அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே

அப்பனே... அப்பனே பிள்ளையார் அப்பனே
போடவா... தோப்புக் கரணம் போடவா...

நான் பாட்டு பாட வரலீங்க, தோப்பு கரணம் சம்பந்தமா ஒரு சுவையான தகவல்... இப்ப இது கொசுரு தான். தொடு உணர்வு சம்பந்தமா பல ஆராய்ச்சி, காது ஏன் குத்துரோம் மூக்கு ஏன் குத்துரோம்... ஃபிஸியோ தெராபிஸ்ட் கைரோ பிரக்டிஸ், அக்கு பஞ்சர் அப்படி இப்படி..., சரி சரி பட்டியல நிறுத்திட்டு பட்டுன்னு மேட்டருக்கு வரேன்.

தோப்புக் கரணம் பற்றிய எனது முதல் பதிவ கொஞ்சம் போயி படிச்சிட்டு வாங்க, சிந்திக்கிர மேட்டருக்கு முன்னாடி சிரிப்பு மேட்டர்.

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_8580.html

http://arasooraan.blogspot.com/2007/03/blog-post_1541.html

படிச்சிங்களா... அதுல என்னவோ குறையுதுள்ள? சிரிக்கிர மேட்டரா அது சிந்திக்கிர மேட்டர், அது என்னவென்று கண்டு புடிச்சிட்டேன்.

அந்த காலத்தில் படிப்பு வரவில்லை என்றால் ஆசிரியர் தோப்புக் கரணம் போட சொல்லி இருக்கிறார்கள். தோப்பு கரணம் போடுடா அப்ப-வாவது புத்தி வருதான்னு பார்ப்போம்னு சொல்லி... அதோட மகிமை தெரிஞ்சி.

இப்ப யாரவது வாத்தியார் (பின்ன... முன்ன மாதிரி யாரு ஆசிரியர் இல்ல அய்யான்னு கூப்பிடுறாங்க... யோவ் வாத்தி-ங்கிறான் இல்ல ங்கொய்யா-ங்கிறான்) தோப்புக் கரணம் போடுன்னா அது இப்ப பனிஷ்மெண்ட் ஆயிடுச்சி... தோப்புக் கரணம் போட்ட பையனுக்கு புத்தி வருதோ இல்லியோ, போட சொன்ன வாத்தியாருக்கு பையனோட அப்பா கிட்ட இருந்து ஆப்பு வரும்.

இந்த வலை இணைப்பை சொடுக்கி பாருங்க உண்மை தெரியும். என்னுடன் கீதை படிக்கும் குழுவில் உள்ள ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்... அவருக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

என்னங்க பார்த்தீங்களா? படிச்சா போதாது... அப்படியே எழுந்து ஒரு 50 போடுங்க... 1,2,3

மொக்கை...

கடவுளே வர வர எதுல ஆராய்ச்சி செய்வது என்ற விவஸ்தையே ( நான் என்ன சொன்னேன்... அவ்வ்வ்வ்வ்) இல்லாமல் போய் விட்டது... பின்ன மொக்கைக்கு ஒரு பதிவு போடுற அளவுக்கு போயிடுச்சில்ல.

சரி இந்த மொக்கை என்ற சொல் எப்படி வந்திருக்கும்? ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அதுதான் இந்த பதிவின் ஆராய்ச்சி. நான் நினைக்கிறேன் இருக்க வேண்டிய ஒரு விசயம் அங்கு இருக்காமலோ அல்லது நடக்க வேண்டிய ஒரு காரியம் அங்க நடக்காமலோ... இப்படி பல ...லோ-க்களை 'கை' விட்டு போதல் என்று சொல்லுவோம்.

உதாரணத்திற்க்கு சில 'கை-களை பார்ப்போம்.

வாயில் பல் இருக்க வேண்டும், அப்படி பல் வாயில் இல்லாவிட்டல் பொக்கை.

பழத்தில் சாறு இருக்க வேண்டும், அப்படி சாறு/சத்து பழத்தில்/பொருளில் இல்லாவிட்டால் சக்கை.

தலையில் முடி இருக்க வேண்டும், அப்படி முடி தலையில் இல்லாவிட்டால் வழுக்கை.

பதிவில் தகவல் இருக்க வேண்டும், அப்படி தகவல் பதிவில் இல்லாவிட்டால் மொக்கை.

சரி பல் போனா வாயில் பொந்து போல இருக்கும் பொ+கை = பொக்கை, பழமோ இல்லை எந்த ஒரு சத்து உள்ள பொருளில் இருந்து சத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால் ச + கை = சக்கை.

அப்ப மொ + கை = மொக்கை, மொ-ன்னா என்ன? தகவல் தொலைந்து போனா தொக்கை என்றோ இல்லை சாரம் இல்லாத தகவல் தக்கை என்றோ அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?

இப்படி ஏதாவது ஏடா கூடமா கேட்ப்பீங்கன்னுதான் அங்க வழுக்கை பத்தியும் போட்டிருக்கேன். அதுக்கு இதுக்கும் சரியா போயிடுச்சி. என்கிட்ட இருப்பது ஒரு கை, அது இப்படி மொக்கை பத்தி பதிவு போடலாம் என்ற நம்பிக்கை.

நான் பிச்சைக்காரன்...

பயப்படாதீங்க, நான் இத படிக்க வந்த உங்க கிட்ட பிச்சை கேட்களீங்க, நான் கடவுள்-னு ஒரு படம் எடுத்தாரே இயக்குநர் பாலா அவர்கிட்ட கேட்கிறேன்...

அய்யா... சாமி... பாலா... தயவு செய்து இப்படி கொல்லாதீங்க அய்யா... ஆசைபட்டு படம் பார்க்க வந்த எங்கள ஏன் சாமி இந்த பாடு படுத்துறீங்க... நாங்க என்ன சாமி குத்தம் செஞ்சோம்...

ஏதோ பாலா படத்துல கொஞ்சம் நகைச்சுவை இருக்கும் என்பதை மறக்காமல், பிச்சை எடுக்கும் போது அப்ப அப்ப பழைய சோத்துக்கு நடுவே சுடு சோறு கிடைக்குமே அதே மாதிரி, அங்க அங்க வரும் அந்த குள்ளர்களின் வசனமும், எம்.ஜி.ஆர் வேடத்தில் வருபவர் சிவாஜி வேடத்தில் உள்ளவரை பார்த்து "கணேசா எவன் எவனோ நடிகன்னு வந்து கொல்ராம்பா... நீ கொஞ்சம் நடிப்ப சொல்லி கொடுத்துவிட்டு போயிருக்க கூடாதா"-னு கேட்பார்... சிரிக்கும் படியாக இருந்தது.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்து... அடடா ஒரு படத்திற்க்கு இயக்குநர் தான் கதாநாயகன்-னு மீண்டும் நிருபித்து இருக்கான்னு நினைச்சு சந்தோஷப் பட்டேன்... அத நீங்க காலி பண்ணிப்புட்டீங்களே சாமி... இது நியாயமா? தருமமா?

அய்யா... பிச்சை எடுக்கும் போது தருமம் பண்ணுங்க சாமின்னு கேட்ப்பாங்க... நானும் அதான் கேட்கிரேன்... காசு கொடுத்து சினிமா பார்க்க வர எங்கள தயவு செய்து பல்ல பிடிச்சி பதம் பார்க்காம... மக்களின் ரசனை என்கிற பல்ஸை பார்த்து படம் பண்ணுங்க சாமி.

யார் கடவுள்?
இயக்குநர் கடவுளா?? இல்ல...
படத்தோட கதை கடவுளா???

இல்லீங்க இந்த கருமத்த எல்லாம் காசு கொடுத்து படம் பார்க்கிற நம்ம தாங்க கடவுள்

தே பா ச...

2002 இந்திய அரசை பாரதிய ஜனதா பார்டி ஆட்சி செய்தபோது தேசிய நலனை கருத்தில் கோண்டு கொண்டுவரப் பட்ட சட்டம் (பொடா-PoTA) தே.பா.ச என்கிற தேசிய பாதுகாப்புச் சட்டம்.

ஆனா அது தேசியத்த பாதுகாத்ததை விட பல அரசியல் தேராவெட்டிகளை பாதுகாத்ததுதான் அதிகம். ஒரு கால கட்டத்துல வடக்கு முதல் தெற்க்கு வரை அது அரசியல் வாதிகளின் மீது தேடி பாயும் ட்டம் ஆக இருந்ததுன்னே சொல்லல்லாம்.

தமிழகத்துல நம்ம அ.இ.அ.தி.மு.க கொ.ப.செ (அட செல்வி ஜெயலலிதாங்க) அந்த தே.பா.ச-வ நம்ம வைக்கோ மேல போட்டாங்க... என்ன ஆச்சு? அண்ணன் மு.க தம்பி மீது சுமத்தப் பட்டுள்ள அவதூருகளை தேடி பார்த்தோம் ரியில்லை... அவரு வைக்கோ இல்ல சைக்கோ-ன்னு சொல்லிட்டாரு.

அப்புறம் பழ. நெடுமாறன் மேல, அவர் மேல இவர் மேலன்னு இப்ப இயக்குனர் சீமான் வரைக்கும் வந்து நிக்குது... தேடி பார்த்தோம் ரியில்லை என்று சொல்லி விடுவார்கள்.

ஆமாம் நீங்க இந்த பதிவுல என்னத்த தேடுறீங்க? மெஸேஜா? நையாண்டியா?

என்ன நக்கலா? பதிவோட தலைப்ப பாருங்க... மு.க சொன்னதையேதான் நானும் சொல்றேன். தே.பா.ச-ன்னா தேடி பார்த்தோம் சரியில்ல.

தி.மு.க-வின் கைப்புள்ள...

மத்திய அமைச்சர் ராசா என்னா சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? மருத்துவர் ராமதாசு பேசுவது "திண்ணையை பிடிக்கும் முயற்ச்சியே, திண்ணிய முயற்ச்சி இல்லை".

ஆஹா கலைஞ்சர் வீட்டு கட்டுத்தறி இசை அமைக்குதா இல்ல? கனிமொழி வீட்டு கட்டில் கவி பாடுதான்னு தெரியலயே?

சரி யார் சொல்லி கொடுத்து சொன்னா நமக்கு என்ன... எதுகை மோனையோட படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா எனக்கு ஒன்னு நல்லா தெரியும், அமைச்சர் ராசா இப்படியே பேசிகிட்டு இருந்தார்ன்னா மரம் வெட்டி மருத்துவர் அய்யாவோட ஆளுங்க திண்ணிய முயற்ச்சி பண்ணி ராசாவோட மெண்ணிய பிடிப்பது உறுதி.

ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி இப்பதான் தாத்தா தயாநிதி கூட சேர்ந்து உனக்கு ஒரு ஆப்பு வெச்சாரு, நீ இத சொன்னதுக்கும் ராசா நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு நாளைக்கே மா.வெ.ம.அ கூட கூட்டணி வெச்சுடுவாரு, வெச்சதுக்கு பரிகாரமா உன் தொகுதிய பா.மா.க-வுக்கு விட்டு கொடுத்திடுவாரு... பார்த்து பேசுப்பா... மத்திய அமைச்சர் பதவி, பிறகு தொகுதி... அவ்வ்வ்வ்வ்வ்

கோடீஸ்வர சேரிநாய்

என்ன கொடுமை சார் இது? நீங்க இந்த பதிவோட தலைப்ப சொல்லுறீங்க... நான் எனக்கு தெரிஞ்ச தமிழ்ல ஸ்லம்டாக் மில்லினியர் படத்தோட பேர மொழி பெயர்த்தா அப்படிதாங்க வருது அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?

ஏங்க நான் தெரியாமதான் கேட்குறேன் இந்த படத்துக்கு கோடீஸ்வர சேரிபையன்-ன்னு அதாங்க ஸ்லம்பாய் மில்லினியர்-னு வெச்சிருந்தா இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். நீங்க என்னா நினக்கிறீங்க?

எனக்கு என்னவோ டைரக்டர் டேனி பாயலுக்கோ அல்லது ரைட்டர் சைமன் பியூபாய்க்கோ தங்கபூமி விருது குழு-வில் யாரையாவது தெரிஞ்சிருக்கனும்ன்னு நினைக்கிறேன். விஹாஸ் ஸ்வரூப்-பின் மூலக் கதை, லவ்லீன் டேண்டனின் திரைக்கதை - சும்மா சொல்ல கூடாது மூன்று டிராக் கதை (ஹூ.வா.மி நிகழ்ச்சி - இண்ட் ராகேஸன் - பழைய சம்பவம்) ஒருங்கிணைப்பு அருமை... பாராட்டலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக அருமை. இளையராஜா இசைக்கு ஈஸ்வரன் என்றால், இவர் கோடீஸ்வரன்.

கௌவுதம் மேனன் மட்டும் வாரணமாயிரம் படத்துக்கு ஆங்கில பேரு வெச்சிருந்தா நிச்சயம் ஆஸ்கர் கிடைச்சிருக்கும். என்னடா இப்படி சொல்லுரனேன்னு நினைக்காதீங்க என்கிட்ட இருக்கு காரணமாயிரம். மக்கா படம் முழுவதும் ஒரே இங்கிலீஸுதான்.

சரி விடுங்க... இதுக்காக வடக்கு வாழ்கிறது தெற்க்கு தேய்கிறதுன்னு நினைக்காதீங்க. எப்ப ஒரு ஹிந்தி படம் தங்க பூமி விருது வாங்கினுதோ அது மணி ஓசை (வரும் முன்னே) யானை-யா (வரும் பின்னே) அடுத்தது ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருது வாங்கப் போவது நிச்சயம் - அதுவரை காத்திருப்போம்.

ஆந்திரா காரனுக்கு புத்தி லட்டு

ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு... அது பழ மொழி, நம்ம தலைப்பு தாங்க இப்ப புது மொழி.

கொல்டி - இது தெலுங்கு என்கிற வார்த்தையின் உல்டா என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் உல்டா (புரட்டி) போடுவதில் வல்லவர்கள் என்பதற்க்கு பல விசயங்கள் உள்ளது. படிக்காமலே பட்டம் வாங்குதல், கணணி மொழியில் அனுபவமில்லாததில் ஐந்து முதல் பத்து வருடங்கள் அனுபவம் என்று ரெஸ்யூம் தயார் செய்தல் இப்படி பல...

அந்த கொல்டி மகுடத்தில் இபோது ஒரு வைர கல்லை பதித்து இருக்கிறார் சத்யம் ராமலிங்க ராஜூ... (SATYAM) உண்மை-யை உல்டா பண்ணி (MAYTAS) மேடாஸ் என்று... பின்ன அவரும் கொல்டிதானே.

நண்பர் சொன்னார் ஒரு புது மொழி...

ஆமை புகுந்த வீடும் ஆந்திரா காரன் புகுந்த கம்பெனியும் உருப்படாது.

ஆந்திராவில் ஸ்டியரிங்கோ, கரண்டியோ பிடித்தவன், மற்றும் ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தையில் இருந்து எல்லாம் இங்க வந்து கணிப்பொறி எஞ்ஜினியராக வேலை செய்கிறார்கள் என்று.

நம்ம கொல்டி நண்பர் என்ன சொல்ரார்ன்னு கேளுங்க...

கொல்டி: விடுங்க சார்... எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?

அங்க கார் டிரைவர்... இங்க ப்ராஸஸ் டிரைவர்

அங்க கோங்குராவ குக் பண்ணுனோம்... இங்க (COBOL) கோபால் கோட குக் பண்ணுரோம்.

ராமலிங்க ராஜூ ஊரு உழவர் சந்தை என்ன சார், டெலிவுட்ல மார்கெட் போன லைட் பாய்லேருந்து டைரக்டர் வரைக்கும் இங்க இருக்கோம் சார்.

சார்... இங்க கோடு எழுதர கூட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பி வந்த சில நக்சல்பாரிகள் கூட இருக்காங்க... ரொம்ப பேசுனீங்க... சம்பேஸ்தானு.

சார் இக்கட ரா சார்... உங்களுக்கு SAP தெரியுமா சார்?

நானும் சொன்னேன் அது ஒரு இ.ஆர்.பி, அது இதுன்னு.

கொல்டி: சார் தெரியிலன்னா தெரியலன்னு சொல்லு சார். SAP-ன்னா Software for Andra Pradesh-ன்னு

இப்ப சொல்லுங்க இந்த இடுக்கையின் தலைப்பு சரிதானே?

கொல்டி சொல்லுரது இருக்கட்டும் நம்ம சூப்பர் ஸ்டார் என்ன சொல்ரானுன்னு கேளுங்க

ஆ... ஹா... ஹா...
கண்ணா... நான் சொல்ரேன் நல்லா கேட்டுக்கோ...
மண்ணோட மணமும்...
மனுஷனோட குணமும்...
மாறவே மாறாது...

ஆ... ஹா... ஹா...
அது ஆந்திராவா இருந்தாலும் சரி
அமெரிக்காவா இருந்தாலும் சரி..

ஆ... ஹா... ஹா...
கண்ணா... ஆந்திராகாரன் அறிவ வெச்சு வேலை செய்ரவன்...
நான் தமிழன்...
அறிஞர் அண்ணா சொன்ன பகுத்தறிவ வெச்சு வேலை செய்ரவன்...

ஆ... ஹா... ஹா...
கண்ணா... அறிவு பெருசா இல்ல
பகுத்தறிவு பெருசான்னு கூட்டி கழிச்சி பாரு...
கணக்கு கரக்டா வரும்... ஆ... ஹா... ஹா...

எளே யாருளே அது முழிக்கிறது... அறிவு மூணு எழுத்துலே... எளே பகுத்தறிவு அஞ்சுல்லே... பின்னே பெருசுதானே...