நானும் மாயவரம்- தாங்கோ

ஹேய்...யாருடா நீ பருப்பு?
மனசுல என்னா நெனப்பு?
மும்தாஜ் இடுப்பாடா அடுப்பு?
மத்தத பாத்தியா என்ன எடுப்பு?
நீ ஏத்தாத எனக்கு வெறுப்பு
"வீரா"வுக்கு வந்துடும் கடுப்பு.

செட்டு போட்டு எடுத்தா தான் அது படம்
பிட்டு போட்டு(அடிச்சி) பாஸ் பண்ணுனா அது பாடம்
சாமியாரு இருந்தா அது மடம்
மாமியாரு இருந்தா அது மாடம்
அடுக்கு மொழி பேசுனா அது டி.யா.ரு
என்ன கேக்க நீ யாரு?


ஆட்டோ ஷோ... (மிச்சிகனில்)

நான் பார்க்க போனேன் காடி
சுத்தி பார்த்தேன் தேடி
ரொம்ப புடிச்சது ஆடி
காரணம் அதோட பாடி
விலைய பார்த்தா...ஆத்தாடி
வீட்டுக்கு வந்துட்டேன்... ஓட்டமாய் ஓடி

தண்டனை...

கனவு கை கூடவில்லை - என் பெற்றோருக்கு,
காதலியுடன் என் கல்யாணம்

கால் காசு செலவில்லை - என் பெற்றோருக்கு,
காலையில் பதிவு திருமணம்

காலில் விழுந்து ஆசிபெற வழியில்லை - எங்களுக்கு,
காலம் கணிந்துவர காத்திருக்கிறோம்.

No comments: