புள்ளைய தூக்கி தண்ணில போடு...

இதனை இதனால் இவன் முடிப்பான்-என்றாய்ந்து
அதனை அவன்-கண் விடல்.

இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இன்றைய தேதிக்கு ஒரு ஆளுக்கு மிகச்சரியா இருக்கு - அவர் தான் மைக்கேல் மதன காம ராஜன்... சாரி மைக்கேல் பெல்ப்ஸ்.

6 அடி 4 அங்குலம் உயரம், கையை விரித்தால் 6 அடி 7 அங்குலம் (விங்க் ஸ்பேனாம்), டார்சோ - அட அதாங்க உடம்பின் நடு பகுதி அது இவர் காலோட பெருசாம், பாதத்தின் அளவு 14(அதுவும் யு.எஸ் அளவு, இந்தியா பாட்டா அளவுன்னா ஒரு 18 இருக்கும்ன்னு நினைக்கிரேன்)... போதும் எனக்கு இப்பவே கண்ண கட்டுது.

வள்ளுவர் சொன்னத பெல்ப்ஸ் அம்மா சரியா புரிஞ்சிகினு புள்ளைய தூக்கி தண்ணில போட்டுட்டாங்க... அது இப்ப தங்கமா அள்ளுது

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

ஓ..ம் நமோ நாராயணாயா...

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அக்ஷரம் பார்க்காது

ஊனக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது

வீர சைவர்கல் முன்னால் எங்கள் வீர வைனவம் தோர்க்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் நான்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜதர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கனைக்கும் வென்னிலாவை அது அனைத்திடுமா
கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும் அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்தால் சமயம் கிடையாது

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியது


இதையே ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பர் பாடினால்

ஓ..ம் புராஜக்ட் மேனேஜரே நமக...

பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது
பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது

ரெக்கொயர்மெண்டில் பக் இருக்குமென்றால்
டெவலப்மெண்டில் ஏன் இருக்காது
மேனேஜர் அடாவடி ஏற்கும் நெஞ்சு
லீடர் அடாவடிய பார்க்காது

கியூசிக்கண்ணில் பார்தால் யாவும் குற்றம் தான்
தேசிக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம் தான்

பக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு
தொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது
பக்கில்லை என்று சொன்ன பின்பும் நம்பமாட்டாரு
தொல்லை தந்த போதும் எங்கள் கடலை குறையாது

ஆஃப்ஷோருக்கு முன்னால் எங்கள் ஆன்சைட்டு தோர்க்காது
புராஜக்ட் மேனேஜருக்கு அஞ்சி என்றும் டெவலப்மெண்டில் பக்கு குறையாது

மேனேஜருக்கு மண்டைய ஆட்டும் மாடியூல்லீடர் தான்
மாடியூல்லீடரக்கு மண்டகாய்ச்சல் இந்த டெவலப்பெர் கூட்டம் தான்

நாட்டில் உண்டு ஆயிரம் சாஃப்டேவர் கம்பெனிதான்
அந்த ஆயிரத்துல ஒன்னுல எனக்கு வேலை உண்டுதான்

டீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது
புரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது
டீம மாத்தி போட்டாலும் எங்க புத்தி மாறாது
புரொடக்சனிலே ஓடும் எங்க கோடு தேறாது

யு.எஸ் ரிஸர்ஸன் வந்து புராஜெக்ட் போகும்
வேலையை அது காலிபண்ணுமா
கொட்டும் டாலர் பேன்க் பேலன்ஸை ஏற்றும்
அந்த டாலர் அதன் வேல்யுவை ஏற்றுமா

ஸ்கெடியூல் என்று பார்தால் மனிதாபிமானம் தெரியாது
மனிதாபிமானம் என்று பார்தால் புராஜெக்ட் கிடையாது

பக்கை மட்டும் கண்டால் பர்ஃபாமன்ஸ் தெரியாது
பர்ஃபாமன்ஸ் மட்டும் கண்டால் ஓபியடிப்பது தெரியாது

ஒபாமா - வைகோ சந்திப்பு

செய்தி: வைகோ அவரது அமெரிக்கா பயணத்தின் போது அதிபர் வேட்பாளர் ஒபாமாவை சிக்காகோவில் சந்தித்தார்

ஓ:மிஸ்டர் வைகோ என்ன இப்படி சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறீங்க?
வை: உங்களுக்கு தெரியாது, எங்க ஊருல இப்ப என்ன சைக்கோ-னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் தான் சொல்லுரேன், நீங்க பிரசிடண்டா வந்ததும் நான் சி.எம்மா ஆவரதுக்கு உதவுரேன்னு எழுதி கொடுங்க.

மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்...

இது அமெரிக்காவில் இந்த சீஸனில் வரும் ஏ.டி&டி-யின் தொலைக்காட்சி விளம்பர கேப்சன் "மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்", அத வெச்சு ஒரு சின்ன காமெடி.

குசும்பு குப்புசாமி - கு.கு / கஸ்டமர் சப்போர்ட்- க.ச

கு.கு: (ஒரு நல்லிரவில்) ஹலோ ஏ.டி&டி?

க.ச: சார் இனிய மாலை வணக்கம், நான் டேவிட், சொல்லுங்க சார் நான் எப்படி உதவ முடியும் உங்களுக்கு? உங்கள் பெயர்?

கு.கு: என் பெயர் குசும்பு குப்புசாமி

க.ச: நன்றி, சார் நீங்கள் எங்கள் வாடிக்கையாளரா? இல்லை எங்கள் சேவையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுக்கு உதவுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

கு.கு: நான் உங்க வாடிக்கையாளர் ஆக வேண்டும் என்றுதான் முயற்ச்சி பண்ணுகிறேன், என்னால் முடியவில்லை அதான் கஸ்டமர்கேர கூப்பிட்டேன்

க.ச: நீங்கள் எங்கள் சேவையை உபயோகிக்க விரும்புவது குறித்து மிக்க சந்தோசம். நாங்கள் பல சேவை வழங்குகிறோம், நீங்கள் எந்த மாகானத்தில் இருந்து அழைக்கிறீர்கள்? ஏதேனும் குறிப்பிட்ட சேவை பற்றிய தகவல் வேண்டுமா இல்லை பொதுவான தகவல் வேண்டுமா?

கு.கு: நான் ஜார்ஜியா மாகானத்தில் இருந்து அழைக்கிறேன், ஆனால் எனக்கு குறிப்பிட்டு இங்குதான் என்று இல்லை, ஏனெனில் நான் என் பணி நிமித்தம் பல மாகானங்களுக்கு பயணிப்பவன், நீங்கள் உங்கள் சேவை எங்கு இருக்கிறது என்று சொன்னால் போதும்

க.ச: மிக்க மகிழ்ச்சி, எங்களுடைய எந்த சேவை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்?கு.கு: உங்களுடைய விளம்பரங்களில் மோர் பார்'ஸ் இன் மோர் பிளேஸஸ்-ன்னு சொல்லுறீங்க, நானும் ஒரு பத்து பண்ணிரண்டு மாகானம் பார்த்துட்டேன், ஒரு இடத்துல ஒரு பார கூட காணுமே, நீங்க கிழக்கு மாகானத்துல ஒரு மேஜர் சிட்டி பேரு - உங்க பார் இருக்குற இடம் சொல்லுங்க பிளீஸ்

க.ச: சார் நீங்க விளம்பரத்த தவறாக புறிந்து கொண்டிருக்கிறீர்கள், அது நீங்க நினைக்கிற பார் இல்ல, தொலைதொடர்பு சாதனங்கள் மொபைல் போன், பி.டி.ஏ போன்றவற்றில் கிடைக்க கூடிய சிக்னல் பார்

கு.கு:என்னது நான் தவறா புறிஞ்சிகிட்டனா? நான் ஊரு முழுக்க நாய பேயா தேடுறேன் உங்க பார, என்ன மாதிரி இன்னும் பேர் தேடுராங்களோ. யோவ் நீங்க தவறா விளம்பரம் பண்ணிட்டீங்கன்னு சொல்லுங்க. முதல்ல உங்க மார்கெட்டிங்க் டிபார்ட்மெண்ட்ல சொல்லி விளம்பரத்த நிறுத்த சொல்லுங்க.

க.ச: நீ போன வைடா வெண்ணை, நாங்க கனைக்ஸன் குடுக்கிற பார சொன்னா நீ கவுந்தடிச்சு கிடக்கிற பார சொல்லுர... ங்கொயால உன்ன...

கு.கு:ஏய்... டேவிட்-ன்னு சொன்ன இப்ப வெண்ணை, ங்கொய்யா-ல்லாம் சொல்லுற... யாருடா நீ?

க.ச: ம்... தமிழ் நாட்டுல உள்ள ஏ.டி&டி-யோட பி.பி.ஓ-லேருந்து வெடிகுண்டு முருகேசன்

கு.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குருவி குசும்பு...

குருவி குசும்பு: 1

ஏம்ப்பா படத்துக்கு பேரையாவது "சிங்கமுத்து பையன்"-ன்னு வெச்சி இருக்கலாம்...தாத்தா திருப்தி அடைஞ்சிருப்பாரு (உதய நிதி கொல்லு தாத்தா பேரு ஏதோ முத்து வேளர்) படத்துல குருவிய விட அதிக முரை சிங்கமுத்து பையன் சிங்கமுத்து பையன்-னு தான சொல்லுறாங்க?

குருவி குசும்பு: 2

சிங்கமுத்து மூன்று மனைவிகள் என்ன ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்காங்க... பேரன் உதய நிதி தாத்தாவுக்கு மெஸஜ் சொல்லுறாரு... தாத்தா நீ ஏன் கோபாலபுரத்துக்கும் ஆலிவர் ரோட்டுக்கும் டிரிப் அடிக்கிறிங்க... ரெண்டையும் ஒன்னாக்கிடுங்கன்னு

குருவி குசும்பு: 3 (ஸ்டோரி டிஸ்கஸன்)

தரணி: உதய், படத்துல வயலன்ஸ் இருக்கு, தமிழ் நாட்டு போலீஸ் வர மாதிரி வைப்போமா?
உ. நி: தாத்தாவோட ஆட்சியில் வயலன்ஸ் அதிகம்ன்னு எல்லோருக்கும் தெரியும், மேலும் போலீஸ் வந்து நாமே சட்ட ஒழுங்கு சரியா இல்லங்கறத படம் போட்டு காட்ட வேணாம்... நீ பொத்து.

தரணி: சரி, கடப்பா வேணாம் மதுரை-ன்னு வச்சுக்கலாம்... நேட்டிவிட்டி தூக்காலா இருக்கும்
உ. நி: டேய் அங்க என் பெரியப்பா அழகிரி இருக்காண்டா... நீ மதுரை என் கோட்டை-ன்னு வில்லனுக்கு டயலாக் வெப்ப, அத என் பெரியப்பன் கேட்டுட்டு எங்க அப்பன காலி பண்ணிடுவாண்டா, வேணாம் கடப்பா ஓ.கே

உ. நி: ஆமாம் இந்த குருவி மேட்டரால முஸ்லிம் ஓட்டு கலைஞ்சிடாதா, எனக்கு அதுதான் கொஞ்சம் இடிக்குது
தரணி:அட அதெல்லாம் தாத்தா பார்த்துப்பாரு, அவங்க கோர்ட்டுக்கு போனாலும் தாத்தாவுக்கு தெரியும் எப்படி சமாளிக்கனும்ன்னு... வர நோம்பு பண்டிகைல அவங்ககூட கஞ்சி குடிச்சி நோண்டி நொங்க எடுத்துடுவாறு.

அரசியல்ல இது சகஜமப்பா









மு.க: ஜாக்கி, அந்தர் பல்டி அடிக்கிறது உங்கள போல ஒருவர நான் பார்த்ததே இல்ல

ஜா: நீங்க அடிக்கிற அரசியல் பல்டிக்கு முன்னாடி நான் சும்மா!!!