்டு விட்டு வீட்டுக்கு ஓட்டிகிட்டு போயிடுவேன்.
லெகோ பிளாக்ஸ்: அடடா இந்த பிளாக்ஸ்ல என்ன ஒரு வெரைட்டி இப்போ... மக்கா இப்ப தெரியுதா நான் ஏன் சோகக்கதைன்னு சொன்னேன்னு. என் சம்மர் கேம்ப்ல நான் தேங்கா குரும்பை, நுனா காய், கோவைக்காய் (இப்ப இத சாப்பிடுராங்கடோய்), வேப்பங்காய் இப்படி சிறியதும் பெரியதுமாய் காய்களை ஈர்க்கு (தென்னை மட்டையில் உள்ள ஓலையில் இலையை சீவினால் கிடைக்கும்) குச்சியில் கோர்த்து பூம்புகார் கலைக்கூடம், அண்ணா அறிவாலயம், தாஜ்மஹால் மற்றும் ஈபிள் டவர் (இலங்கை டி.வி ரூபவாகினி-ல பார்த்தது) வரைக்கும் கட்டுவேன்.
ஸ்விம்மிங்க் ஃபுளோட்: வாழை சீஸன் முடிந்து இருந்தால் வாழை கொள்ளையில் வெட்டி போட்ட மரத்தை எடுத்து வந்து ஆத்துலயோ இல்ல குளத்திலயோ போட்டு தம்பட்டம் அடிப்போம். இல்லையா இருக்கவே இருக்கு எருமை மாடு... அது வாலை பிடித்துக் கொண்டே குளத்தில் நீந்தி வருவோம்.
இப்படி நாம் விளையாட்டாய் கற்ற ஒவ்வொன்றும் இன்று வியாபாரமாய்... வேறு என்ன சொல்ல?
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
கத்தி போயி புத்தி வந்தது டும்... டும்... டு... டும்
கத்தி போயி புத்தி வந்தது டும்... டும்... டு... டும்
பிளேடு போயி ஷார்ப்னர் வந்தது டும்... டும்... டு... டும்
ஒரு காரியத்த சிறப்பா செய்து முடிக்க கத்தியும் (சத்தம் போட்டு வேலை வாங்குதல்) உதவி இல்ல, கத்தியாலயும் (ஆயுதம் காட்டி மிரட்டியும்) உதவி இல்ல, உனது புத்தி உதவினால் தான் செய்து முடிக்க முடியும் எனபதை ஒரு சிறிய பழ மொழியில் "கத்திய தீட்டாத புத்திய தீட்டு"-ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.
நாம ரொம்பவே பெரியவங்க பேச்ச கெட்டு நடக்குரோம்ன்னு நினைக்கிறேன்... ஏன்னா இப்ப புத்திய தீட்டி தீட்டி... த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் -னு சொல்லுற மாதிரி ஆயிடுச்சி.
இந்த பென்சில் சீவுர விசயத்த பாருங்களேன்... நம்ம எல்லோருமே இந்த அனுபவத்த பெற்று இருப்போம்ன்னு நினைக்கிறேன்.
பென்சில் சீவ உதவியது...
1. பிளேடு - அப்பா முகச் சவரம் செய்து தூக்கி போட்ட பிளேடு. புதுச எடுக்காத பழச உபயோகப் படுத்துன்னு சிக்கனத்தையும் கூட சொல்லி கொடுத்தது அம்மா (போட்ட) பிளேடு.
2. பென்சில் சீவி (ஷார்ப்னர்) - நம்ம எழுதி கிழித்த கிழியில் சீவி மாளாமல், பிளேடால் சீவும் போது விரலில் ஏற்ப்பட்ட ரணகளத்தால்... ஷார்ப்னர் ஒரு வர ப்ரஸாதம் என்று கூட சொல்லலாம்.(கீழ்கண்ட இரண்டையும் நான் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் பார்த்தது இல்லை, அமெரிக்கா வந்த பிறகு பார்த்தது)
3. இயந்திர பென்சில் சீவி (மெக்கானிகல் ஷார்ப்னர்) - பென்சில அதற்குரிய துவாரத்தில் பொருத்தி, லீவர (காப்பி கொட்டை அறைப்போமே அது மாதிரி) நாலு சுத்து சுத்தி... கூர்மை போதுமான்னு பார்த்து, போதவில்லை என்றால் இன்னும் ரெண்டு சுத்து சுத்தினால் கூர்மை ரெடி.(அது சரி, எழுதி கை வலிப்பது மட்டும் குழந்தைகளுக்கு போதும் என்ற நல்ல மனதோடு இதை கண்டு பிடிச்சி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்)
4. மின்னியல் பென்சில் சீவி (எலக்ட்ரிகல் ஷார்ப்னர்) - இது இயந்திர பென்சில் சீவியை விட ஒரு படி மேலே. பென்சில அதற்குரிய துவாரத்தில் பொருத்தினால் போது அதுவே கூர்மை சரி பார்த்து சீவுவதை நிறுத்தி விடும்... பொருத்து - அழுத்து - எழுது.
த டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட் - உண்மைதான். அதனால் நாம் பெற்றவை எவை? இழந்தவை எவை?
பிளேடு உபயோகிக்கும் போது சிக்கனத்தையும், மறுப்பயன்பாட்டையும் (ரீசைக்கிள்), கவனத்தையும் கற்றுக் கொண்டோம். பென்சில் சீவி (கையால் / இயந்திர) உபயோகிக்கும் போது கைக்கு ஒரு பயிற்ச்சி (எக்ஸர்ஸைஸ்) மற்றும் துல்லியம் (பிரிசிஸன்) கற்றுக் கொண்டோம்.
கடைசியில்...அவசர உலகில், துரித உணவு உண்டு, பென்சில் சீவ கூட கையில் திராணி இல்லாமல், சோம்பேரிகளாக மாறி விட்டோமோ என எண்ணத் தோன்றுகிறது.
அய்யா...த பாஸ்
அய்யா... த பாஸ்
ஜீ.கே.மணி: அய்யா... என்ன இப்படி பொது கூட்டத்துல சிவாஜி படத்துல வர விவேக் மாதிரி சிரிக்கிறீங்க... கூட்டணி பத்தி பேச வரவங்க கோபப் பட போறாங்க.
மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி பத்திரிக்கை காரங்ககிட்ட தி.மு.க-வும் கூப்பிடல அ.தி.மு.க-வும் கூப்பிடலன்னு சொன்ன உடனே உழுந்தடிச்சி ஒடி வருவாங்க...
ஜீ.கே.மணி: வந்தா...
மருத்துவர்: வந்தா... அவங்கள அபீஸ் ரூமுக்கு அனுப்பு... 15 சீட்டு வேணும்... குறிப்பா நமக்கு வட மாவட்டங்கள்தான் வேணும்ன்னு கேட்கனும்.
ஜீ.கே.மணி: (இது எல்லாம் சாத்தியமா சிவாஜி-ன்னு விவேக் கேட்க்குற மாதிரி) அய்யா இது எல்லாம் நடக்கிற காரியமா?
மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி வர தேர்தல்ல அவன் அவன் எத திண்ணா பித்தம் தெளியும்ன்னு இருக்கானுவோ... நாம வைத்தியம் பண்ணிடுவோம்... சீட்டுங்கிற பேருல கூட்டணி கட்சிக்கு ஆப்பு அடிச்சிருவோம்.
பா.ம.க-ன்னா சும்மா பதருதுல்ல...
மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி பத்திரிக்கை காரங்ககிட்ட தி.மு.க-வும் கூப்பிடல அ.தி.மு.க-வும் கூப்பிடலன்னு சொன்ன உடனே உழுந்தடிச்சி ஒடி வருவாங்க...
ஜீ.கே.மணி: வந்தா...
மருத்துவர்: வந்தா... அவங்கள அபீஸ் ரூமுக்கு அனுப்பு... 15 சீட்டு வேணும்... குறிப்பா நமக்கு வட மாவட்டங்கள்தான் வேணும்ன்னு கேட்கனும்.
ஜீ.கே.மணி: (இது எல்லாம் சாத்தியமா சிவாஜி-ன்னு விவேக் கேட்க்குற மாதிரி) அய்யா இது எல்லாம் நடக்கிற காரியமா?
மருத்துவர்: ஹா... ஹா... ஹா... மணி வர தேர்தல்ல அவன் அவன் எத திண்ணா பித்தம் தெளியும்ன்னு இருக்கானுவோ... நாம வைத்தியம் பண்ணிடுவோம்... சீட்டுங்கிற பேருல கூட்டணி கட்சிக்கு ஆப்பு அடிச்சிருவோம்.
பா.ம.க-ன்னா சும்மா பதருதுல்ல...
தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது...
சின்னக் கவுண்டரின் எம்.பி எண் கவுண்டர்
தே.மு.தி.க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க விரும்பும் தி.மு.க அல்லது அ.தி.மு.க - விடம் 15 இடங்கள் கேட்டதற்க்கு, அது ரொம்ப அதிகம் "கூட கேட்கிறார்" என்று சொல்லி பேரம் பேச வந்த கூட்டணி தலைவர்களுடன்...
(கண்கள் சிவக்க புருவம் உயர்த்தி பேசுகிறார் கேப்டன்)
ஏய்... யார பார்த்து கூட கேட்குறேன்னு சொல்றீங்க... தமிலகத்துல இருக்கறது 39 எம்.பி சீட்டு, பாண்டிச்சேரி ஒன்னு மொத்தம் சேர்த்து 40 எம்.பி சீட்டு. அதுல சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், தென்காசி மற்றும் நாகப்பட்டினம்னு 5-ம் தொகுதி தனித் தொகுதி.
தமிலகத்துல அஞ்சி கச்சி பெரிய கச்சி அதுல மூனாவது பெரிய கச்சி எங்க கச்சி, அந்த அஞ்சி பெரிய கச்சிய வச்சு பிரிச்சா அய்யெட்டு நாப்பது. மூனு பெரிய கச்சிக்கும் 8 தொகுதின்னு பிரிச்சா மூவெட்டு 24, பாக்கி 16 சீட்டு. நாங்க கூட்டணி வெக்கப் போரது ஏதாவது ஒரு கச்சி கூடத்தான். அப்படி ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சா ஆளுக்கு எட்டு சீட்டு. தே.மு.தி.க வுக்கு 8 சீட்டு + கூட்டணி தருமத்துக்கு எட்டு சீட்டுனு மொத்தம் பதினாறு சீட்டு.
நான் படத்துல நடிகனா பாக்கிஸ்தான் தீவிரவாதிய அடிக்கும் போதே கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் அடிப்பேன். இப்ப அரசியல்வாதியா இருக்கேன் விட்டுக் கொடுக்காம இருப்பனா? எங்களுக்கு உள்ள 16 சீட்டுல 1 சீட்ட பழம் பெரும் கச்சியான நீங்களே எடுத்துக்கோங்க, எனக்கு 15 போதும்.
எங்களுக்கு கெடச்ச 15-ல நாங்க 10 ஜெயிப்போம் 5 தோப்போம், அதே மாதிரி சீட்டுல ரெண்டு பங்கு வாங்கிட்ட நீங்களும் 10 தொகுதியில் தோப்பீங்க 15 தொகுதியில் ஜெயிப்பீங்க. ஆக நீங்க 15-ல வெற்றி, தே.மு.தி.க 10-ல வெற்றி மொத்தத்துல 25 தொகுதியில் நம்ம கூட்டணி வெற்றி.
இப்ப தனித் தொகுதியில் மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... தொகுதி சீரமைப்புனு மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... அதேதான் கணக்கு. என் கூட கூட்டணி வைக்கிறவங்களுக்கு வெற்றி நிச்சயம்.
ஏய்... யாரப் பார்த்து சொன்னீங்க கூட கேட்குறேன்னு? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது... கூட கேட்கிறது... கூட கேட்கிறது.
தே.மு.தி.க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க விரும்பும் தி.மு.க அல்லது அ.தி.மு.க - விடம் 15 இடங்கள் கேட்டதற்க்கு, அது ரொம்ப அதிகம் "கூட கேட்கிறார்" என்று சொல்லி பேரம் பேச வந்த கூட்டணி தலைவர்களுடன்...
(கண்கள் சிவக்க புருவம் உயர்த்தி பேசுகிறார் கேப்டன்)
ஏய்... யார பார்த்து கூட கேட்குறேன்னு சொல்றீங்க... தமிலகத்துல இருக்கறது 39 எம்.பி சீட்டு, பாண்டிச்சேரி ஒன்னு மொத்தம் சேர்த்து 40 எம்.பி சீட்டு. அதுல சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், தென்காசி மற்றும் நாகப்பட்டினம்னு 5-ம் தொகுதி தனித் தொகுதி.
தமிலகத்துல அஞ்சி கச்சி பெரிய கச்சி அதுல மூனாவது பெரிய கச்சி எங்க கச்சி, அந்த அஞ்சி பெரிய கச்சிய வச்சு பிரிச்சா அய்யெட்டு நாப்பது. மூனு பெரிய கச்சிக்கும் 8 தொகுதின்னு பிரிச்சா மூவெட்டு 24, பாக்கி 16 சீட்டு. நாங்க கூட்டணி வெக்கப் போரது ஏதாவது ஒரு கச்சி கூடத்தான். அப்படி ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சா ஆளுக்கு எட்டு சீட்டு. தே.மு.தி.க வுக்கு 8 சீட்டு + கூட்டணி தருமத்துக்கு எட்டு சீட்டுனு மொத்தம் பதினாறு சீட்டு.
நான் படத்துல நடிகனா பாக்கிஸ்தான் தீவிரவாதிய அடிக்கும் போதே கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் அடிப்பேன். இப்ப அரசியல்வாதியா இருக்கேன் விட்டுக் கொடுக்காம இருப்பனா? எங்களுக்கு உள்ள 16 சீட்டுல 1 சீட்ட பழம் பெரும் கச்சியான நீங்களே எடுத்துக்கோங்க, எனக்கு 15 போதும்.
எங்களுக்கு கெடச்ச 15-ல நாங்க 10 ஜெயிப்போம் 5 தோப்போம், அதே மாதிரி சீட்டுல ரெண்டு பங்கு வாங்கிட்ட நீங்களும் 10 தொகுதியில் தோப்பீங்க 15 தொகுதியில் ஜெயிப்பீங்க. ஆக நீங்க 15-ல வெற்றி, தே.மு.தி.க 10-ல வெற்றி மொத்தத்துல 25 தொகுதியில் நம்ம கூட்டணி வெற்றி.
இப்ப தனித் தொகுதியில் மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... தொகுதி சீரமைப்புனு மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... அதேதான் கணக்கு. என் கூட கூட்டணி வைக்கிறவங்களுக்கு வெற்றி நிச்சயம்.
ஏய்... யாரப் பார்த்து சொன்னீங்க கூட கேட்குறேன்னு? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது... கூட கேட்கிறது... கூட கேட்கிறது.
பதறினால் சிதறிடுவாய்
பதறினால் சிதறிடுவாய், எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா? நம்ம ஊரு லாரியில் பின்னாடி எழுதியிருக்கும். லாரியை கடக்கும் போது நாம ரொம்ப கவனமா பதறாம இருக்கனும்னு சொல்லி இருப்பாங்க. மண்ணு லாரியையும் தண்ணி லாரியையும் பார்த்த பிறகுமா... அது சரி லாரிய ஓட்டிகிட்டு வருவது அவங்க... நாம எப்படி பதறாம இருக்கிறது?
அமெரிக்காவில் எனது நண்பர் அவர் பெயர் லேரி... நம்ம லாரி-ன்னு வைச்சுக்கோங்க. அவர் தன் மனைவி கொஞ்ச நாளா சரியா பேச மாட்டேன்கிறாங்க, சரியா சாப்பிட மாட்டேன் எங்கிறார்கள் என்று பதறி மனைவியை ஒரு குடும்ப நாட்டாமை டாக்டர் (ஃபேமிலி கவுன்சிலிங்) கிட்ட அழைச்சிகிட்டு போனாரு.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நாட்டாமை, லேரியின் மனைவி மிகவும் மன அழுத்தத்துடனும் மன சோர்வுடனும் இருப்பதை விளக்கி கூறி, மன அழுத்தம் போக வேண்டுமானல் லேரியின் மனைவி அவருடைய மன குமுறளை ஏதாவது ஒரு வகையில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று கூறினார்...அதற்கு பெயர் வெண்டிங் த ஃப்ரஸ்ட்ரேஸன் என்று விளக்கினார்.
லேரிக்கும் லேரி மனைவிக்கும் ஒன்றும் புரிய வில்லை... (லேரி மனதிற்க்குள் திட்டிக் கொண்டு இருந்தான் இவதான் நம்மை தினமும் திட்டி தீக்குரா... இன்னும் என்ன என்று யோசிக்க). நாட்டமை நிலைமையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தார்...
உதாரணத்திற்க்கு இத பாருங்க... இது காற்று நிரப்பிய கம்பு... அடித்தால் வலிக்காது... இதால் உங்கள் கணவரை அடிக்கலாம் அல்லது... என்று மேற்கொண்டு பேச முற்பட... இடையில் லேரி சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல... நாட்டமை சொன்னார்... சற்று பொருங்கள் உங்கள் மனைவி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என சொல்ல... லேரியின் மனைவியோ... ஆமாம் நான் அவரை அடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பது உண்டு என்று சொல்ல...
நாட்டாமை லேரியை ஒரு பார்வை பார்த்து விட்டு காற்று நிரப்பிய கம்பை லேரியின் மனைவியிடம் கொடுக்க... லேரி மனைவி தண்ணி லாரி கணக்கா லேரியை வெளுக்க... அடி வாங்கி பதறிய லேரி சிதறிய குரலில் நாட்டாமையை கேட்டான்... நாட்டாமை அடித்தது போதுமா இல்லை நிறுத்திக்கலாமா என்று...
நாட்டமை சொன்னார்... எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை உங்கள் பார்வை நேரம் இன்னும் அரை மணி நேரம் மீதம் இருக்கிறது என்று.
நம்ம ஊர் லாரியின் வசனம் லேரிக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது.
அமெரிக்காவில் எனது நண்பர் அவர் பெயர் லேரி... நம்ம லாரி-ன்னு வைச்சுக்கோங்க. அவர் தன் மனைவி கொஞ்ச நாளா சரியா பேச மாட்டேன்கிறாங்க, சரியா சாப்பிட மாட்டேன் எங்கிறார்கள் என்று பதறி மனைவியை ஒரு குடும்ப நாட்டாமை டாக்டர் (ஃபேமிலி கவுன்சிலிங்) கிட்ட அழைச்சிகிட்டு போனாரு.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நாட்டாமை, லேரியின் மனைவி மிகவும் மன அழுத்தத்துடனும் மன சோர்வுடனும் இருப்பதை விளக்கி கூறி, மன அழுத்தம் போக வேண்டுமானல் லேரியின் மனைவி அவருடைய மன குமுறளை ஏதாவது ஒரு வகையில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று கூறினார்...அதற்கு பெயர் வெண்டிங் த ஃப்ரஸ்ட்ரேஸன் என்று விளக்கினார்.
லேரிக்கும் லேரி மனைவிக்கும் ஒன்றும் புரிய வில்லை... (லேரி மனதிற்க்குள் திட்டிக் கொண்டு இருந்தான் இவதான் நம்மை தினமும் திட்டி தீக்குரா... இன்னும் என்ன என்று யோசிக்க). நாட்டமை நிலைமையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தார்...
உதாரணத்திற்க்கு இத பாருங்க... இது காற்று நிரப்பிய கம்பு... அடித்தால் வலிக்காது... இதால் உங்கள் கணவரை அடிக்கலாம் அல்லது... என்று மேற்கொண்டு பேச முற்பட... இடையில் லேரி சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல... நாட்டமை சொன்னார்... சற்று பொருங்கள் உங்கள் மனைவி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என சொல்ல... லேரியின் மனைவியோ... ஆமாம் நான் அவரை அடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பது உண்டு என்று சொல்ல...
நாட்டாமை லேரியை ஒரு பார்வை பார்த்து விட்டு காற்று நிரப்பிய கம்பை லேரியின் மனைவியிடம் கொடுக்க... லேரி மனைவி தண்ணி லாரி கணக்கா லேரியை வெளுக்க... அடி வாங்கி பதறிய லேரி சிதறிய குரலில் நாட்டாமையை கேட்டான்... நாட்டாமை அடித்தது போதுமா இல்லை நிறுத்திக்கலாமா என்று...
நாட்டமை சொன்னார்... எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை உங்கள் பார்வை நேரம் இன்னும் அரை மணி நேரம் மீதம் இருக்கிறது என்று.
நம்ம ஊர் லாரியின் வசனம் லேரிக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது.
அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா... தோப்புக் கரணம் போடவா...
நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.
தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.
http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html
http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html
படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.
அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.
இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.
இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3
போடவா... தோப்புக் கரணம் போடவா...
நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.
தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.
http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html
http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html
படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.
அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.
இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.
இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3
மொக்கை...
கடவுளே வர வர எதுல ஆராய்ச்சி செய்வது என்ற விவஸ்தையே ( நான் என்ன சொன்னேன்... அவ்வ்வ்வ்வ்) இல்லாமல் போய் விட்டது... பின்ன மொக்கைக்கு ஒரு பதிவு போடுற அளவுக்கு போயிடுச்சில்ல.
சரி இந்த மொக்கை என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அதுதான் இந்த பதிவின் ஆராய்ச்சி. நான் நினைக்கிறேன் இருக்க வேண்டிய ஒரு விசயம் அங்கு இருக்காமலோ அல்லது நடக்க வேண்டிய ஒரு காரியம் அங்க நடக்காமலோ... இப்படி பல ...லோ-க்களை 'கை' விட்டு போதல் என்று சொல்லுவோம்.
உதாரணத்திற்க்கு சில 'கை-களை பார்ப்போம்.
வாயில் பல் இருக்க வேண்டும், அப்படி பல் வாயில் இல்லாவிட்டல் பொக்கை.
பழத்தில் சாறு இருக்க வேண்டும், அப்படி சாறு/சத்து பழத்தில்/பொருளில் இல்லாவிட்டால் சக்கை.
தலையில் முடி இருக்க வேண்டும், அப்படி முடி தலையில் இல்லாவிட்டால் வழுக்கை.
பதிவில் தகவல் இருக்க வேண்டும், அப்படி தகவல் பதிவில் இல்லாவிட்டால் மொக்கை.
சரி பல் போனா வாயில் பொந்து போல இருக்கும் பொ+கை = பொக்கை, பழமோ இல்லை எந்த ஒரு சத்து உள்ள பொருளில் இருந்து சத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால் ச + கை = சக்கை.
அப்ப மொ + கை = மொக்கை, மொ-ன்னா என்ன? தகவல் தொலைந்து போனா தொக்கை என்றோ இல்லை சாரம் இல்லாத தகவல் தக்கை என்றோ அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்ப்பீங்கன்னுதான் அங்க வழுக்கை பத்தியும் போட்டிருக்கேன். அதுக்கு இதுக்கும் சரியா போயிடுச்சி. என்கிட்ட இருப்பது ஒரு கை, அது இப்படி மொக்கை பத்தி பதிவு போடலாம் என்ற நம்பிக்கை.
சரி இந்த மொக்கை என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அதுதான் இந்த பதிவின் ஆராய்ச்சி. நான் நினைக்கிறேன் இருக்க வேண்டிய ஒரு விசயம் அங்கு இருக்காமலோ அல்லது நடக்க வேண்டிய ஒரு காரியம் அங்க நடக்காமலோ... இப்படி பல ...லோ-க்களை 'கை' விட்டு போதல் என்று சொல்லுவோம்.
உதாரணத்திற்க்கு சில 'கை-களை பார்ப்போம்.
வாயில் பல் இருக்க வேண்டும், அப்படி பல் வாயில் இல்லாவிட்டல் பொக்கை.
பழத்தில் சாறு இருக்க வேண்டும், அப்படி சாறு/சத்து பழத்தில்/பொருளில் இல்லாவிட்டால் சக்கை.
தலையில் முடி இருக்க வேண்டும், அப்படி முடி தலையில் இல்லாவிட்டால் வழுக்கை.
பதிவில் தகவல் இருக்க வேண்டும், அப்படி தகவல் பதிவில் இல்லாவிட்டால் மொக்கை.
சரி பல் போனா வாயில் பொந்து போல இருக்கும் பொ+கை = பொக்கை, பழமோ இல்லை எந்த ஒரு சத்து உள்ள பொருளில் இருந்து சத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால் ச + கை = சக்கை.
அப்ப மொ + கை = மொக்கை, மொ-ன்னா என்ன? தகவல் தொலைந்து போனா தொக்கை என்றோ இல்லை சாரம் இல்லாத தகவல் தக்கை என்றோ அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்ப்பீங்கன்னுதான் அங்க வழுக்கை பத்தியும் போட்டிருக்கேன். அதுக்கு இதுக்கும் சரியா போயிடுச்சி. என்கிட்ட இருப்பது ஒரு கை, அது இப்படி மொக்கை பத்தி பதிவு போடலாம் என்ற நம்பிக்கை.
Subscribe to:
Posts (Atom)