மண்டகுள்ள மணியடிக்குது...

தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...

திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...

உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...

இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...

அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...

எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...

தவளையின் காதல்...

இரவு நிலவை...
தன் காதலியாக நினைத்து...
கானம் பாடி அழைத்தது...ரிதப்...ரிதப்...

வெட்கிய நிலவு...
மேக மூட்டத்தில் மறைந்தது...
சாரலை தூது விட்டது...சலசல...சலசல...

தவளையே...
உன் கரகரத்த குரலுக்கு இந்த சாரல்... வெண்ணை
மனமொத்த காதலுக்கு மொத்தமாக தருகிறேன்...என்னை.


அமெரிக்காவில்... அடக்க விலை

சேல் ப்ரைஸ் (Sale Price)...ஸ்லிப்ப பார்க்கனும்... சிந்திக்க கூடாது.

நான் முன்பே சொல்லி இருக்கேன்... எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன்னு. ஆனா அமெரிக்காவுல எப்ப பார்த்தாலும் சேல்... சேல்... சேல். மாதத்தில் குறைந்தது ஒரு சேல் அது எப்படி சாத்தியம் ஆகிறது என நம்ம "அடக்க விலை" ஆராய்ச்சியை இங்கயும் செஞ்சி பார்த்தேன்.

இப்ப நான் "அரசூரில் அடக்க விலை" -க்கு கேட்ட மாதிரி எந்த அம்மாவ இல்ல தத்தாவ போய் கேட்க முடியும்? தேவையே இல்லை... இப்ப என்கிட்ட இருக்கு படிப்பறிவு... பட்டறிவு...இனையம் எல்லாம் இருக்கு. கோபால் பல் பொடி வியாபாரம் போல... இந்தியா, சிங்கபூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஷாப்பிங்க் அனுபவம் தான்.

சிங்கப்பூர், உலக பொருளாதார சந்தைக்கு பெயர் எடுத்த ஊர். அங்கு ஓரளவுக்கு விலை, தரம் எல்லாம் நிரந்தரம். சரி ஒரு நல்ல பிராண்டட் பொருள எடுத்துக்கொள்வோம்... நைக்/ரீபோக் டி.ஷர்ட், அல்லது சார்லி/ஃபேரன்ஹீட் (C&D) பர்ஃபியூம் இப்படி சில. ஒரு பொருள் சிங்கபூர்ல 60 டாலர்னா அது அமெரிக்கவுல 40 டாலர் இருக்க வேண்டும்... கிட்ட தட்ட 1.5 அயல்னாட்டு பண மாற்றுவிகிதப்படி.

ஆனால் அது அமெரிக்காவில் 80 டாலருக்கு குறையாமல் விற்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு... ஏன்?

கொள்ளையடிக்கிறார்களா? இல்லை இல்லவே இல்லை. அமெரிக்காவில் "நோ கொஸ்டீன்ஸ் ஆஸ்க்ட்" ரிட்டர்ன் பாலிசி... கஸ்டமர் ஸேட்டிஸ்ஃபேக்ஸன். இப்ப புரியுதா? கடையில் எப்படி நீங்க திருப்பி கொடுக்கும்போது கேள்வி கேட்பது இல்லியோ... அதே மாதிரி கஸ்டமராகிய நம்மலும் அவங்க அதிகம் வெச்சு விக்கிற விலைய பத்தி கேள்வி கேட்க கூடாது. லாஜிக் கரெக்ட்டா?

லாஜிக் இருக்கட்டும்... அடக்க விலை?

இன்னுமா புரியல? சேல் ப்ரைஸ்தான் காஸ்ட் ப்ரைஸ். அதனாலதான் மாதத்தில் குறைந்தது ஒரு நாள் ஏதாவது ஒரு சேல் நடக்குது. கடைகாறார்களின் அடக்க விலை ஃபார்முலா இதுதான். அவங்க ஸ்டாக் பண்ணும் பொருளில் பாதி விற்றாலே போதும். முழு ஸ்டாக்கோட ஆர்.ஓ.ஐ கிடைச்சுடும். நீங்க பொருள் வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால்... சந்தோஷம் கொடுங்க கொடுங்க நாங்க 50% சேல்ல இதையும் வித்துடுவோம்னு சொல்லி வாங்கி கொள்வார்கள்.

குறள்: (கற்க கசடற...)
பாருங்க சேல்பாருங்க சேல் போட்டபின்
வாங்குங்க தேவைக் கேற்ப.

பி.கு: ஏம்ப்பா நான் ரொம்ப ஏமாந்த சோனகிரிப்பா... சேல் பார்க்க தெரியாது... (ஹி...ஹி உபயோகபடுத்துன) பொருள திறுப்பி கொடுக்க மனசு வறாது... சாதாரண நாள்ல எனக்கு பாதி விலைல கொடுங்கப்பா.

அரசூரில்... அடக்க விலை

காஸ்ட் ப்ரைஸ் (Cost Price)...கணக்கு பண்ணனும்... கடுப்பாவ கூடாது.

எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன். இது ஏதோ இப்பதான் தோனிச்சான்னு கேட்க கூடாது... சின்ன பிள்ளையா இருக்கும்போதே பண்ண ஆரம்பிச்ச கணக்கு... எங்க வீட்டுல பால், மோர், தயிர், வெண்ணை மற்றும் கீரை, வெண்டிக்கா, முருங்கக்கா இதெல்லம் விற்பாங்க... இது அம்மா/பாட்டி டிவிஸன். நெல், மாங்கா, தேங்கா, மரம் மட்டை... இது தத்தா டிவிஸன்.

எங்கம்மா வித்த கமாடிட்டியில மினிமம் விலை 10 காசு... ஒரு வட்டா மோரு அதுல மூன்று கரண்டி தயிரு (நோட் டவுன் த ஃபார்முலா 1+3). இங்க அந்த வட்டாவோ இல்ல கரண்டியோ எந்த மெட்ற்றிக் ஸ்டேண்டர்டு-க்கும் உட்பட்டது கிடையாது. ஆனா பாலுக்கு அப்படி கிடையாது, கால் லிட்டர் அலவு குவலை இருக்கும். அம்மாவிடம் கேட்பேன்... நீ இல்லாட்டி நான் எப்படி விற்கனும்/குடுக்கனும்-னு? எனக்கு கவலை என்னன்னா எங்க நிறைய கொடுத்து குடும்ப சொத்து குறைஞ்சிட போவுதோன்னு. அம்மா சொல்லுன்வாங்க என்ன பெரிய விஷயம் 10 காசுக்கு 1+3, 50 காசுக்கு 5+15 (அப்லை த ஃபார்முலா)... அப்புரம் கொஞ்ச மோரோ இல்ல 2 கரண்டி தயிரோ கூட போட்டு கொடுக்க வேண்டியது தான். சரி சேல்ஸ தெரிஞ்சி கிட்டாச்சி... அடக்க விலை?

நான்... அம்மா ஏதோ மாடு விலை இவ்வளவு, மட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம் இத்யாதி... இத்யாதி... எல்லாத்தையும் "கூட்டி(+)" மாடு கறக்கிற பாலுக்கு ஒரு விலைய போட்டு அதால "வகுத்தா(/)" வரும்பான்னு சொல்லுவாங்க என்று நினைசேன்... ஆனா அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? ஊருல என்ன விலை விக்குதோ நாமும் அந்த விலைக்கு விக்கிறோம்னு சொல்லிட்டாங்க. (மனசுக்குள் சொல்லிகிட்டேன் குடும்ப சொத்து குறைய நீதான் காரணமா?)

என மனசு அடங்க வில்லை, எப்படியாவது "அடக்க விலை"-யை கண்டு பிடித்து தீருவது என்று முடிவு செய்தேன். தாத்தாவிடம் சென்று கேட்டேன், தத்தா நம்ம சுருட்ட மாடு (ஒவ்வொரு மாட்டுக்கும் ஒரு பேர் உண்டு) என்ன விலை (தாத்தாவுக்கு டவுட் வந்துடுச்சி... என்ன டவுட்டுனு பிறகு சொல்லுகிரேன்) அது வருசத்துக்கு எத்தனை கட்டு வைக்கோல் திங்கும்? எவ்வளவு புண்ணாக்கு வாங்குவோம்? எவ்வளவு பால் கறக்கும்... அப்ப உள்ள அறிவுக்கு ஆல் டேட்டா கலெக்ட் பண்ணியாச்சு... விவரம் இதோ.

செலவு:
மாட்டின் விலை...2000.00, வைக்கோல்...100.00, புண்ணாக்கு... 1000.00 ஆக மொத்தம் 3100.00

வரவு:
சுருட்ட காலைல 2லி, மாலைல 2லி மொத்தம் 4 லி கறக்கும். சரிக்கு சரி தண்ணி ஊத்தலாம்னு (அதாவது 1லி பாலுக்கு 1லி தண்ணி) அம்மா சொல்லுவாங்க (பாட்டி சொல்லுவாங்க 1-க்கு 2 ஊத்துன்னு, ஹும் எங்க அம்மாவுக்கு ஊருல நல்ல பேரு... மாமியார்கிட்ட கெட்ட பேரு), ஆக 8லி. சுருட்டையோட குழந்தைப்பேரு காலம் 4 மாசம்... நோ மில்கிங்க்...
8(மாதம்) x 30 (னாள்) x 8(லி) x 2.00... 3840.00

யுரேகா... அம்மா பாலுக்கு அடக்க விலைய கண்டு புடிச்சிட்டேன்... இருந்தாலும் தவிடு, புல்லு, மாடு மேய்க்க ஆளு இதுகெல்லாம் எனக்கு விலை போட தெரியலம்மா... பெருசா ஒண்ணும் லாபம் இல்லையேன்னு கவலை பட்டேன். அம்மா சொன்னாங்க... அதுக்குதாண்டா செல்லம் உன்னை எப்ப பார்த்தாலும் படி... படின்னு சொல்லுரேன்.

பி.கு: நான் இருந்த நிலைமைய பார்த்து அம்மா சொன்னாங்க... நமக்கு லாபம்தான்... நீ மாட்டோட விலைய மொத்தமா போட்டுருக்க, அப்புறம் சுருட்ட வருஷா வருஷம் கண்ணு குட்டி போடும் அது நம்ம முதலுக்கு கிடைக்கிற மறு முதலீடு. (ஆகா இதுதான் ரெக்கரிங்க் டெப்பாசிட்டா?)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3

"எலிமண்டி"-ல் இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு, கடைசி வருசம். அடுத்த வருஷம் எப்படியும் ஹை-ஸ்கூலுல சேர்த்துடுவாங்க... ஸோ எஞ்சாய் ராஜா எஞ்சாய்.

5-பி, 'அரக்கன்' பூபதி கிளாஸ் டீச்சர். நெற்றியில் திருனீரை பூசியிருந்தால் அடி நிச்சயம். அடுத்து முத்து சார்... என் கணக்கு வாத்தியார், திருனீரு பூசவில்லை என்றால் அடிப்பார்... கரும்பலகையிலிருந்து "ஜாக்பீஸ்" தூலை நெற்றியில் இட்டுக்கொள்வோம்.

சரி இங்க ஒன்னும் விஷேசம் இல்லையா? இருக்கே. அட்வென்ச்சர் பண்ணியிருக்கேன்ல. மதியம் வீட்டுல சாப்பிட்டரமோ இல்லியோ... லன்ச் பிரேக்ல விளையாடுரது ரொம்ப ஸ்பெசல்... கட்டிங்க் போட்டு ஓடுரதுல நான் பலே கில்லாடி... ஆனா என் போராத நேரம் அன்று சறுக்கு மரத்துல ஏறிட்டேன், எதிரி ரெண்டு பேரு வலைச்சிட்டானுங்க... சும்மாவா அப்பிடியே மீன் மாதிரி வளைஞ்சி பின்னாடி வந்தவங்கிட்டே இருந்து தப்பிச்சி முன்னாடி வந்தவன் மண்டைல ஒரே இடி... நடராஜ் மண்ட பனால்... ஒரே ரத்தம். பயத்துல என்ன பண்ணருதுன்னு தெரியல... அவன என் பிரண்ட்ஸ் ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்று விட்டார்கள். திடீரென்று என் முன்னே பக்கத்து ஹை-ஸ்கூலில் படிக்கும் என் அண்ணன் என் முன்னால்... சரி எவனோ போட்டு கொடுத்த் விட்டான், இன்னிக்கி அடி பின்ன போரான்னு நினைச்சா... டேய் உன் மண்ட உடஞ்சி இருக்குடா வா ஆஸ்பத்ரிக்கு போவோம்னு சைக்கிளில் அள்ளிகிட்டு போனான். இன்றும் மறக்க வில்லை அந்த நாள், ராஜாமணி கம்பௌண்டர்... மயக்க மருந்து இல்லாமலே புருவத்தில் தையல் போட்டார். இப்போ எனக்கு ரெண்டு புருவத்துக்கு ஒரு புருவம் இலவசம்.

ஸ்போர்ட்ஸ்: தவ்வி கடித்தல் - நூலுல மேரி பிஸ்கட்-ட கட்டி ஆட்டுவாங்க... குறிபார்து கடிக்கனும்... அட அமெரிக்காவுல இததான் "பினாட்டா"-னு சொல்லுறாங்க...இது தவ்வி அடித்தல்.

சாக் ரேஸ் - என்னுடைய ஆல் டைம் பேவரிட்...எங்க வீட்டு களத்துல கடுமையா டிரைனிங்க் எடுப்பேன்.... மூனு வருசம் (ஹாற்றிக்) முதல் பரிசு வாங்குனேன்.

"எலிமண்டி" எலிமண்டி-ன்னு சொன்னனே அது என்னன்னு சொல்லாட்டி நல்லா இருக்காது...அது எலிமெண்டரி ஸ்கூல்... இப்ப எய்டெட் மிடில் ஸ்கூல் (உதவிபெரும் நடுனிலைப் பள்ளி) ஆயிடுச்சி.

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2

அந்த "எலிமண்டி" ஸ்கூலுல ஐந்து வருஷம் படிச்சேன். நண்பர்களில் பெரிய மாற்றம் இல்லை, அதே கூட்டம், அதே கொட்டம் வேற வேற வகுப்பறை.

3-பி, ராமன் ஸார். மீண்டும் ஒரு நல்ல சார். இங்க நான் ஒரு சுவராஸ்யமான ஒரு சேதி சொல்லியாகனும். மதிய உணவு - முழு நேர பள்ளி, 1 மணி நேர உணவு இடைவேளை, கட்டாயம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போகனும். அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஓறீரண்டு நாட்கள் டிஃபன் பாக்ஸ் சாப்பாடு வேணும்னு கேட்பேன். இதுல மேட்டர் என்னன்னா எடுத்துட்டு போன சாப்பாட்ட எவன் கிட்டயாவது கொடுத்துட்டு ஸ்கூல்ல போடுவாங்களே அந்த மதிய உணவ வாங்கி சாப்பிடுவேன். நான் படிச்சப்ப ரொம்ப ஸ்ட்ற்றிக்ட், சாப்பிட அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க, அதுல வீரா சார் ரொம்ப கடுமையானவரு. பரமசிவம் சாரும் ராமன் சாரும் என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க... டேய் "வேணு மகனே" இரு உங்க அப்பாகிட்ட சொல்லுரேன்னு மிரட்டிடுட்டு போயிடுவாங்க.

என்னதான் அரிசி மக்க வாசனை அடிச்சாலும்... நான் சாப்பிட்ட அந்த "வரட்டு கோதுமை உப்புமா", சுட சுட "சாம்பார் சாதம்" - இன்னும் என் நினைவில் நீங்காதவை.

4-பி, ஆக்கூர் சார், பெயர் செல்வராஜ்-னு நினைக்கிறேன். எனக்கு தெரிந்து ஆங்கிலம் அதிகம் சொல்லி கொடுத்தவர், அதற்க்காக நிறைய அடியும் கொடுத்தவர், கணக்கு சொல்லி கொடுக்க பாலு சார். படிப்பில் போட்டி இங்குதான் ஆரம்பம்... தாமரை டீச்சர் மகன் ஜவஹர், நான் மற்றும் டெயிலர் மகன் வாசன்... முதல் மூன்று ரேங்கை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தோம்.

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1

என் பொண்ணு பிரி-ஸ்கூல் என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது எங்க "எலிமண்டி" ஸ்கூலுதான். முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்...

என் 1-ம் வகுப்பு டீச்சரின் பெயர் "குண்டு டீச்சர்" (ஜெயலஷ்மி), பெயரை பார்த்த உடனே உங்களுக்கு தெரிஞ்சி இருக்கும்... பெரிய உருவம், காலைல வந்து நாற்காலியில் உட்கார்ந்தா மதியம் சாப்பட்டுக்குதான் எழுந்திருப்பாங்க. அருமையா பாடம் சொல்லி தருவாங்க. வாளு பையன்கள அவங்க அடிக்கிற விதம் இருக்கே... நெய்வேலி காட்டாமணி செடி... நெடு நெடுன்னு வளர்ந்து இருக்குமே, தினம் ஐஞ்சு ஓடச்சி கொண்டாந்து வைக்கனும்... அத வச்சு சும்மா பின்னு பின்னு பின்னுவாங்க. அட நான் நல்ல பிள்ளைங்க... ஃபர்ஸ்ட் பெஞ்ச்.

எனது நண்பர்கள்... ரவி, செந்தில், ஜவஹர், இங்கர்சால், காசினாதான் மற்றும் பலர். நாங்க எல்லாம் 1-வது பி செக்ஸன், ஹி...ஹி...எங்க ஸ்கூலுல 'எ' செக்ஸன் பெண்களுக்கு. ஸ்கூலுக்கு பின்னாடி வாய்க்கால், சமயத்துல ஒன்னு, ரெண்டு, மூனு போக ரொம்ப வசதியா இருக்கும். மத்தபடி என்ன மார்க் வாங்கனேன்னு எல்லாம் ஞாபகம் இல்ல.

சொல்ல மறந்துட்டனே... என் பேரு இளங்கோவனாம்... ஸ்கூலுல சேரும் போது "உன் பேரு என்னன்னு" கேட்டதுக்கு ராஜா-ன்னு நான் சொன்னதால அதுவே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாம் என் அக்கா.

2-பி, 1-அம் வகுப்பு மாதிரி இல்ல இப்ப ரெண்டு சார், ஒன்னு கிளாஸ் டீச்சர் பரமசிவம் சார், இன்னொன்னு டிரில் சார் அவர் பெயர் ராஜேந்திரன். பரமசிவம் சார் தான் 2-ம் வகுப்பு சார்ல ரொம்ப நல்ல சார், யாரையும் அடிக்க மாட்டர். நான் அவர்கிட்ட நிறைய படிப்பு கத்துகிட்டேன். அந்த இங்கர்சால் இருக்கானே... அவந்தான் என்கிட்ட தகறாரு பண்ணுவான், அடிப்பான், கிள்ளுவான்... அவன நான் ஆளு வெச்சு (என் அண்ணன்) அடிப்பேன்.