தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது...

சின்னக் கவுண்டரின் எம்.பி எண் கவுண்டர்

தே.மு.தி.க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க விரும்பும் தி.மு.க அல்லது அ.தி.மு.க - விடம் 15 இடங்கள் கேட்டதற்க்கு, அது ரொம்ப அதிகம் "கூட கேட்கிறார்" என்று சொல்லி பேரம் பேச வந்த கூட்டணி தலைவர்களுடன்...

(கண்கள் சிவக்க புருவம் உயர்த்தி பேசுகிறார் கேப்டன்)

ஏய்... யார பார்த்து கூட கேட்குறேன்னு சொல்றீங்க... தமிலகத்துல இருக்கறது 39 எம்.பி சீட்டு, பாண்டிச்சேரி ஒன்னு மொத்தம் சேர்த்து 40 எம்.பி சீட்டு. அதுல சிதம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், தென்காசி மற்றும் நாகப்பட்டினம்னு 5-ம் தொகுதி தனித் தொகுதி.

தமிலகத்துல அஞ்சி கச்சி பெரிய கச்சி அதுல மூனாவது பெரிய கச்சி எங்க கச்சி, அந்த அஞ்சி பெரிய கச்சிய வச்சு பிரிச்சா அய்யெட்டு நாப்பது. மூனு பெரிய கச்சிக்கும் 8 தொகுதின்னு பிரிச்சா மூவெட்டு 24, பாக்கி 16 சீட்டு. நாங்க கூட்டணி வெக்கப் போரது ஏதாவது ஒரு கச்சி கூடத்தான். அப்படி ரெண்டு பேருக்கும் சமமா பிரிச்சா ஆளுக்கு எட்டு சீட்டு. தே.மு.தி.க வுக்கு 8 சீட்டு + கூட்டணி தருமத்துக்கு எட்டு சீட்டுனு மொத்தம் பதினாறு சீட்டு.

நான் படத்துல நடிகனா பாக்கிஸ்தான் தீவிரவாதிய அடிக்கும் போதே கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் அடிப்பேன். இப்ப அரசியல்வாதியா இருக்கேன் விட்டுக் கொடுக்காம இருப்பனா? எங்களுக்கு உள்ள 16 சீட்டுல 1 சீட்ட பழம் பெரும் கச்சியான நீங்களே எடுத்துக்கோங்க, எனக்கு 15 போதும்.

எங்களுக்கு கெடச்ச 15-ல நாங்க 10 ஜெயிப்போம் 5 தோப்போம், அதே மாதிரி சீட்டுல ரெண்டு பங்கு வாங்கிட்ட நீங்களும் 10 தொகுதியில் தோப்பீங்க 15 தொகுதியில் ஜெயிப்பீங்க. ஆக நீங்க 15-ல வெற்றி, தே.மு.தி.க 10-ல வெற்றி மொத்தத்துல 25 தொகுதியில் நம்ம கூட்டணி வெற்றி.

இப்ப தனித் தொகுதியில் மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... தொகுதி சீரமைப்புனு மாற்றம் செஞ்சி இருந்தாலும் சரி... அதேதான் கணக்கு. என் கூட கூட்டணி வைக்கிறவங்களுக்கு வெற்றி நிச்சயம்.

ஏய்... யாரப் பார்த்து சொன்னீங்க கூட கேட்குறேன்னு? தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை கூட கேட்கிறது... கூட கேட்கிறது... கூட கேட்கிறது.

பதறினால் சிதறிடுவாய்

பதறினால் சிதறிடுவாய், எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கா? நம்ம ஊரு லாரியில் பின்னாடி எழுதியிருக்கும். லாரியை கடக்கும் போது நாம ரொம்ப கவனமா பதறாம இருக்கனும்னு சொல்லி இருப்பாங்க. மண்ணு லாரியையும் தண்ணி லாரியையும் பார்த்த பிறகுமா... அது சரி லாரிய ஓட்டிகிட்டு வருவது அவங்க... நாம எப்படி பதறாம இருக்கிறது?

அமெரிக்காவில் எனது நண்பர் அவர் பெயர் லேரி... நம்ம லாரி-ன்னு வைச்சுக்கோங்க. அவர் தன் மனைவி கொஞ்ச நாளா சரியா பேச மாட்டேன்கிறாங்க, சரியா சாப்பிட மாட்டேன் எங்கிறார்கள் என்று பதறி மனைவியை ஒரு குடும்ப நாட்டாமை டாக்டர் (ஃபேமிலி கவுன்சிலிங்) கிட்ட அழைச்சிகிட்டு போனாரு.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நாட்டாமை, லேரியின் மனைவி மிகவும் மன அழுத்தத்துடனும் மன சோர்வுடனும் இருப்பதை விளக்கி கூறி, மன அழுத்தம் போக வேண்டுமானல் லேரியின் மனைவி அவருடைய மன குமுறளை ஏதாவது ஒரு வகையில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று கூறினார்...அதற்கு பெயர் வெண்டிங் த ஃப்ரஸ்ட்ரேஸன் என்று விளக்கினார்.

லேரிக்கும் லேரி மனைவிக்கும் ஒன்றும் புரிய வில்லை... (லேரி மனதிற்க்குள் திட்டிக் கொண்டு இருந்தான் இவதான் நம்மை தினமும் திட்டி தீக்குரா... இன்னும் என்ன என்று யோசிக்க). நாட்டமை நிலைமையை புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தார்...

உதாரணத்திற்க்கு இத பாருங்க... இது காற்று நிரப்பிய கம்பு... அடித்தால் வலிக்காது... இதால் உங்கள் கணவரை அடிக்கலாம் அல்லது... என்று மேற்கொண்டு பேச முற்பட... இடையில் லேரி சுதாரித்து கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்ல... நாட்டமை சொன்னார்... சற்று பொருங்கள் உங்கள் மனைவி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என சொல்ல... லேரியின் மனைவியோ... ஆமாம் நான் அவரை அடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பது உண்டு என்று சொல்ல...

நாட்டாமை லேரியை ஒரு பார்வை பார்த்து விட்டு காற்று நிரப்பிய கம்பை லேரியின் மனைவியிடம் கொடுக்க... லேரி மனைவி தண்ணி லாரி கணக்கா லேரியை வெளுக்க... அடி வாங்கி பதறிய லேரி சிதறிய குரலில் நாட்டாமையை கேட்டான்... நாட்டாமை அடித்தது போதுமா இல்லை நிறுத்திக்கலாமா என்று...

நாட்டமை சொன்னார்... எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை உங்கள் பார்வை நேரம் இன்னும் அரை மணி நேரம் மீதம் இருக்கிறது என்று.

நம்ம ஊர் லாரியின் வசனம் லேரிக்கு ரொம்ப பொருத்தமா இருந்தது.

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா... தோப்புக் கரணம் போடவா...

நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.

தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html

படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.

அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.

இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.

இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3

மொக்கை...

கடவுளே வர வர எதுல ஆராய்ச்சி செய்வது என்ற விவஸ்தையே ( நான் என்ன சொன்னேன்... அவ்வ்வ்வ்வ்) இல்லாமல் போய் விட்டது... பின்ன மொக்கைக்கு ஒரு பதிவு போடுற அளவுக்கு போயிடுச்சில்ல.

சரி இந்த மொக்கை என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அதுதான் இந்த பதிவின் ஆராய்ச்சி. நான் நினைக்கிறேன் இருக்க வேண்டிய ஒரு விசயம் அங்கு இருக்காமலோ அல்லது நடக்க வேண்டிய ஒரு காரியம் அங்க நடக்காமலோ... இப்படி பல ...லோ-க்களை 'கை' விட்டு போதல் என்று சொல்லுவோம்.

உதாரணத்திற்க்கு சில 'கை-களை பார்ப்போம்.

வாயில் பல் இருக்க வேண்டும், அப்படி பல் வாயில் இல்லாவிட்டல் பொக்கை.

பழத்தில் சாறு இருக்க வேண்டும், அப்படி சாறு/சத்து பழத்தில்/பொருளில் இல்லாவிட்டால் சக்கை.

தலையில் முடி இருக்க வேண்டும், அப்படி முடி தலையில் இல்லாவிட்டால் வழுக்கை.

பதிவில் தகவல் இருக்க வேண்டும், அப்படி தகவல் பதிவில் இல்லாவிட்டால் மொக்கை.

சரி பல் போனா வாயில் பொந்து போல இருக்கும் பொ+கை = பொக்கை, பழமோ இல்லை எந்த ஒரு சத்து உள்ள பொருளில் இருந்து சத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால் ச + கை = சக்கை.

அப்ப மொ + கை = மொக்கை, மொ-ன்னா என்ன? தகவல் தொலைந்து போனா தொக்கை என்றோ இல்லை சாரம் இல்லாத தகவல் தக்கை என்றோ அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்ப்பீங்கன்னுதான் அங்க வழுக்கை பத்தியும் போட்டிருக்கேன். அதுக்கு இதுக்கும் சரியா போயிடுச்சி. என்கிட்ட இருப்பது ஒரு கை, அது இப்படி மொக்கை பத்தி பதிவு போடலாம் என்ற நம்பிக்கை.

நான் பிச்சைக்காரன்...

பயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...

அய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...

ஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து "கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா? தருமமா?

அய்யா... பிச்சை எடுக்கும் போது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.

யார் கடவுள்?
இயக்குநர் கடவுளா?? இல்ல...
படத்தோட கதை கடவுளா???

இல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்

தே பா ச...

2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.

ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் ட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.

தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் ரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் ரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.

ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?

என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.

தி.மு.க-வின் கைப்புள்ள...

மத்திய அமைச்சர் ராசா என்னா சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? மருத்துவர் ராமதாசு பேசுவது "திண்ணையை பிடிக்கும் முயற்ச்சியே, திண்ணிய முயற்ச்சி இல்லை".

ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?

சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.

ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்