கத்திரிக்காய்க்கு கால் முளைத்தால்...

கத்தீரிக்காய்... கத்தீரிக்காய்...
குண்டு கத்தீரிக்காய்...
கண்ணம் ரெண்டும் கிள்ளச் சொல்லும்
காதல் பேரிக்காய்...

இங்கிலாந்து போகும்போது
ஏரோபிளேன் ஏறும்போது
டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லி
நோட்டீஸ் விடும்...

என்று ஒரு நல்ல பாடல், இப்ப கிடைத்த தகவலைப் பார்த்தால், வரும் நாட்களில் அமெரிக்கா இந்தியாவிற்கு நோட்டீஸ் விடும் போல இருக்கு.

செய்திக்கு...

எல்லாம் ஒப்புக்கொள்ளப் பட்டால்... முதலில் விதை இலவசம்னு ஆரம்பித்து... போக போக... கால் முளைத்து அமெரிக்கா சென்ற கத்தரிக்காயை... பேட்டர்ன் ரைட்ஸ் கொடுத்து கூட்டிக்கொண்டு வரப்போகிறோம்.

புதிய கத்தரிக்காய்...சேதி

மரபணு மாற்றப்பெயர்...பி.டி
பயிரிட்டாக் கிடைக்காலாம்... கோடி
சாப்பிட்டால் குறையலாம்... நாடி

இனி வரும் காலத்தில்
நாட்டுக்கத்திரியை தேடனும்... ஓடி


கண்டிருக்கிறார்கள் புதிய... விதை
நிறைய இருக்குமாம்... சதை
நாமெல்லாம் நம்பனுமாம்... அதை

இனி வரும் காலத்தில்
இந்திய வழுதணங்காய் வரலாற்றுக்... கதை


வரும் காலத்தில்...
கத்தரிக்காய் ஒரு பணம்
சுமை கூலி மூன்று பணம்.

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...

நான் அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்களுடன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு போகும் போது நான் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பொருட்கள் வாரியாக சரி பார்ப்பேன், நண்பர்கள் எல்லோரும் மொத்த தொகையை பார்த்து விட்டு ரசீதை பையில் போட்டுவிடுவார்கள். ஏம்பா சரி பார்க்கலையா என்றால்... இங்கெல்லாம் அனைத்தும் கணிப்பொறி மயம், பைசா சுத்தமா இருக்கும் என்று சொல்லி அதற்க்கு ஒரு வங்கி உதாரணத்தையும் சொன்னார்.

ஒரு வங்கியில் நம் நண்பர் கணக்கில் ஒரு பைசா மட்டும் இருந்ததாம், கணக்கை முடித்தால் அவர் கடன் பற்று வரலாறு (கிரெடிட் ஹிஸ்டரி) பாதிப்படையும் என்று கணக்கை முடிக்காமல், ஆனால் பற்று வரவு இல்லாமல், வைத்திருந்தாராம். அதற்க்கு அந்த வங்கியில் இருந்து மாதா மாதம் குறைந்த மூன்று பக்கம் பற்று வரவு அறிக்கை என்று, அதற்கு அஞ்சல் செலவு வேறு, இருந்தாலும் நம் காசு ஒரு பைசாவாக இருந்தாலும் ரொம்ப ஞாயமாக நடப்பார்கள் என்று சொன்னார்.

இந்த கதை ஏதோ ஒரு 5 மாதம் இல்லை 6 மாதம்தான், பிறகு கணக்கை முடித்து கொள்ள சொல்லியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள், இந்த கூத்து ஒரு இரண்டு வருடமாக நடந்திருக்கிறது. நான் கூட நண்பர் அமெரிக்காவ ரொம்ப தூக்கி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இல்லை அது உண்மை என்பது போல் இன்று ஒரு நிகழ்வு. இந்த வருடம் ஜார்ஜியா மாஹானத்தில் வரிவிதிப்பில் சில சிறிய பிரச்சனைகள், சிலரிடம் சற்று அதிகமாக வரி வசூலித்து விட்டனர், இப்போது அதை சரி பார்த்து திரும்ப கொடுத்து வருகின்றனர். அந்த தொகைகள் ஒரு பைசாவிலிருந்து... சில நூறுகள் வரை.

இன்று செய்தியில் ஒருவருக்கு எட்டு பைசாவிற்க்கு, 42 காசு அஞ்சல் செலவு செய்து மாஹாண கருவூலத்தில் இருந்து காசோலை அனுப்பி இருக்கின்றனர், அரசாங்கத்திற்க்கு அஞ்சல் செலவு தெண்டம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார்.

உண்மையில் தெண்ட செலவு அந்த 42 பைசா மட்டும் அல்ல, காசோலை மற்றும் அதை அச்சு செய்ய, கிடைத்தவர்கள் அந்த எட்டு காசை பெற வங்கிக்கு கார் எடுத்து செல்ல, வங்கியிலிருந்து கருவூலத்திற்க்காண தகவல் மற்றும் பண பறிமாற்றம் என்று...பல தெண்டங்கள்.

இப்ப சொல்லுங்க... அவங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... சரிதான?

ஹும், நம்மூருல ஒரு பேரூந்து நடத்துனர் பணிகளிடம் 5 பைசா பாக்கி கொடுக்காம, அதை சேர்த்து மாடி வீடு கட்டிட்டார்ன்னு நையாண்டி பண்ணுவோம், இங்க கணிப்பொறி மயம்... அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றது.

வளையுலக நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பூனை கண்ணை மூடினால்....

பூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா? இப்படி ஒரு முதுமொழி உண்டு, அதை இந்த பத்திரிக்கை காரர்களும் நடிகர்களும் பின் பற்றி கண் மூடியோ இல்ல காதை பொத்தியோ இருக்கலாம். ஒரு பூனை (கண்) வாய் திறக்க பல பூனை இப்ப மணி கட்டி அலையிது.

அரசியல் வாதிக்கு வோட்டிங் பிரச்சனை,
நடிகர்களுக்கு டேட்டிங் பிரச்சனை,
பத்திரிக்கை காரங்களுக்கு ரேட்டிங் பிரச்சனை,
காவலர்களுக்கு கட்டிங் பிரச்சனை...

ஆக, அவன் அவன் அடுத்தவன் மேல இருந்த காண்ட கரெக்ட் பண்ணி மணியடிச்சிட்டீங்கள்ல... சரி, இடத்த காலிபண்ணுங்க.

பதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
ஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.

மியாவ்... மியாவ்
மியாவ்... மியாவ்
மிய்..யா...வ்

மியாவ் மியாவ் பூனை
ரேட்டை சொல்லும் பூனை
சீ... போ... -ன்னு படிக்கமாட்டேன்
உன் பதிவுமேல ஆனை

மிய்..யா...வ்

சந்தோசக் காற்றில்...

அலேக்ரா அலேக்ரா... கந்தசாமியில் ஒரு காட்டு... மன்னிக்கவும் பாட்டு. நான் பாடல் வரிகளின் ரசிகன்... இசை மற்றும் பாடல் வரிகள்... வரிகளில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும்... என்னை கவர்ந்தது.

சரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் "சந்தோசம்". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் "சந்தோஷக் காற்று".

சரி... பாடல் வரிகள படிப்போம்...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ
நான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ

ஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ

ரெட் வைன் பாட்டில் நான்...
காஷ்மீர் ஆப்பில்நான்...
கோல்டன் ஏஞ்ஞெல் நானே...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இசை...

ஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ
அடிகலம் போங்கோ போங்கோ
வாழ்கையே சார்டோ லாங்கோ
வாழ்ந்துபார்போம் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அலே-அலேக்ரா)

பாடலாம் சாங்கோ சாங்கோ
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ
வாழ்வோம் இனிமேல் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அளே-அலேக்ரா)

ஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்
வானம் கை தட்டுமே

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலெலலே...

இசை...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

ஓ...
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம்விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்போம் ஏனோ

ஓ...ஓ...
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது...து...து

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

இதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்

வானவில் வளைவு என்றோ
பிறை நிலா வளைவு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ.

அதேமாதிரி... ஜிங்கிள்ஸ

அழகிடா அழகிடா
அழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.

கூகிள்ஜி...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கூகிள் தேடு தளத்தில் காந்திஜியின் முகப்பு...

அன்று... எளிமையின் திரு உருவம்
இன்று... கூகிளின் திரை உருவம்

அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?

நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.

மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.

1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.

உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...

1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?

2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?

3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்

கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.

( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)

இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.

விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்

லாபம் நமக்கு மட்டுமே...

இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.


அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.


சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.


லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.