தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

உருவாக்கத்தன்மையின் உச்சகட்டம்...

கிரியேட்டிவிட்டி என்கிற உருவாக்கத்தன்மைக்கு இன் நாளில் ஒரு சிறந்த உதாரணம் கூகிள் தேடு தளம் என்றால் மிகையாகாது.

அவர்கள் தொடர்ந்து அந்த நாளைப் பற்றிய சிறப்பை கூகில் முத்திரையாக பதிப்பதில் பெரும் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த நாற்பது ஆண்டுகள் நிறைவை கொண்டாடுவதை குறிப்பிடும் பொருட்டு கூகிளின் முத்திரை...




எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

வென்றாக வேண்டும் தமிழ்...

வென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.

அதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...

இப்போது
இருதயம் கூட இயந்திரத்தில்
தமிழ் கூட தடுமாற்றத்தில்...

உண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.

விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.

இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.

கவிஞர் வைரமுத்துவிற்க்கு என் வரவேற்ப்பு

பெஃட்னா 2009, அட்லாண்டாவில் மிக சிறப்பாக கொண்டாட பட்டது. கவிஞர் வைரமுத்துவிற்க்கு நான் வாசித்த கவிதை...

பெயரோ வைரமுத்து
கைகளிலோ விரல்கள் பத்து
உன் கவிதைகளோ பெரும் சொத்து.

முகத்திலே சாந்தம்
குரலிலே காந்தம்
கவிப்பாக்களிலே பாந்தம்
சுருங்கச்சொன்னால் நீயொரு ஏகாந்தம்.

மண்ணிற்க்கு கவிதை எழுதினாய்
மொழிக்கு கவிதை எழுதினாய்
மனிதனுக்கு கவிதை எழுதினாய்

ஏன்...மரத்திற்க்கும் கவிதை எழுதினாய்...

கவிதையின் தலைப்புத்தான் மரம்
அதில் ஒவ்வொரு வரியும் உலகத் தரம்
கவியே, நீ எங்களுக்கு கிடைத்த வரம்.

மரத்திலிருந்து... மரப்பாச்சி
மனிதனுக்கு... மனசாட்சி
கரிசலிலிருந்து... கருவாச்சி
அதுகாவியமாய்... உருவாச்சி.

தமிழை காதலித்தாய்... கவிஞனானாய்
பொண்மணியை காதலித்தாய்... கணவனானாய்
எதனை காதலித்தாய்?
கலைஞரின் நண்பனானாய்?

மொழிகளில் செம்மொழி
நம் தமிழ் மொழி
இவ்விழாவிற்க்கு அழைத்ததும்
இசைந்தது உன் விழி

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உனை வருக வருக எனவரவேற்க்குது
அட்லாண்டா தமிழ் சங்கம்.


பி.கு: நேரமின்மை காரணமாக வரவேற்ப்பு நன்றி நவிலலாய் மாறியது...

தமிழில் நீயொரு அங்கம்
தமிழில் நீயொரு அங்கம்
உன் வருகைக்கு நன்றி நவிழ்கின்றது
அட்லாண்டா தமிழ் சங்கம்.

கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சியில்... விஜய.டி.ஆர்...ஆ... டர்..ர்..ர்

ஏய்...
நான் தேர்தல்ல நின்ன இடம் கள்ளக் குறிச்சி
மக்கள் தந்தாங்க தோல்வி அதிர்ச்சி
காரணம் எனக்கு சரியில்ல சனிப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

அரசியலில் எனக்கு இருக்கு முதிர்ச்சி
தொடர்ந்து செய்வேன் நான் முயற்ச்சி
அடுத்து வருது குருப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

மருத்துவருக்கு அடிச்சாங்க ஆப்பு
அம்மாவுக்கு கொடுத்தாங்க கேப்பு
வைகோவுக்கு வாயில டேப்பு
கலைஞர் ஆயிட்டார் ஸேஃபு
காங்கிரஸ் மொத்ததில் டாப்பு

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

சுதீசு மாமா கேப்டன்
ரித்தீசு மாமா டாப்டென்

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

தமிழர்கள் அறிவாளிகளா?

என்னை இப்படி ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவு போட தூண்டியது தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்.

இந்தியாவில் 100 சதவிகிதம் படிப்பறிவு கொண்டவர்கள், இந்திய அளவில் முக்கிய உயர் பதவி வகிப்பவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட கேரள மக்களை காட்டிலும் தமிழ் மக்கள் ஓட்டறிவு பெற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

அன்னம் போல் வண்ணம் (ஜாதி) பெயரை கொண்டு கட்சி நடத்தியவர்களை இனம் கண்டு கொடுத்திருக்கின்றனர் பெரிய அடி.

ஈழப்பிரச்சனை இந்தியாவின் பிரச்சனை இல்லைதான். ஆனால் அவர்கள் தமிழர்களின் உறவுகள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டாம், ஆனால் ராஜீவ் காந்தி செய்தது போல் அமைதி படையை அனுப்பாமலும், இப்போது செய்யும் ராணுவ தளவாடங்கள் உதவியை கொடுத்து உபத்திரவம் செய்யாமலும் இருங்கள் என்று வன்முறை இல்லாமல் சாத்வீகமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் பெரிய இடி.

நான் பார்த்த தேர்தல்களில் இந்த தேர்தல் வாழ்க்கை முக்கியத்துவம் கொண்ட தேர்தல், இந்த முறை என்னால் வாக்கு அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் நல்ல தேர்தல் முடிவை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு பானை சோற்றிர்க்கு ஒரு சோறு பதம் என்பார்கள், அதற்க்கு எங்கள் மயிலாடுதுறை தொகுதி ஒரு முன் உதாரணம். சென்ற வருடம் ஊருக்கு சென்ற பொழுது தொகுதி மறுசீரமைப்பு பற்றி கேள்வி பட்டேன், அதனால் மயிலாடுதுறை தொகுதிக்காண இழப்பீடு பற்றி நண்பர்களிடம் பேசிய பொழுது, அவர்கள் தொகுதி வேட்பாளர் மணி சங்கர் அய்யரின் பங்களிப்பு பற்றி சொன்னார்கள். சரியாக சொன்னேன், இம்முறை அய்யர் சரியான பாடம் பெருவார், இனி அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக மட்டுமே தொடர முடியும் என்று. என் தொகுதி மக்களும் அறிவாளிகளே.

கலைஞரின் அணுகுமுறை சரியாக இருந்து தி.மு.க சார்பாக ஒரு இஸ்லாமிய வாக்காளர் நிருத்தப்பட்டிருந்தால் இது தி.மு.க கூட்டணிக்கு ஒரு வெற்றித் தொகுதி என்பது என் எண்ணம்.

ஓ.எஸ்.மணியன் வெற்றதில் சற்று வருத்தம்தான், அவருக்கு பதிலாக ம.தி.மு.க-வின் மகாலிங்கம் ஒரு நல்ல மாற்று வேட்ப்பாளராக வெற்றி கண்டு இருப்பார், அந்த வைகோ சைக்கோ தனக்கு பதில் அவரை அங்கு நிருத்தி இருந்தால் ம.தி.மு.க-வின் செல்வாக்கை கொஞ்சம் உயர்த்தி இருக்கலாம்.

எது எப்படியோ இந்த தேர்தலிலும் தமிழக மக்கள் 40-க்கு 40. பின்ன 7-க்கு 7 அவுட்ன்னா 40க்கு 40-தானே?