பொங்கல் விழா அழைப்பு

நண்பர்களே வணக்கம்!

கிரேட்டர் அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக பட்டிமன்றம் புகழ் ராஜா அவர்கள் கலந்து கொள்கிறார், வாழை இலையில் சாப்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள்... அட்லாண்டா வாசிகளும் அருகில் உள்ளோரும் வந்து கலந்துகொண்டால் பெரும் மகிழ்ச்சியடைவோம்... நன்றி.


பட்டிமன்ற ராஜாவின் அழைப்பு... படத்தை தொடுக்கவும்

2011-ல் மீண்டும் 2ஜி புயல்...

ஹி... ஹி... அது தமிழகம் வந்த நம்ம மன்மோகன்ஜி-யும், அவருக்கு தண்ணி காட்டின கலைஞர்ஜி-யும்தான்...






அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அஞ்சா நெஞ்ஜன் அசாங்...

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் பால் அசாங் பற்றி நிறைய படித்திருப்பீர்கள், இல்லையேல் பதிவர் சுடுதண்ணி-ய படிங்க. இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.




தகுதி என்பது...1

காஞ்சி மகாப் பெரியவர் பற்றி திரு.சுகி சிவம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன்... ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் அல்லது பொது நலச்சேவையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், சிலர் எப்படி வாழ்ந்தார்கள் என்று சொன்னார்... அப்படி நான் கேட்டதில் ஒன்றிரண்டு... நன்றி சொல்வேந்தர் சுகி அவர்களுக்கு.


அன்று வழக்கம் போல் பூசை முடிந்தது, மகா பெரியவர் தனக்கு பிட்சை (உணவு) வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். சரி பெரியவருக்கு பசியில்லை போல என நினைத்து அலுவலர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளும் பெரியவர் பூசை முடித்து போசனம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். மடாலய நிர்வாகிகளுக்குள் சற்று பயம், ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர், யார்-என்ன-ஏது நடந்தது என தகவல் பறிமாற்றம் தீவிரமடைந்தது.

மூன்றம் நாள், பெரியவர் வழக்கம் போல் பூசையில், இன்று எல்லா மட நிர்வாகிகளும் ஆஜர், பிட்ஷைக்கு அழைப்பு, பெரியவர் மறுப்பு. மடத்தின் நிர்வாகிகள் இன்று நாங்கள் செய்த தவறு தெரியாமல் வேறு வேலை செய்யப்போவது இல்லை (உணவு உண்பது உட்பட) என்று பெரியவரிடம் சொல்ல, பெரியவர் சொன்னாராம்... சரி என்னை விடமாட்டீங்க போல இருக்கு, தவறு செய்தது நான் தான் என்றும், அதற்க்கு தண்டனையாய் உணவருந்தாமல் இருப்பதாகவும் சொன்னாராம்.

கீரைக்கு ஆசைப்பட்டு...


அவர் அப்படி என்ன தவறு செய்தார் தெரியுமா? பெரியவர் சொன்னதாக..
ஒரு நாள் (பிட்ஷை வேண்டாம் என்று சொன்ன மூன்று தினங்களுக்கு முன்) உணவில் கீரை சாப்பிட்டேன், நன்றாக இருக்க கொஞ்சம் அதிகம் சாப்பிட்டேன், அதை கவனித்த மட சிப்பந்தி இரண்டாம் நாளும் அந்த கீரையை சமைத்து பறிமாறினார், அன்றும் நன்றாக சாப்பிட்டேன். மூன்றாம் நாள் பூசையின் போதே மனம் பூசையில் ஒட்டாமல் இன்றும் சமையலில் கீரை இருக்குமா என்று நினைக்க ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையை ஒழிக்கவும், பூசையில் மனமில்லாமல் உணவை நினைத்ததிற்காகவும் நான் எனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனை இது, நீங்கள் அவர் அவர் தங்கள் அலுவல்களை கவனியுங்கள் என்று சொன்னாராம்.

பெரியவர்... தன் செயல்பாட்டால் என்றுமே பெரியவர்.

என்னை மன்னியுங்கள் அப்பா...

உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது
விவசாயத்தில் விழுந்து விழுந்து
உடலும் மனமும் காயம் ஆகும்முன்
உன் ஆடை சாயம் போகும்முன்
படி படி என்றாள் அம்மா.



படித்தவுடன் வேலையை
பிடி பிடி என்றாள் பாட்டி
உள்ளூரிலே வேலை ரொம்ப
கடி(னம்) கடி(னம்) என்றாள் மனைவி
விவசாயத்தை விட்டேன்
விமானத்தை தொட்டேன்.



கலந்துரையாடைலில் நண்பர்கள் சொன்னார்கள்
என் அப்பா டாக்டர்... நானும் டாக்டர்
என் அப்பா எஞ்ஜினியர்... நானும் எஞ்ஜினியர்
அப்பா... நான் என்ன சொல்ல?
மவுனமாய் இருந்து விட்டேன்
விவசாயத்தை மறந்து விட்டேன்
அப்பாவை மறைத்து விட்டேன்...

என்னை மன்னியுங்கள் அப்பா...

இன்னா பேசுர நீ?

தமிழ்தான் பேசுரேன்னு சொன்னீங்கன்னா சந்தோசம்.

இன்னா தமிழு அது? தஞ்சாவூரா, மதுரையா, திருநெல்வேலியா, கோவையா இல்ல சிங்கார சென்னையா?

தமிழ அழகா எப்பவும் எங்க மண்வாசனையோடுதான் பேசுவேன்னு சொன்னீங்கன்னா ரொம்ப ரொம்ப சந்தோசம்.

அது உங்களுக்கும் உங்க உடல் நலத்திற்க்கும் நல்லது. மற்றவரைப் போல பேசுதல் தலைவலியில் ஆரம்பித்து நம் உயிரையே எடுக்கும் அபாயம் கொண்டதாம்.

இன்று தொலைகாட்சி பார்த்தபோது இதுபற்றிய தகவல் அறிந்தேன், அதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இது பேசும் தன்மை பாதிப்பு (மன நல பாதிப்பு மாதிரி) – ஸ்பீச் டிஸ்ஸாடர்/SPEECH DISORDER-ன்னு சொல்லி, அதை ஒரு உடல் நலக் குறைவு அல்லது நோய் என்று வகைப்படுத்துறாங்க... பேர் இன்னா நைனான்னு யாங்கைல கேட்க்காதீங்க... அவங்க அத “ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம்”-ன்னு சொல்றாங்க.

நாங்க ஃபாரினே போகல எங்களுக்கு எப்படி ஃபாரின் ஆக்ஸண்ட் சிண்ட்ரோம் வரும்ன்னு கேட்க்க கூடாது. நம்ம ஊருல உள்ள முள்ளு நம்ம ஊருலயே நம்ம கால்ல குத்தினால் நமக்கு சீழ் பிடிக்கும், காரணம் முள்ளு (மரத் தூள்) நம்ம பாடிக்கு ஃபாரின் பாடி, அதான் ஒவ்வாமைன்னு சொல்லுவேமே அந்த அலர்ஜிதான்.

எலே என்னலே சொல்றே, தமிழ மாத்திபேசுனா தலவலியாம்லேன்னு லேசானா விசயமா நினைக்காதீங்களே... இத படிச்சி பாருங்களே...

விக்கி என்ன சொல்லுதுன்னா...

மேலதிகத் தகவலுக்குன்னா...

கண்ணு, ரோமாபுரியில் இருக்கும் போது ரோமானியனா இருன்னு சொல்லியிருக்காங்க, அத வுட்டுபோட்டு சிண்ட்ரோம் காந்திபுரம்ன்னு சொல்லிகிட்டு திரியிரிங்கன்னுதான கேட்கிறீங்க?

புரியிது... புரியிது. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த நம் இந்திய மக்கள், அதுவும் குறிப்பா நம் தமிழ் மக்கள் அமெரிக்கர் மாதிரியே ஆங்கிலம் பேசி அசத்துரதுல கெட்டிக்காரங்க. வாயில ‘ர’-வே வராம ‘ழ’-வாவே பேசுவாங்க... வென் ஐ டிழைவ் த காழ்-ன்னு பெருமையா பேசுவாங்க. பேசுங்க... நீங்க உங்கள் பணி சம்பந்தமா உங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது பேசுங்க. நம்மவர்களுடன் பேசும்போது நார்மல பேசலாமே?

இங்க ஒரு அம்மா சாமி வந்த பூச்சரியா பேசுது கிளிக்கி பாருங்க.

நாம் நம் மனத்தாலும், சொல்லாலும்/பேச்சாலும், செயலாலும் நாமாக இருக்கும்போது நாம் எந்தவகை சிண்ட்ரோமையும் வென்றோம் என்று சொல்ல முடியும்தானே?

ஓம் டெக்னாலஜியே நமக...

வீட்டில்...

ஒரு இடத்துக்கு போகனும்னா நேரம் காலத்தோட வர்றியா? எப்ப பாரு லேட்டு லேட்டு லேட்டு.
ஏன் சொல்ல மாட்டீங்க, மருந்துக்கு கூட ஒரு வீட்டு வேலை செய்யறது கிடையாது, எல்லாத்தையும் செய்துட்டுதான வரனும்.
நீ ஒன்னும் செய்யவேணாம் வா, மேக்கப்ப கூட கார்லயே போட்டுக்கலாம்.
காரில்...

என்னங்க, ரூம் லைட்ட ஆஃப் பண்ணினீங்களா?

என்ன எங்கிட்ட கேட்கிற? நீதான கடைசியா ரூம்லேருந்து வந்த... லைட்ட ஆஃப் பண்ணலியா?

இல்லீங்க நான் ஆஃப் பண்ணினதா ஞாபகம் இல்லை. அடுப்புல உங்களுக்கு குடிக்க வெண்ணீர் போட்டேன்... நீங்க படுத்தின பாட்டுல அதையும் ஆஃப் பண்ண மறந்திட்டேன்.

சரி சரி விடு... டென்ஷன் ஆவாத, என் ஃபோனில் ஹோம் பேஜ் போ, அதுல ஹோம் அப்லையன்ஸ்ன்னு ஒரு ஆப் இருக்குபாரு, அதுல எது ஆணாயிருக்கோ அதையெல்லாம் ஆஃப் பண்ணு.
சிறிது நேரத்திற்க்குப் (மேக்கப்) பிறகு...

என்னங்க, இன்னிக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இருக்கே, டி.வி ரெக்கார்டர ஸ்கெடியூல் பண்ணியிருக்கீங்களா?

நான் டி.வி.ரிமோட்ட தொட்டு ரெண்டுநாள் ஆவுது, எல்லாத்தையும் இப்ப வந்து கேளு, வீட்டுல அப்படி என்னாத்த வெட்டி முறிக்கிறியோ தெரியல.

ஆ...ஊ-ன்னா அதையே சொல்லுங்க. அதான் வெட்டினாலே துண்டாயிடுமே அதையேன் முறிக்கனும்? இல்ல தெரியாமத்தேன் கேட்கிறேன்... பதில் சொல்லுங்க.

போனாப் போவுது டி.விய ரெக்கார்ட் பண்ணுவோம்ன்னு நினைச்சேன்... கேள்வியா கேட்கிற நீ?

அட உடனே கோவிச்சிக்காதீங்க, வீட்டோட ரெண்டு சாவியும் நம்மகிட்ட இருக்கு, எப்படி யார விட்டு ரெக்கார்ட் பண்ண சொல்றது?

என் ஃபோனுல அதுக்கும் ஒரு ஆப் இருக்கு பாரு, அதுல டைரக்ட் டி.வி-ன்னு ஒன்னு இருக்குல்ல, அதுல சேனலையும், நாளையும், டையதையும் போட்டு ஓ.கே பட்டன அழுத்து.

என்னங்க... கமலஹாசன் ஒரு படத்துல சொல்லுவாறே... நிஜமாவே டெக்னாலஜி காட் ஸோ இம்ப்ரூவ்டுங்க.
வாயாலதான் சொல்லுற... வீட்டிற்க்கு செட்பண்ணியிருக்கிற ஆட்டோமேட்டிக் அலார்ம் சிஸ்டத்த நம்பாம இன்னும் ஊருலேருந்து எடுத்துகிட்டு வந்த திண்டுக்கல் தொட்டிப்பூட்டல்ல போட்டு பூட்டுற.

அய்யய்யோ...

என்னாச்சு... லிப்ஸ்டிக்க மறந்துட்டு வந்திட்டியா?

இல்லைங்க, பூட்ட பூட்டி இழுத்துப் பார்க்க மறந்துட்டேங்க... உங்க ஃபோனுல ஏதாவது ஆப் இருக்கா?

அம்மா தாயே... சத்தியாம அதுக்கெல்லாம் ஆப் இல்லம்மா, முடிஞ்சா எந்திரன் வசீகரன கூப்பிட்டு சிட்டி சும்மா இருந்தா ஒரு எட்டு போயி பூட்ட இழுத்து பார்த்திட்டு வர சொல்லு.

வேணாங்க வேணாம்... அது பூட்டோட கதவையும் இழுத்து பார்க்கும். சொந்த காசுல சூனியமா? வேண்டவே வேண்டாம்.

சும்மா படம் காட்ட...

அப்போது ஃபோன் சினுங்குகிறது...

அம்மாடி ஃபோனு உங்கிட்டதான இருக்கு, யாரு கூப்பிடுறாங்கன்னு பாரு...

உங்க பாஸுங்க...

அவன் கிடக்கிறான் லூஸு, நான் இன்னொரு லைன்ல இருக்கேன் என்னன்னு கேளு.

.....

என்ன சொன்னாரு?

நீங்க பண்ணுன அப்பிளிகேஷன் ஊத்திகிச்சாம், உங்க எல்லோருக்கும் ஆப்பு அடிக்க உங்க பெரிய லூஸு...சாரிங்க... பெரிய பாஸு வராராம், அதனால் திங்க கிழமை வொரிகிங் ஃபிரம் ஹோம் போடாம ஆப்பீஸுக்கு வரச் சொன்னார்.

ஏங்க ஃபோனுல ஆப் இருக்கு... ஆப் இருக்குன்னீங்க... இப்படி ஒரு ஆப்பு இருக்குன்னு சொல்லவே இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.