அன்றும்... இன்றும்... -1

அன்று...
ஆசிரியர்: முருகா, வர வெள்ளிகிழமை விளையாட்டு போட்டிக்கு ஒரு 100 பேர் உட்கார பெஞ்சு போடனும்டா... அந்த வேளைய நீ பார்த்துக்கோ.

இன்று...
நண்பர்: முருகன், வர வெள்ளிகிழமை பிறந்த நாள் பார்ட்டி, ஒரு 100 பேர் உட்கார நாற்காலி ஏற்பாடு பண்ணும்... அத நீங்க பார்த்துக்கிறீங்களா?

முருகன்: சரி சார், காலைல ஏ.பி சார்கிட்ட சொல்லி அட்டெண்டன்ஸ் போட்டுட சொல்லுங்க... நான் கூட ரவிய அழைச்சிகிறேன், விளையாட்டு மைதானத்துல மதியம் பெஞ்ச இறக்கிடுறோம்.

ஒன்னும் பெரிய விசயம் இல்ல, ஒரு ஒன் அவர் அவே ஃப்ரம் டெஸ்க்னு போட்டுட்டு, மதியம் லன்ச் பிரேக்ல போயி எடுத்து கொண்டுவந்து வீட்டுல போட்டுடுறேன்.

டேய் ரவி வாடா ஒரு 20 பெஞ்சு ஏத்தனும், எங்க சிகப்பு காளை மாட்ட ஓட்டிக்கலாம், எங்க பார வண்டி சரிபடாது, உங்க வீட்டு டயர் வண்டிய எடுத்துப்போம், நம்ம தெருவிலேயே எடுத்து கொண்டாந்து இறக்கிடலாம்.

கணேஷ், லன்ச் பிரேக்ல ரெண்ட்-ய-பிளேஸ் வரை போயி கொஞ்சம் சேர் ஏத்திட்டு வந்திடலாமா? என் வண்டில ஏத்த முடியாது, யூகால்ல டிரக்க எடுத்துக்கலாம், அப்படியே ராஜ் வீட்டுல இறக்கிட்டு வந்திடலாம்.

பாட்டி: முருகா, பெஞ்ச ஒடைச்சி கொண்டாந்து போடுறீங்களா? காலு நொடிக்குது?

சேல்ஸ் லேடி: எச்சூசுமி, ரெண்டு சேரு டேமேஜ் ஆயிருக்கு

முருகன்: பாட்டி, அது ஏத்தும் போதே நொடிச்சிகிட்டுதான் இருந்துது... நீ பாக்கு இடிச்சி இடிச்சி... நொடிச்சி போச்சி. கவலை படாத அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு ஆசாரியார் வராரு அவர கூட்டிவந்து சரி பண்ணிதரேன்.

நாங்க செக் பண்ணல, உங்க டெலிவரிமேன் தான் லோட் பண்ணுனார், இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுத்திருக்கோம், அதுல கவர் பண்ணிக்கோங்க.

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...
ஆனால் முருகனும் நானும் வேறல்ல...


இந்தியாவில் பாதி... அமெரிக்காவில் மீதி...
அன்றும் இன்றும் நம் நினைவுகள் ஒன்றல்லோ...


இத கவியரசர் கண்ணதாசன் எவ்வளவு அழகா பாட்டா எழுதியிருக்கார்.... கேட்கனுமா... இங்க அழுத்துங்க.

சோதனை

இனிய காலை பொழுது, நண்பர்களுடன் வழக்கமாக கூடும் இடத்தில் அன்றும் வழக்கமான விசயங்களை பேசிக்கொண்டிருந்தான். அஞ்சல்காரர் அவ்வழி கடக்கும் போது சொன்னார்... தம்பி உங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது அதை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று.

கடிதம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. என்ன விவசாய கூட்டுறவு சங்கத்திலிருந்து கடன் கட்டச்சொல்லி வந்திருக்கும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டு நண்பர்களுடனான அரட்டையை தொடர்ந்தான்.

தெரு கைப்பம்பில் தண்ணீர் எடுக்க வந்த நண்பனின் அம்மா நண்பனை காலை சிற்றுண்டிக்கு கூப்பிட்டார், வழக்கம்போல நண்பர்களையும். நண்பர்கள் மறுத்து... மீண்டும் மாலை சந்திப்பதாக கூறி அவர் அவர் இல்லம் சென்றனர்.

வீட்டில் இட்டிலியுடன் அம்மா கடிதத்தையும் கொடுத்தார்... இதை பார் ஏதோ அரசாங்க கடிதம் போலிருக்கிறது என்று. உறையின் முகப்பை பார்த்தவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி... ”எய்ம் ஹை”, இந்திய விமானப் படையின் தாரக மந்திரத்துடன் வந்திருந்தது அந்த கடிதம்.

விவசாய குடும்பத்தில் பிறந்து அறிவியல் முதுகலை பட்டம் பெற்ற அவனுக்கு, ஊதியத்துடன் முனைவர் படிப்பும்பெற வாய்ப்புடனுள்ள ஒரு வேலைவாய்ப்பிற்க்கான அழைப்பானை அது. ஒரு வாரம் மைசூர் இந்திய விமான பயிற்ச்சி மையத்தில் உடல் மற்றும் அறிவு சோதனை, தேர்ச்சி பெற்றால் ஐந்தாம் நாள் நேர்முக தேர்வு என்றும், சென்று வர செலவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று கூறியது கடிதம்.

முதல் நாள் இரவு தொடர்வண்டி பயணம், மைசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல இந்திய விமானப்படைக்கு சொந்தமான லாரி வந்திருந்தது. மையத்தில் அழைப்பானை சரிபார்க்கப் பட்டு பயிற்சி சீருடைகள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்பட்டது.

முதல் நாள் “டெஸ்ட் ஆஃப் ரீசனிங்”, முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற வடிவங்களின் வரிசை பற்றியும், எண்களின் தொடரமைப்பு பற்றியுமான சோதனை. நெல்லை பார்த்து இது ஐ.ஆர்.எட்டு, டி.கே.எம்.ஒன்பது என்று சொல்லும் ஸ்லம்டாக் விவாசாயிக்கு இது ஒரு பெரிய சோதனையாக இல்லை, மிகச் சுலபமாக கையாண்டான்.

இரண்டாம் நாள் “டெஸ்ட் ஆன் பிஸிகல் பிஃட்னஸ்”, ஓடுதல், தாண்டுதல், கயறு ஏறுதல், வளையத்தில் புகுந்து வருதல் போன்ற சோதனை. வைக்கோல் பிரியை மாங்காய் மரத்தில் கட்டி ஏறிய அனுபவம், கோடை எள் சாகுபடியின் போது கட்டி முட்டியில் ஆடுகளை விரட்டி ஓடிய அனுபவம், வேலிகளின் இடுக்கில் புகுந்து வாழையை அழித்த பன்றிகளை விரட்டிய அனுபவம்... இன்றும் சோதனைகள் சுலபமாக.

மூன்றாம் நாள் “திட்டமிடல், குழு வழி நடத்துதல் மற்றும் குழு ஆளுமை” பற்றிய சோதனை... குறிப்பாக இக்கட்டாண கால கட்டத்தில் ஒருவரின் செயல்பாடு பற்றி கண்டறிய. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை கையில் உள்ள கயிறு மற்றும் மரப் பலகை கொண்டு கரையேற்ற வேண்டும். காவிரிப் படுகையில் வெள்ளத்தில் அறுவடை செய்தவன், மிதக்கும் வெள்ளத்தில் வாழை மரங்களை மிதவையாக்கி, அதன் மீது நெற்கதிர்களை சேர்த்துக்கட்டி களம் சேர்த்த அனுபவம் கை கொடுத்தது… ஸ்லம்டாக் விவசாயிக்கு இன்றும் வெற்றி.

நான்காம் நாள் காலை, முதல் மூன்று நாட்களுக்கான மதிப்பு வெளியீடு, தேர்வு பெற்றவர்களுக்கான “சோசியல் கேதரிங்” - சாப்பட்டு மேசை மற்றும் பழகுதல் பற்றிய சோதனை மற்றும் திறனாய்வு. வங்கி கடன்பெற கூட்டுறவு சங்க அலுவலர் வரும்வரை அருகில் உள்ள நூலகத்தில் அமர்ந்து படித்தன் பயன் இன்றும் கை கொடுத்தது. தெரிவுபெற்ற பத்து பேரில் மூன்றாம் இடத்தில் ஸ்லாம்டாக் விவிசாயி.

ஐந்தாம் நாள், விமான படை உயர் நிலை அதிகாரிகளுடன், கழுத்தில் தொங்கும் கோவணத்துடன் (டை), நேர்முக தேர்வு. ஒரு அதிகாரி அவன் தகுதி மற்றும் மதிப்பீடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்தவர் அவன் பின்புலம் என்ன என்று வினவினார்... (ஸ்லம்டாக்) விவசாயம் என்று பெருமையுடன் சொன்னான். இறுதி ஆனை இல்லம் அனுப்பப்படும் என்ற வாசகத்துடன் விடைபெற்றான்... சேற்றில் செந்தாமரை இன்றுவரை முளைக்கவில்லை.

இன்றும் அவன் “எய்ம் ஹை” என்ற தாரக மந்திரம் விவசாயத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உ(ழ)ண்று வாழ்கிறான், ஆனால் வறண்டு போன காவிரியும், காலம் தவிர்த்து பெய்யும் வானமும் இன்றும் அவனுக்கு சோதனை மேல் சோதனையாய்... ”உன் எய்ம் பொய்” என சாதித்துக்கொண்டு இருக்கின்றன.

3 + 5 + 6 + 7 = 19

என்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா? இல்லை... நான் அவன் இல்லை.

தலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.

உற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.

உண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.

இன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆவணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.

3 + 5 + 6 + 7 = 19? இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19

மொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.

என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,

அமெரிக்காவும் பேச்சு சுதந்திரமும்

நான் தலைப்பை பற்றி பெரிதாக அல்லது புதிதாக ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. அது உலகமறிந்த விசயம். அமெரிக்காவின் முதல் குடிமகனை நீங்கள் அவர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் முன்பு நின்று திட்டலாம். அடியாலுடன் ஆட்டோ வராது.

நான் சொல்ல வந்தது இப்போது என்.பி.சி தொலைகாட்சியில் நடக்கும் "டாக் ஷோ"-வின் பேச்சு சுதந்திரம். இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும் "கேளிக்கை பேச்சு" நிகழ்ச்சிகளில் ஜே லெனோ மற்றும் கேனன் ஓ பிரையன் என்பவரின் நிகழ்ச்சிகள் பிரபலமான ஒன்று. நிகழ்ச்சியின் தரவரிசை அது இது என்று கேனன் ஓ பிரையன் நிகழ்ச்சி ஒரு வழியாக இந்த வாரத்துடன் முடிவடைகிறது.

இது நிச்சயம் மற்ற போட்டியாளர்களான பாஃக்ஸ் & சி.பி.எஸ்-க்கு மகிழ்ச்சி. என்.பி.சி-யையும் டாக் ஷோ நடத்துவர்களையும் விட்டு கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். நம்ம ஊருல நடக்கிற அதே கூத்துதான் (கலக்குறதுக்கு கரண்டி போதும், அசத்துரதுக்கு ஆள் வேணும்னு நக்கலடிக்கிற மாதிரி).

தான் வெளியேற்றப்படப்போவது உறுதியானதும் கேனன் ஓ பிரையன் அடிச்ச கூத்துதான் நான் குறிப்பிட வந்த விசயம். அமெரிக்காவின் பேச்சு சுதந்திரத்தின் தற்போதைய உச்சத்தை தொட்ட விசயம். கே.ஓ.பி தன் நிகழ்ச்சியில் என்.பி.சி பற்றியும், அதன் நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பற்றியும் போட்ட போடு இருக்கே... இங்கு பதிவில் சொல்ல முடியா வார்த்தைகள். உதாரணத்திற்க்கு. என்.பி.சி என்றால்... நத்திங்க் பட் கு...( நீங்களே போட்டுகோங்க, தமிழ்ல ரைமிங்கா வரும்)-ன்னு சொன்னார். இவ்வளவுக்கும் என்.பி.சி அவருக்கு கொடுக்கும் தொகை (குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னாள் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள) 45 மில்லியன் அமெரிக்க டாலர்.

நம்ம ஊர நினைச்சி பார்த்தேன். ன் டி.வி-ல ஹோஸ்ட் பண்ணும் போது லா நிதிய சும்மா பேர மட்டும் மாத்தி காலாவதி-ன்னு சொல்ல முடியுமா? ஹோஸ்ட் அப்புறம் பேஸ்ட் ஆயிடுவாரு.

கே.ஓ.பி முதல் நாள் கெட்ட வார்த்தைல பேசினார். உடனே இரண்டாம் நாள் வந்து என்னை என்.பி.சி வக்கீல் பேசகூடாதுன்னு சொல்லிட்டார் அதனால நான் பாடப்போரேன்னு கெட்ட வார்த்தைல பாடுனார். மூன்றாம் நாள் வந்து வடை போச்சே...பேசவும் பாடவும் கூடாதாம் என்ன பண்ணுரது... சரி ஆங்கிலத்துல பேச பாடகூடாது... ஆனா நான் ஸ்பேனிஸ்ல திட்டுவனேன்னு மனுசன் திட்ட ஆரம்பிச்சுட்டார் (ஆங்கில சப் டைடிலோட).

சொந்த காசுல சூனியம் வெச்சுகிறது எப்படின்னு என்.பி.சிய பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். நாற்பத்து ஐந்து மில்லியன கொடுத்து நாக்கை பிடிங்கி கொள்ளவது மாதிரி நாளுக்கு நாள் நாலு கேள்வியவேற கேட்டுக்க வேண்டியதாகிவிட்டது.

கேனன் ஓ பிரையன் நிகழ்சிகளைகாண இங்கே சொடுக்குங்கள்...

இஷா - இரண்டாம் சுற்று வாக்குப் பதிவு

அன்பர்களே... இது ஒரு நல்ல காரியத்திற்க்காண நிதி திரட்டும் முயற்ச்சி. உங்களால் ஒரு ஓட்டு...
நண்பர்களால் ஒரு ஓட்டு...
சேஸ் வங்கி கொடுக்கபோகுது நோட்டு...


Vote For Isha
and Spread the Word!!!
Round 2 of Voting for Chase Community program has started.

You can now vote for Isha on Facebook until January 22nd. But don't wait!
Vote NOW then inform your family and friends about this opportunity to make a difference for thousands of people in Rural India and America.

VOTE FOR ISHA NOW!

http://www.ishafoundation.org/mailmarketer/link.php?M=53125&N=86&L=192&F=H

For More Information Visit
www.ishafoundation.org/vote

"How deeply you touch another life
is how rich your life is" - Sadhguru

பொங்கலோ பொங்கல்

இன்று அந்த நாள் ஞாபகம்... முன் வாசலில் பரங்கி பூவுடன் தெருவடைத்து வண்ணக் கோலங்கள். பின் வாசலில் சாணத்தில் பாத்தி கட்டி மங்கள நீர் விட்டு அதில் மிதக்கும் வெள்ளைத் தும்பை பூ...

மஞ்சளுடன் வெள்ளை... மனது போகும் கொள்ளை.

உழவர்களை கொண்டாடி, பெரியோரிடம் ஆசி பெற்று, இன்பமாய் சுற்றித் திரிந்த அந்த இளமை காலம்...

பரங்கி

கோலத்தின் நடுவில் பரங்கி
நின்றேன் தெருவில் கிறங்கி
நினைத்தேன் மனதில் வருந்தி
மறந்தேன் இரவில் உறங்கி.

தும்பை

மாட்டுக் கொட்டிலில் தும்பை
பண்பாட்டை காட்டினால் அன்னை
பதிலுக்கு காட்டினோம் அன்பை

உழவர்

அன்று
உண்ண உணவு பயிரிட உழவர்
இன்று
எண்ண எலும்பு தெரிந்திட கிழவர்
நாளை
உன்னை என்னை மறந்திட இளையர்.

இன்று போல் என்றும் மங்களம் பொங்க
இனிய பொங்கலோ பொங்கல்.

பண்பாடு...

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் அவர் மாணவர் எழுதிய கவிதையாய் இதை கூறினார்.

பல்லவனில் இடிபாடு
பக்கத்தில் தடிமாடு
பட்டணத்தில் பண்பாடு
படுகின்றது படாதபாடு.

எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பதிவர்களின் பண்பாடு. அழகிய ஈரோடு நிகழ்விற்க்குப்பின் தமிழ்மணத்தில் பெரும் கூப்பாடு. நற்குடியில் ஆரம்பித்து...

பதிவர்களின் பண்பாடு...

பதிவுன்னு மொக்கைய போடு
பெயரில்லாம பின்னூட்டம் போடு

மீள் பதிவா போட்டதையே போடு
மீத பஃர்ஸ்டுன்னு அட்டெண்டன்ச போடு

படிச்சி பிடிச்சா ஓட்டப்போடு
பதிவு பிடிக்காட்டி ஓடிப்போய்டு

பாஃளோயர் இருந்தா காட்டு நீ வித்த
சிங்கிளா இருந்தா மவனே நீ செத்த

தொழிலல்ல சோசியம்
ஆரம்பத்தில் ஓசியாம்
நெருங்கினால் காசியாம்

ஒரு பதிவு
ஒருவருக்கு சந்தனம்
ஒருவருக்கு சாணி

ஒரு பதிவு
ஒருவருக்கு பழுது
ஒருவருக்கு பாம்பு

பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு

பதிவு பழுதோ பாம்போ...
பழுதெனில் பற்றப் பழகு
பாம்பெனில் தாண்டப் பழகு

ரௌதிரம் பழகு... ரௌதிரம் செய்னு சொல்லலியே!

சமைத்துப் பார்... சாப்பிட சொல்லலியே!!

களவும் கற்று மற... உன்னை திருட சொல்லியே!!!

படித்த பதிவருக்கு என்ன பண்பாடு?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு - அழகாண அருமையான குறளை படித்திருக்கிறீர்கள்... அதை செயல்படுத்துவதில் ஏன் இத்தனை முரண்பாடு?

உங்கள் தமிழ் எழுத்து வளரட்டும்!
உங்கள் மண ஓட்டம் உயரட்டும்!!