அன்றும்... இன்றும் – 2

அன்று, மாலை வழக்கம் போல் பூப்பந்து விளையாடிவிட்டு சற்று இளைப்பாறும் வேளையில் அந்த வருடத்திற்க்காண விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச்சு வந்தது. உடனே ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார் சரி அனைவரும் இன்று இரவு யோசித்து வந்து சொல்லுங்கள், இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும். மற்றவைகளை நாளை பேசலாம். (ஏன் பெரிசு எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுபுட்டு சொல்ல மாட்டீங்களா?)

இன்று, நண்பர்கள் ஒருவருக்கொருவர் கைத்தொலைபேசியில் அழைத்து இந்த ஆண்டு கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச, உடனே ஓரிரு தினங்களில் ஒரு குழுச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. (என்னப்பா எல்லோருக்கும் ஓ.கே-தான? இல்லன்னா சொல்லுங்க சந்திப்ப ரெண்டு நாள் தள்ளி வச்சிக்கலாம்...அது சரி)

மாலை விளையாட்டு முடிந்தவுடன் மூத்த உறுப்பினர் வழக்கம் போல் தேனீர் அருந்தும் போது அனைவரையும் விழா பற்றிய விருப்பங்களை கேட்டு சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை எவ்வளவு, யார் யார் எந்த வேளையை பார்க்க போகிறோம் என்பதும், எப்போது என்பதும் முடிவாகியது. (திண்ணையும் சொம்பும் இல்லாமலேயே தீர்ப்ப சொல்லி முடிச்சிட்டா எப்பூடி? ரொம்ப லோக்கலால்ல இருக்கு!)

குழுச் சந்திப்பில் முதல் வேலையாக, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு யார் இந்த நிகழ்வை/குழுவை தலைமை தாங்கி நடத்துவது என்பதற்க்காண வாக்கெடுப்பு மற்றும் வெவ்வேறு குழுக்களின் தலைமை மற்றும் குழு உறுப்பினர்கள் யார் என முடிவு செய்யப்பட்டது. (என்னதான் இருதாலும் படிச்சவங்க இல்லியா? ஜனநாயக முறைப்படி நடந்துகிறாங்க... திங்க் குளோபல்!!)

நான் நம்ம காவல் நிலையம் சென்று புதிதாக வந்துள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளரை விழாவிற்க்கு அழைக்கிறேன், அவர் விளையாட்டு பிரியராம். (திடலிலேயே முடிவு எடுத்திடுராங்க, திடமான முடிவாய் எடுக்கிறாங்க).

நான் நம்ம நகைக் கடைக்கார்ர பார்த்து பரிசுக்காண ஏற்பாட்டை செய்திடுறேன். ( நம்பிக்கையும் வாக்கும் தானே வாழ்க்கை)

நான் நம்ம அரிசி மண்டி தம்பி, மற்றும் மளிகை கடைகளை பார்த்து உணவுக்கு பொருட்களை தயார் பண்ணிடுறேன். (வருசா வருசா கேட்டாளும், எப்படி அண்ணே உதவி பண்ணுறீங்க... ரொம்ப பெரிய மனசுன்னே)

நான் நம்ம அச்சகத்துல கொஞ்சம் நோட்டீஸ் அடிக்க சொல்லிட்டு, அப்படியே நிருபரை பார்த்து செய்திதாள்கள்ல வர ஏற்பாடு பண்ணிடுறேன். (ஹேய்... அந்த கலர் நோட்டீஸ்தான? சைக்கிள்ல போயி குடுப்பீங்களா இல்லை மாட்டு வண்டியா?)


டேய் குட்டிப் பசங்களா... நீங்கதாண்டா களப்பணி எல்லாம் செய்யனும்... தயாரா இருங்க. (சின்ன பிள்ளைகலா வேலை செய்தாலும் சிறப்பா செய்வோம்ல)

விழாக் குழு தலைவர்... யார் சீஃப் கஸ்ட காண்டாக் பண்ண போறீங்க? நம்ம குழுவப் பத்தி ஒரு மெயில் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஒன்னுக்கு ரெண்டுபேரா பார்த்து பேசுங்க. ஒருத்தவங்கதான் வருவதா இருந்தா அவங்களே எல்லா பரிசையும் கொடுக்கட்டும். ரெண்டு பேர் வந்தா இன்னொருத்தவங்க நம்ம வாலியண்டர்ஸுக்கு மெமண்டோ கொடுக்கிற மாதிரி பண்ணிடலாம் (ரூம் போட்டு யோசிக்கிறாங்க...பிளான் – ஏ, பிளன் – பி எல்லாம் இல்லாட்டி எப்பூடி?)

பைனான்ஸ் டீம்: பட்ஜெட் தயார் பண்ணிகிட்டு இருக்கோம், ஸ்பான்ஸர்ஸ் லிஸ்ட் அடுத்த வாரம் தயார் ஆயிடும். (பார்த்து பட்ஜெட்ல துண்டு விழுந்திட போகுது....அவ்வ்வ்வ்வ்)

லாஜிஸ்டிக் டீம்: நாங்க விளையாட்டு திடல், பந்து மற்றும் வந்து போகிறவர்களுக்காண சாப்படு உதவி/ஏற்பாடுன்னு வேலைய பிரிச்சிக்கிறோம். (ஸ்பான்ஸ்ர்ஸ்க்கு பூத் கொடுக்கனுமா? அவங்க எல்லாம் கோவிச்சிக்க போறாங்க)

கம்மியூனிகேஸன்ஸ் டீம்: நாங்க மெயில் எஸ்கலேசன், கடைகளுக்கு ஃபிளையர்ஸ், நியூஸ் ஜேர்னல்ஸ் போஸ்டிங் (தமிழ் மணத்துல உண்டா?) வேலைகள பார்த்துக்கிறோம். (அய்யோ... இன்னொரு ஜங்க் மெய்லா? ஏன் பில்டர் ஆவுல?)

யூத் டீம்... நீங்க உங்களுக்கு பிடிச்ச டீம்ல உதவி பண்ணுங்க. உங்க திறமைகள வளர்த்துக்க இந்த விழாவை சரியா பயன்படுத்திக்கோங்க. (அதெல்லாம் நாங்க பண்ணுவோம், நீங்க எல்லாம் உள்குத்து இல்லாம வேலை செய்ங்க)

அன்றும் விழாக்கள் சிறப்பாக நடந்தன,
இன்றும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.

அன்று ஒரு குடும்பமாய்...
இன்று பல குழுக்களாய்.

எந்திரன்... மந்திரன்... தந்திரன்

பல திறமைசாலிகள் ஒன்றிணைந்து விரைவில் நாம் வெள்ளித்திரையில் காணக் கிடைக்கப்போகும் ஒரு பெரிய விருந்து எந்திரன். இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. மிகப் பெரிய வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொலவை காட்டும் கல், சராசரி படமாக இருந்தால் சினிமா என்ற நெடுந்தொலைவு பயணித்தில் சற்றே அமர்ந்து செல்ல ஒரு ஒய்வுக் கல்.

எந்திரன்... ரஜினி, அவர்தானே கதாநாயகன். ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதை தருவதில் ரஜினி என்றும் ஏமாற்றியது இல்லை. ஆக்‌ஷன், ஸ்டைல், சிரிப்பு, டயலாக் டெலிவரி... அது குசேலனோ, சிவாஜியோ இல்லை எந்திரனோ அவர் பகுதியை சிறப்பாக செய்திருப்பார்.

மந்திரன்... சங்கர், அவர்தானே இயக்குனர். தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முந்தைய படத்தினை விட அடுத்த ஒரு படி மேலே செல்ல என்ன செய்ய வேண்டும் என யோசிப்பவர். சிவாஜி இயக்குனர் சங்கரை வெல்வது எப்படி என சிந்தித்து நிச்சயமா எந்திரனில் பல புதிய மந்திரங்களை உச்சரித்து இருப்பார்.

தந்திரன்... கலாநிதிமாறன், அவர்தானே தயாரிப்பாளர். வியாபார தந்திரம் அறிந்த எந்திரன் & மந்திரன். காசை போட்டு காசை எடுக்கும் இயந்திரம் எந்திரன் என்பதை அறிந்து இயக்குனர் கேட்ட கோடிகளை கொட்டிக் கொடுத்த (கேடி) மந்திரன். இசைத் தகடு வெளியீட்டை வெளிநாட்டில் (மலேசியாவில்) வெளியிட்டு முதல் வருமானத்தை வெள்ளிகளில் (டாலர்களில்) வெள்ளாமை செய்ய ஆரம்பித்து விட்டார். இனி எந்திரன் எழுத்தது, ஆயிபோனது, பல்துலக்கியது என்று இரவு எந்திரன் தூங்கப்போனது வரை அனைத்தையும் சன் நெட்வொர்க்கில் நீங்கள் பார்த்து ர(இம்)சிக்கலாம். அதுதானே அவரது வியாபார தந்திரம்.

எந்திரனோ, மந்திரனோ இல்லை தந்திரனோ, ஒரு இந்திரனாக தமிழ் சினிமா ரசிகர்களை இரட்சித்து மகிழ்விக்க வேண்டும்.

கலியுகமா இல்லை பலியுகமா?

ஆட்டுரலில் குழவி நின்று கல் சுற்றியது
கலி காலமாம்

தொடர்வண்டி நீராவியில்லாமல் ஓடுகிறது
மின்சாரத்தின் உதவியாம்

தொடர்பில்லாமல் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
தகவல்தொடர்பின் புதுப் பரிணாமமாம்

கடல் நீரைக் குடி நீராக்கி குடிக்கப்போகிறோம்
சுழற்ச்சி மாற்றமாம்

ஆமாம், இவையெல்லாம்
கலியுகத்தின் மாற்றம் பலியுகத்தின் தோற்றம்.

மறந்து விட்டோம் பண்பாட்டை
இழந்து விட்டோம் செயல்பாட்டை

அறிவியல் ஆடுகிறது வேட்டை
ஓசோனில் போடுகிறது ஓட்டை

தெரிகிறதா அதுகாட்டும் நடைபாட்டை?
அடையப்போகிறோம் விரைவில் சுடுகாட்டை.

வண்ணாந்துறை

ஒவ்வொரு நாட்டிலும் சைனா டவுன் இருப்பது போல் வண்ணாந்துறையும் இருக்கும் போல, சென்னையில் அது வண்ணாரப் பேட்டை, சிங்கப்பூரில் அது தோபி காட் (பிரிட்டிஷ் காலணிகளில் என்று நினைக்கிறேன்).

அன்று வண்ணாந்துறையில் அழுக்கு வெளுக்கப் பட்டு பலரும் பொலிவுடன் வளம்வர காரணமாயிருந்து உள்ளது. இன்று அந்த வண்ணாந்துறைய மையமாக வைத்து ஒரு சிறந்த தமிழ்ப் படம் வந்துள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய இயக்குனர்களின் மனதை வெளுக்குமா?

ஒரு படத்தின் கதாநாயகன் அதன் இயக்குனர் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது, ஹீரோ-தான் மாஸு என சொல்பவர்கள் என் பார்வையில் வெரும் லூஸு. வெரும் வெளிர் வெள்ளை வேட்டியில் ஒரு கதா நாயகனை இன்று நம் கண்ணில் காட்டியுள்ளது இப்படம்.

வடநாட்டு கோழியைப் போட்டு வறுத்தால் மசாலாவாக இருக்கும் என்று எண்ணி கதையை நம்பாமல் வெள்ளைச் சதையை நம்பி படம் பண்ணும் இயக்குனர்களின் நம்பிக்கையை வெளுக்க இதோ ஒரு தமிழ்ப் படம். அறைகுறை ஆடையில் (ஏமி ஜாக்ஸன்) – அள்ளித்தர இருந்தாலும் அவரை அழகியாக (ஏமி மில்கின்ஸனாக) காட்டியவர் இப்பட இயக்குனர்.

டெக்னாலஜி ஹாஸ் ஸோ இம்ப்ரூவ்ட் ஆனால் இயக்குனர் சைக்காலஜி ஹாஸ் ஸோ டேமேஜ்ட், கணணி வரைகலையை இப்ப உள்ள படத்துல பார்த்து கண்கள் அவிந்து போனதுதான் மிச்சம் என்று சொல்லும் அளவிற்கு கதாநாயகன் கைய தூக்குனா மின்னல் வெட்டுது, கால தூக்குனா பொறி பறக்குது, கதாநாயகி நடந்து வரும்போது கலர் கலரா உடை மாறுது என்ற மாயை கலர்களை வெளுத்து சிங்கார சென்னையை கருப்பு வெள்ளையில் அழகாக காட்டுவதற்கு கணணி வரைகலையை பயன் படுத்திய இயக்குனருக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.

இப்படி பல இடங்களில் வெளுத்து வாங்கி,

தமிழ் சினிமாவில்
கதைக்கு இல்லை வெற்றிடம்
சதைக்கு இல்லை புகளிடம்
நல்ல இயக்குனரிடம்
மனம் இருந்தால் எடுக்கலாம்
மதராசப்பட்டினம் போல் வெற்றிப்படம்

மதராசப்பட்டினம் – இன்றைய தமிழ் சினிமா இயக்குனர்களின் மன அழுக்கை வெளுக்க வந்த வண்ணாந்துறை.

எனக்கு சாதி பிடிக்கும், மதம் பிடிக்கும்

சத்தியமாய்
சாதிப் பிடிக்காது
ஆனால்
மதம் பிடிக்கும்.

மதம் பிடிக்கும்
சில சமயங்களில்
எனக்கு
சாதியைப் பிடிக்கும்

சண்டாளா
சாதி மதம் பிடிக்காதென்று
பதிவு எழுதி பேசியது?

பேசியது உண்மைதான்...
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
அதை மீண்டும் உணர்த்திச் சொல்லப் பதிவு

பதிவெழுதி பதிவெழுதி
பலவேலைகளை நான் கால தா-மதம் செய்தும்
அதை பொருட்-படுத்தாத
என் பெண்-சாதியை பிடிக்கும்
அதை பொருட்-படுத்தினாலும்
மதம் பிடிக்காத பெண்-சாதியை பிடிக்கும்

தா-மதம் தா-மதம் என்றாலும்
இன்னுமொரு இடுக்கை இடவில்லையா
என பதிவெழுத சம்-மதம் சொல்லும்
மதம் பிடித்த பெண்-சாதியை பிடிக்கும்.

குடைச்சல்...

ஒருவன்தான் உணவுண்டேன்
சோற்றுடன் கறி ஒன்று
ஒழித்துப் போட்டேன்
பத்துப்பசை பாத்திரங்கள் ஒன்பது
கழுவிப் போட்டேன்
கையெல்லாம் வலி குடையுது

என்னவளை எண்ணினேன்
நித்தம் கறி இரண்டு
ஒழித்துப் போடப்போட
வற்றா பத்துப்பசை பாத்திரங்கள்
கைவலித்ததாய் செவிமடிக்கவில்லை
மனதெல்லாம் வலி குடையுது

கவி.பர்வீன் சுல்தானாவிற்கு நன்றி

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பது – அன்று
கருணாநிதி வீட்டிக் கட்டில்தறி கவிபாடியது – இன்று

கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிஞர் பர்வீன் சுல்தானா
கவிதையாய்
பாரில் இனி உன் தமிழ் சொல் தானா?

அவையில் உங்களை
பேசச்சொல்லி அழைத்தவர் துணைத்தலைவர் ரவி
கேட்டு ரசித்ததோ அவையில் உள்ளோரின் செவி.

தலைப்போ சிகரம் தொட்டு
தலைப்போ “பெண்மையின்” சிகரம் தொட்டு
திகைத்தோம் உங்கள் உரையைக் கேட்டு
காரணம் – நீங்கள் பேசியவை
ஒவ்வொன்றும் எங்கள் மனதைத் தொட்டு.

நீங்கள் பேசியதெல்லாம் பெண்ணின் “சுயம்”
அதைக்கேட்ட ஆண்களுக்கு சற்றே பயம்.

அகநானூறு சொன்னீர், புறநானூறு சொன்னீர்
ஆம், அகம் சொன்னீர், புறம் சொன்னீர்
அகமோ, புறமோ
உங்களால் இந்த முத்தமிழ் விழாவில் நாங்கள் பெற்றது
தமிழ் எனும் சுகம் சுகம் சுகம்.