நான் தலைப்பை பற்றி பெரிதாக அல்லது புதிதாக ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. அது உலகமறிந்த விசயம். அமெரிக்காவின் முதல் குடிமகனை நீங்கள் அவர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் முன்பு நின்று திட்டலாம். அடியாலுடன் ஆட்டோ வராது.
நான் சொல்ல வந்தது இப்போது என்.பி.சி தொலைகாட்சியில் நடக்கும் "டாக் ஷோ"-வின் பேச்சு சுதந்திரம். இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும் "கேளிக்கை பேச்சு" நிகழ்ச்சிகளில் ஜே லெனோ மற்றும் கேனன் ஓ பிரையன் என்பவரின் நிகழ்ச்சிகள் பிரபலமான ஒன்று. நிகழ்ச்சியின் தரவரிசை அது இது என்று கேனன் ஓ பிரையன் நிகழ்ச்சி ஒரு வழியாக இந்த வாரத்துடன் முடிவடைகிறது.
இது நிச்சயம் மற்ற போட்டியாளர்களான பாஃக்ஸ் & சி.பி.எஸ்-க்கு மகிழ்ச்சி. என்.பி.சி-யையும் டாக் ஷோ நடத்துவர்களையும் விட்டு கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். நம்ம ஊருல நடக்கிற அதே கூத்துதான் (கலக்குறதுக்கு கரண்டி போதும், அசத்துரதுக்கு ஆள் வேணும்னு நக்கலடிக்கிற மாதிரி).
தான் வெளியேற்றப்படப்போவது உறுதியானதும் கேனன் ஓ பிரையன் அடிச்ச கூத்துதான் நான் குறிப்பிட வந்த விசயம். அமெரிக்காவின் பேச்சு சுதந்திரத்தின் தற்போதைய உச்சத்தை தொட்ட விசயம். கே.ஓ.பி தன் நிகழ்ச்சியில் என்.பி.சி பற்றியும், அதன் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பற்றியும் போட்ட போடு இருக்கே... இங்கு பதிவில் சொல்ல முடியா வார்த்தைகள். உதாரணத்திற்க்கு. என்.பி.சி என்றால்... நத்திங்க் பட் கு...( நீங்களே போட்டுகோங்க, தமிழ்ல ரைமிங்கா வரும்)-ன்னு சொன்னார். இவ்வளவுக்கும் என்.பி.சி அவருக்கு கொடுக்கும் தொகை (குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள) 45 மில்லியன் அமெரிக்க டாலர்.
நம்ம ஊர நினைச்சி பார்த்தேன். கன் டி.வி-ல ஹோஸ்ட் பண்ணும் போது சலா நிதிய சும்மா பேர மட்டும் மாத்தி காலாவதி-ன்னு சொல்ல முடியுமா? ஹோஸ்ட் அப்புறம் பேஸ்ட் ஆயிடுவாரு.
கே.ஓ.பி முதல் நாள் கெட்ட வார்த்தைல பேசினார். உடனே இரண்டாம் நாள் வந்து என்னை என்.பி.சி வக்கீல் பேசகூடாதுன்னு சொல்லிட்டார் அதனால நான் பாடப்போரேன்னு கெட்ட வார்த்தைல பாடுனார். மூன்றாம் நாள் வந்து வடை போச்சே...பேசவும் பாடவும் கூடாதாம் என்ன பண்ணுரது... சரி ஆங்கிலத்துல பேச பாடகூடாது... ஆனா நான் ஸ்பேனிஸ்ல திட்டுவனேன்னு மனுசன் திட்ட ஆரம்பிச்சுட்டார் (ஆங்கில சப் டைடிலோட).
சொந்த காசுல சூனியம் வெச்சுகிறது எப்படின்னு என்.பி.சிய பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நாற்பத்து ஐந்து மில்லியன கொடுத்து நாக்கை பிடிங்கி கொள்ளவது மாதிரி நாளுக்கு நாள் நாலு கேள்வியவேற கேட்டுக்க வேண்டியதாகிவிட்டது.
கேனன் ஓ பிரையன் நிகழ்சிகளைகாண இங்கே சொடுக்குங்கள்...
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
இஷா - இரண்டாம் சுற்று வாக்குப் பதிவு
அன்பர்களே... இது ஒரு நல்ல காரியத்திற்க்காண நிதி திரட்டும் முயற்ச்சி. உங்களால் ஒரு ஓட்டு...
நண்பர்களால் ஒரு ஓட்டு...
சேஸ் வங்கி கொடுக்கபோகுது நோட்டு...
Vote For Isha
and Spread the Word!!!
Round 2 of Voting for Chase Community program has started.
You can now vote for Isha on Facebook until January 22nd. But don't wait!
Vote NOW then inform your family and friends about this opportunity to make a difference for thousands of people in Rural India and America.
VOTE FOR ISHA NOW!
http://www.ishafoundation.org/mailmarketer/link.php?M=53125&N=86&L=192&F=H
For More Information Visit
www.ishafoundation.org/vote
"How deeply you touch another life
is how rich your life is" - Sadhguru
நண்பர்களால் ஒரு ஓட்டு...
சேஸ் வங்கி கொடுக்கபோகுது நோட்டு...
Vote For Isha
and Spread the Word!!!
Round 2 of Voting for Chase Community program has started.
You can now vote for Isha on Facebook until January 22nd. But don't wait!
Vote NOW then inform your family and friends about this opportunity to make a difference for thousands of people in Rural India and America.
VOTE FOR ISHA NOW!
http://www.ishafoundation.org/mailmarketer/link.php?M=53125&N=86&L=192&F=H
For More Information Visit
www.ishafoundation.org/vote
"How deeply you touch another life
is how rich your life is" - Sadhguru
பொங்கலோ பொங்கல்
இன்று அந்த நாள் ஞாபகம்... முன் வாசலில் பரங்கி பூவுடன் தெருவடைத்து வண்ணக் கோலங்கள். பின் வாசலில் சாணத்தில் பாத்தி கட்டி மங்கள நீர் விட்டு அதில் மிதக்கும் வெள்ளைத் தும்பை பூ...
மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை.
உழவர்களை கொண்டாடி, பெரியோரிடம் ஆசி பெற்று, இன்பமாய் சுற்றித் திரிந்த அந்த இளமை காலம்...
பரங்கி
கோலத்தின் நடுவில் பரங்கி
நின்றேன் தெருவில் கிறங்கி
நினைத்தேன் மனதில் வருந்தி
மறந்தேன் இரவில் உறங்கி.
தும்பை
மாட்டுக் கொட்டிலில் தும்பை
பண்பாட்டை காட்டினால் அன்னை
பதிலுக்கு காட்டினோம் அன்பை
உழவர்
அன்று
உண்ண உணவு பயிரிட உழவர்
இன்று
எண்ண எலும்பு தெரிந்திட கிழவர்
நாளை
உன்னை என்னை மறந்திட இளையர்.
இன்று போல் என்றும் மங்களம் பொங்க
இனிய பொங்கலோ பொங்கல்.
மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை.
உழவர்களை கொண்டாடி, பெரியோரிடம் ஆசி பெற்று, இன்பமாய் சுற்றித் திரிந்த அந்த இளமை காலம்...
பரங்கி
கோலத்தின் நடுவில் பரங்கி
நின்றேன் தெருவில் கிறங்கி
நினைத்தேன் மனதில் வருந்தி
மறந்தேன் இரவில் உறங்கி.
தும்பை
மாட்டுக் கொட்டிலில் தும்பை
பண்பாட்டை காட்டினால் அன்னை
பதிலுக்கு காட்டினோம் அன்பை
உழவர்
அன்று
உண்ண உணவு பயிரிட உழவர்
இன்று
எண்ண எலும்பு தெரிந்திட கிழவர்
நாளை
உன்னை என்னை மறந்திட இளையர்.
இன்று போல் என்றும் மங்களம் பொங்க
இனிய பொங்கலோ பொங்கல்.
வகை
பொங்கல் | நினைவு
பண்பாடு...
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் அவர் மாணவர் எழுதிய கவிதையாய் இதை கூறினார்.
பல்லவனில் இடிபாடு
பக்கத்தில் தடிமாடு
பட்டணத்தில் பண்பாடு
படுகின்றது படாதபாடு.
எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பதிவர்களின் பண்பாடு. அழகிய ஈரோடு நிகழ்விற்க்குப்பின் தமிழ்மணத்தில் பெரும் கூப்பாடு. நற்குடியில் ஆரம்பித்து...
பதிவர்களின் பண்பாடு...
பதிவுன்னு மொக்கைய போடு
பெயரில்லாம பின்னூட்டம் போடு
மீள் பதிவா போட்டதையே போடு
மீத பஃர்ஸ்டுன்னு அட்டெண்டன்ச போடு
படிச்சி பிடிச்சா ஓட்டப்போடு
பதிவு பிடிக்காட்டி ஓடிப்போய்டு
பாஃளோயர் இருந்தா காட்டு நீ வித்த
சிங்கிளா இருந்தா மவனே நீ செத்த
தொழிலல்ல சோசியம்
ஆரம்பத்தில் ஓசியாம்
நெருங்கினால் காசியாம்
ஒரு பதிவு
ஒருவருக்கு சந்தனம்
ஒருவருக்கு சாணி
ஒரு பதிவு
ஒருவருக்கு பழுது
ஒருவருக்கு பாம்பு
பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு
பதிவு பழுதோ பாம்போ...
பழுதெனில் பற்றப் பழகு
பாம்பெனில் தாண்டப் பழகு
ரௌதிரம் பழகு... ரௌதிரம் செய்னு சொல்லலியே!
சமைத்துப் பார்... சாப்பிட சொல்லலியே!!
களவும் கற்று மற... உன்னை திருட சொல்லியே!!!
படித்த பதிவருக்கு என்ன பண்பாடு?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு - அழகாண அருமையான குறளை படித்திருக்கிறீர்கள்... அதை செயல்படுத்துவதில் ஏன் இத்தனை முரண்பாடு?
உங்கள் தமிழ் எழுத்து வளரட்டும்!
உங்கள் மண ஓட்டம் உயரட்டும்!!
கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் அவர் மாணவர் எழுதிய கவிதையாய் இதை கூறினார்.
பல்லவனில் இடிபாடு
பக்கத்தில் தடிமாடு
பட்டணத்தில் பண்பாடு
படுகின்றது படாதபாடு.
எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பதிவர்களின் பண்பாடு. அழகிய ஈரோடு நிகழ்விற்க்குப்பின் தமிழ்மணத்தில் பெரும் கூப்பாடு. நற்குடியில் ஆரம்பித்து...
பதிவர்களின் பண்பாடு...
பதிவுன்னு மொக்கைய போடு
பெயரில்லாம பின்னூட்டம் போடு
மீள் பதிவா போட்டதையே போடு
மீத பஃர்ஸ்டுன்னு அட்டெண்டன்ச போடு
படிச்சி பிடிச்சா ஓட்டப்போடு
பதிவு பிடிக்காட்டி ஓடிப்போய்டு
பாஃளோயர் இருந்தா காட்டு நீ வித்த
சிங்கிளா இருந்தா மவனே நீ செத்த
தொழிலல்ல சோசியம்
ஆரம்பத்தில் ஓசியாம்
நெருங்கினால் காசியாம்
ஒரு பதிவு
ஒருவருக்கு சந்தனம்
ஒருவருக்கு சாணி
ஒரு பதிவு
ஒருவருக்கு பழுது
ஒருவருக்கு பாம்பு
பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு
பதிவு பழுதோ பாம்போ...
பழுதெனில் பற்றப் பழகு
பாம்பெனில் தாண்டப் பழகு
ரௌதிரம் பழகு... ரௌதிரம் செய்னு சொல்லலியே!
சமைத்துப் பார்... சாப்பிட சொல்லலியே!!
களவும் கற்று மற... உன்னை திருட சொல்லியே!!!
படித்த பதிவருக்கு என்ன பண்பாடு?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு - அழகாண அருமையான குறளை படித்திருக்கிறீர்கள்... அதை செயல்படுத்துவதில் ஏன் இத்தனை முரண்பாடு?
உங்கள் தமிழ் எழுத்து வளரட்டும்!
உங்கள் மண ஓட்டம் உயரட்டும்!!
போட மறந்த பதிவு...
இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதை-க்கு பின் ஏதும் மிகப் பெரிய வெற்றி படங்கள் அமையாததற்க்கு காரணம் தான் வைத்த படத்தின் பெயர் என்று நினைத்து சில பெரிய மனிதார்களை தன் அடுத்த படத்திற்க்கு நல்லதொரு பெயர் வைத்து தருமாறு கேட்க... அவர்கள் பரிந்துறைத்த பெயர்கள்
க.மு.க: (என்னை வந்து) பார்க்க மறந்த நடிகை
மருத்துவர் ராமதாஸ்: ( நெடுஞ்ச் சாலைகளில்) வெட்ட மறந்த மரம்
செ.ஜெ: (ஆட்சியில் இருந்தபோது) நீக்க மறந்த அமைச்சர்
சசி: (அக்கா ஆசியுடன் வளைக்க) வாங்க மறந்த இடம்
வை.கோ: (கொள்கையை மட்டுமா?) என்னையே மறந்த நான்
சு.சா: (மன்மோகன் தாடி போச்சே) வைக்க மறந்த பார்ட்டி
அழகிரி: (அமைச்சர் ஆனதால்) அனுப்ப மறந்த ஆட்டோ
ஸ்டாலின்: ( நான் மட்டுமா?) நாற்காலி மறந்த நாலுபேர்
வைரமுத்து:(பொய்யில்லாம எப்படி) எழுத மறந்த கவிதை
ஆசிரியர்: (அட்டை டு அட்டை) எடுக்க மறந்த பாடம்
மாணவன்: (அட்டு முதல் அழகி வரை) சொல்ல மறந்த காதல்
நீங்களும் சொல்லலாம்ல...
க.மு.க: (என்னை வந்து) பார்க்க மறந்த நடிகை
மருத்துவர் ராமதாஸ்: ( நெடுஞ்ச் சாலைகளில்) வெட்ட மறந்த மரம்
செ.ஜெ: (ஆட்சியில் இருந்தபோது) நீக்க மறந்த அமைச்சர்
சசி: (அக்கா ஆசியுடன் வளைக்க) வாங்க மறந்த இடம்
வை.கோ: (கொள்கையை மட்டுமா?) என்னையே மறந்த நான்
சு.சா: (மன்மோகன் தாடி போச்சே) வைக்க மறந்த பார்ட்டி
அழகிரி: (அமைச்சர் ஆனதால்) அனுப்ப மறந்த ஆட்டோ
ஸ்டாலின்: ( நான் மட்டுமா?) நாற்காலி மறந்த நாலுபேர்
வைரமுத்து:(பொய்யில்லாம எப்படி) எழுத மறந்த கவிதை
ஆசிரியர்: (அட்டை டு அட்டை) எடுக்க மறந்த பாடம்
மாணவன்: (அட்டு முதல் அழகி வரை) சொல்ல மறந்த காதல்
நீங்களும் சொல்லலாம்ல...
யார் கடவுள்?
யார் நம் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்களோ அவுங்கதான் கடவுள். பல சமயம் அது நம் நண்பர்களாகவே இருக்கும். அடிக்கடி சொல்லி இருப்போம்... என்ன செய்வது என்று அறியாது விழித்துக்கொண்டிருந்தேன்... நல்ல வேளை கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினாய் என்று. சில சமயம் அது நம் வலி/துயர் தீர்க்கும் மருத்துவராக கூட இருக்கலாம். டாக்டர்... பிழைப்பேனா இல்லை இறப்பேனா என்று கிடந்தேன்... கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்லுவோம்.
மேலே சொன்ன பல சமயம் மற்றும் சில சமயம்-ல எந்த சமயத்துல யார் கடவுள்? இந்து சமயத்துல பல கடவுள், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயத்தில் சில கடவுள் அல்லது தேவ தூதர்கள்... அவர்களும் கடவுள் தான்.
இந்து மதத்தில் ஏன் பல கடவுள்? அது தேவையா?
நாம் அனைவரும்/ஒவ்வொருவரும் ஒரு நிறுவாகத்தின்(பிரபஞ்ஜத்தின்) ஒரு அங்கம். உதாரணத்திற்க்கு ஒரு சிறிய அளவில் ஒரு பள்ளி / கல்லூரி / அரசாங்கம்-ன்னு எடுத்துக்கோங்க.... அதை நிறுவகிக்க ஒரு தலைமை, உப தலைமைகள், வேறுபட்ட துறைகள் என்று... திறம்பட செயல்பட.
இந்து மத கடவுள்களும் அப்படித்தான் தோன்றி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்னி பகவான், வாயு பகவான், வருண பகவான்... என்று பஞ்ச பூதங்களுக்கு கடவுள். பின்னர் துறைகள்... பிறப்புக்கு பிரம்மா, கல்வியா அதற்க்கு சரஸ்வதி, பொருளாதாரமா அதற்கு லட்சுமி... இறப்புக்கு எமதருமன்.
சரி எமதருமன் தவறு செய்து விட்டால்? கணக்கை சரி செய்து காளனை வெள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்... என்றும் இந்த கடவுள்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...
சரி கடவுள்கள் சரியாத்தான் இருக்காங்க... தலைமை யாரு? அதுவம் சரியாகவே சொல்லப்பட்டு இருக்கிறது... கடவுள்கள் (காட்-GOD) பல... ஆனால் தலைமை (லார்ட்-LORD) ஒருவரே... அவர் கிருஷ்ண பரமாத்மா.
மேலே சொன்ன பல சமயம் மற்றும் சில சமயம்-ல எந்த சமயத்துல யார் கடவுள்? இந்து சமயத்துல பல கடவுள், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய சமயத்தில் சில கடவுள் அல்லது தேவ தூதர்கள்... அவர்களும் கடவுள் தான்.
இந்து மதத்தில் ஏன் பல கடவுள்? அது தேவையா?
நாம் அனைவரும்/ஒவ்வொருவரும் ஒரு நிறுவாகத்தின்(பிரபஞ்ஜத்தின்) ஒரு அங்கம். உதாரணத்திற்க்கு ஒரு சிறிய அளவில் ஒரு பள்ளி / கல்லூரி / அரசாங்கம்-ன்னு எடுத்துக்கோங்க.... அதை நிறுவகிக்க ஒரு தலைமை, உப தலைமைகள், வேறுபட்ட துறைகள் என்று... திறம்பட செயல்பட.
இந்து மத கடவுள்களும் அப்படித்தான் தோன்றி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அக்னி பகவான், வாயு பகவான், வருண பகவான்... என்று பஞ்ச பூதங்களுக்கு கடவுள். பின்னர் துறைகள்... பிறப்புக்கு பிரம்மா, கல்வியா அதற்க்கு சரஸ்வதி, பொருளாதாரமா அதற்கு லட்சுமி... இறப்புக்கு எமதருமன்.
சரி எமதருமன் தவறு செய்து விட்டால்? கணக்கை சரி செய்து காளனை வெள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்... என்றும் இந்த கடவுள்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது...
சரி கடவுள்கள் சரியாத்தான் இருக்காங்க... தலைமை யாரு? அதுவம் சரியாகவே சொல்லப்பட்டு இருக்கிறது... கடவுள்கள் (காட்-GOD) பல... ஆனால் தலைமை (லார்ட்-LORD) ஒருவரே... அவர் கிருஷ்ண பரமாத்மா.
டிக்கெட்... டிக்கெட்... சார் டிக்கெட்
நாம் மரணத்தை குறிப்பிடும் போது அவர் சிவலோகத்திற்க்கு அல்லது பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கிவிட்டார் என்று சொல்லுவோம், அந்த சொல் எந்த அளவிற்க்கு நம் நடைமுறை வாழ்விற்க்கு பொருந்தும்?
உதாரணத்திற்க்கு நாமும் நம் நண்பரும் ஒரு பேருந்தில் பயணம் செல்லுவதாக வைத்துக்கொள்வோம், நீங்கள் சராசரி சாரீரம் கொண்ட நபர், உங்கள் நண்பரோ இரட்டை நாடி, இருப்பினும் அவருக்காக நாம் இரண்டு டிக்கெட் எடுக்க வேண்டாம், எந்த ஒரு பயணத்திலும்... அது தொடர்வண்டியோ அல்லது விமான பயணமோ... எதுவாயினும் பயணச்சீட்டு உருவத்தை பொருத்து வழங்கப்படுவது அல்ல. (பிறகு?....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
அப்படி பயணிக்கும் போது நமக்கு மரணம் சம்பவிக்கிறது என வைத்துக்கொள்வோம்.... பிறகு என்ன நடக்கும்?
நடத்துனர் சொல்வார்... அதை கீழே இறக்கு என்று.
நம் நண்பர் சொல்லுவார்... சார் அவர் டிக்கெட் எடுத்திருக்கிறார் எதுக்கு பாதியில் இறங்க வேண்டும் என்று?
யோவ்... வேணும்னா லக்கேஜா மேல போட்டு கொண்டுவா, இங்க சீட்டுல உட்கார்ந்து வரமுடியாது... சொன்னாக்கேளு
சார்... இது என்ன அநியாயம்? டிக்கெட் எடுத்தவர் இதோ உட்கார்ந்து இருக்கிறார், அவர் பையில் அவர் வாங்கிய பயணச்சீட்டு இருக்கிறது, பிறகு ஏன் லக்கேஜுல போடனும்? டிக்கெட் இவருக்குதானே கொடுத்தீங்க?
யோவ்... டிக்கெட் வாங்கனப்ப இவருக்குள்ள இருந்த அவரு இப்ப இல்லைய்யா?
யாரு இப்ப இல்ல? இவருதான் டிக்கெட் வாங்கினாரு, இவருக்குள்ள அவரு இருந்தாரா? அவர நான் பார்க்கலையே... நீங்க பார்த்தீங்களா? அப்ப அவருகிட்ட கொடுத்த டிக்கெட் இவரு பையில எப்படி வந்தது?
அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.
(பகவத்கீதை சொற்பொழிவில் நான் கேட்டது... இறப்பு என்பது உடலுக்கு... உயிருக்கு அல்ல... சற்றே நகைச்சுவையுடன் இங்கு. ஒருவரின் பிறப்பை வைத்தோ, உருவத்தை வைத்தோ மதிப்பது தவறு... எல்லா உயிரும்/டிக்கெட்டும் ஒன்றே)
உதாரணத்திற்க்கு நாமும் நம் நண்பரும் ஒரு பேருந்தில் பயணம் செல்லுவதாக வைத்துக்கொள்வோம், நீங்கள் சராசரி சாரீரம் கொண்ட நபர், உங்கள் நண்பரோ இரட்டை நாடி, இருப்பினும் அவருக்காக நாம் இரண்டு டிக்கெட் எடுக்க வேண்டாம், எந்த ஒரு பயணத்திலும்... அது தொடர்வண்டியோ அல்லது விமான பயணமோ... எதுவாயினும் பயணச்சீட்டு உருவத்தை பொருத்து வழங்கப்படுவது அல்ல. (பிறகு?....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
அப்படி பயணிக்கும் போது நமக்கு மரணம் சம்பவிக்கிறது என வைத்துக்கொள்வோம்.... பிறகு என்ன நடக்கும்?
நடத்துனர் சொல்வார்... அதை கீழே இறக்கு என்று.
நம் நண்பர் சொல்லுவார்... சார் அவர் டிக்கெட் எடுத்திருக்கிறார் எதுக்கு பாதியில் இறங்க வேண்டும் என்று?
யோவ்... வேணும்னா லக்கேஜா மேல போட்டு கொண்டுவா, இங்க சீட்டுல உட்கார்ந்து வரமுடியாது... சொன்னாக்கேளு
சார்... இது என்ன அநியாயம்? டிக்கெட் எடுத்தவர் இதோ உட்கார்ந்து இருக்கிறார், அவர் பையில் அவர் வாங்கிய பயணச்சீட்டு இருக்கிறது, பிறகு ஏன் லக்கேஜுல போடனும்? டிக்கெட் இவருக்குதானே கொடுத்தீங்க?
யோவ்... டிக்கெட் வாங்கனப்ப இவருக்குள்ள இருந்த அவரு இப்ப இல்லைய்யா?
யாரு இப்ப இல்ல? இவருதான் டிக்கெட் வாங்கினாரு, இவருக்குள்ள அவரு இருந்தாரா? அவர நான் பார்க்கலையே... நீங்க பார்த்தீங்களா? அப்ப அவருகிட்ட கொடுத்த டிக்கெட் இவரு பையில எப்படி வந்தது?
அய்யா, உடல் என்பது பருப்பொருள்... உயிர் என்பது பரம்பொருள்... அந்த பரம-ஆத்மா பரமாத்தாவை பார்க்க பரலோகத்திற்க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறது. இந்த டிக்கெட் இனி செல்லாது... இனி புதுசா ஒரு லக்கேஜ் டிக்கெட் வாங்கு.
(பகவத்கீதை சொற்பொழிவில் நான் கேட்டது... இறப்பு என்பது உடலுக்கு... உயிருக்கு அல்ல... சற்றே நகைச்சுவையுடன் இங்கு. ஒருவரின் பிறப்பை வைத்தோ, உருவத்தை வைத்தோ மதிப்பது தவறு... எல்லா உயிரும்/டிக்கெட்டும் ஒன்றே)
Subscribe to:
Posts (Atom)