ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

சத்யம் ராமலிங்க ராஜு (ரா.ரா)-வுடன் சிறையில் ஒரு பிரத்தியேக நேர்காணல்...

நிருபர்: வணக்கம் சார்.
ரா.ரா: வணக்கம் தம்பி.

நி: சார், சத்தியம் பற்றி சொல்லுங்களேன்.
ரா.ரா: நான் சொல்வதெல்லாம் சத்யம், சத்தியத்தை தவிர வேறு எதுவும் இல்லை.

நி: சார் நான் நீதிபதி இல்லை நிருபர், நீங்க தவறா புரிஞ்சிகிட்டீங்க.
ரா.ரா: நான் சரியாதான் தம்பி சொன்னேன். சத்யம் தான் என் நிறுவனம், மேடாஸ் பற்றி எதுவும் தெரியாதுன்னு சொன்னேன்.

நி: உங்க நிறுவனதில் நடந்த முறைகேடுகள பிரைஸ் வாட்டர் ஹவுஸ் போன்ற சிறந்த கணக்கீட்டார்களால் கண்டு பிடிக்க முடிய வில்லையே எப்படி?
ரா.ரா: சத்யம் நிறுவனம்தான் பி.வா.ஹ பயன்படுத்தும் மென்பொருளை செய்தது, எங்கள் நிருவனம் சம்பந்தமான கணக்கீடு செய்யும் போது சில வளைவு நெளிவுகளை உட்படுத்தியிருந்தோம். அது பிற்ரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு சிறிய முன் ஏற்பாடு.

நி: பொதுவா சிறைக்கு வந்தவங்க சத்திய சோதனை படிப்பாங்க, நீங்க புத்தரோட புத்தகங்களை படிக்கிறீங்களே?
ரா.ரா: சத்யத்துக்கு சோதனை பண்ணின நான் சத்திய சோதனை படிச்சா ஊரே சிரிக்கும், அதனால கொஞ்சம் நல்ல புத்தி வரட்டுமேன்னு புத்தரோட புத்தகங்களை படிக்கிறேன்.

நி: உங்கள் நேரத்திற்க்கு நன்றி சார்
ரா.ரா: நன்றி தம்பி, என்கிட்ட கொஞ்சம் சத்யம் ஷேர்ஸ்/பங்கு இருக்கு வாங்கிகிறீங்களா? ரா.ரா... பங்கு சந்தைக்கு ரா.ரா...

நி: வேண்டாம் சார் இப்ப பங்கு வாங்கி எனக்கு நானே சங்கு ஊத விரும்பல.

பெண் புத்தி பின் புத்தி

பெண் புத்தி பின் புத்தி - பழக்க மொழியோ இல்ல வழக்க மொழியோ இது எப்படி என்று நம்ம கண்ணா-பின்னாவில் ஒரு ஆராய்ச்சி.

சாதாரணமா சொல்லனும்னா இது அதிக படியா பெண்கள் மூளையை சற்று குறைத்து மதிப்பிட்டு சொல்லப்படுவது. பெண்கள் தாமதமாக அல்லது ரொம்ப யோசித்து காலதாமதமாக செயல்படுவதால் அவர்கள் எடுத்த முடிவால் எந்த பயனும் இல்லாமல் போய்விடும்.

அது சரிதானோ என நினைக்க தோன்றுகிறது - இதோ ஒரு புராதாண கதை சான்று - மஹாபாரத்தில் இருந்து.

பாஞ்சாலியை துகிலுரிய அழைத்து வர துரியோதனின் காவலர்கள் அவள் வீட்டுக்கு சென்று அரன்மனைக்கு வருமாறு அழைக்கிறார்கள். அதற்கு பாஞ்சாலி தான் வீட்டை விட்டு வர இயலாது என்று ( நான் நைட்டி போட்டு இருக்கேன்-சாக்கு, வீடுக்கு தூரம்-போக்கு) சொல்லுகிறாள், காவலர்கள் பலவந்தமாக இழுத்து செல்லுகிறார்கள்.

சபைக்கு சென்றவுடன் துரியோதனன் அவளை துகிலுரியுமாறு கட்டளையிடுகிறான். பாஞ்சாலி உடனே பெருங்குரலெடுத்து பாடுகிறாள் (என்ன மானமுள்ள பெண்ணுன்னு மதுரையில கேட்டாக... அந்த மாயவரத்துல கேட்டாக மெட்டுல)
எனக்கு புருஷன் 1-க்கு 5-பேரு இருக்காக...
மெத்த படிச்ச துரோணரய்யா இருக்காக...
அவுகளமீறியா என்மேல கைய வெப்பீக...-ன்னு

பாஞ்சாலி பாட்ட கேட்ட துரி-க்கு வந்தது வெறி. பார்வையால் காவலர்களை எறித்தான்... காவலர்கள் துகிலை உறித்தான்.

பாஞ்சாலி அழைத்தால் பரமாத்மாவை... கண்ணா... அவர் உடனே கேட்டார்...என்னா?

பிறகு நடந்தது என்ன என்று உங்களுக்கு தெரியும். இதுக்கும் நம்ம பழமொழிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்க்குறீங்களா?

இந்த பாஞ்சாலி பின்-னாடி கூப்பிட்ட கண்ணன வீட்டுல முன்-னாடியே கூப்பிட்டு இருந்தா (ஹி...ஹி நான் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்க முடியாது) இவ்வளவு அவமானம் நடந்திருக்காது இல்லையா? பாஞ்சாலிக்கு பின் புத்திதானா?

சரி அத இந்த அரசூரான் சொல்லுறது கிடக்கட்டும், நாலு நல்லவர்களை என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா?

சாலமன் பாப்பையா: நல்லா கேட்டீங்கய்யா, இதுக்கு நான் பதில் சொல்லுறத விட ஒரு பட்டி மன்றம் வச்சு சரிதான்னு சொல்ல இங்கன நாலு பேரு, இல்லன்னு சொல்ல அங்கன நாலு பேருன்னு எட்டு பேர பேச சொல்லி ஒரு நல்ல தீர்ப்பா சொல்ரேன் ய்யா... கொஞ்சம் பொருங்கய்யா.

திண்டு.ஐ.லியோனி: எனக்கு ஒரு புது பாட்டு ஒரு பழைய பாட்டு-ன்னு ரெண்டு பாட்டு பாடனும் போல இருக்கு... அவிங்க படத்துக்கு என்ன தேவையோ அத பாடிட்டு போயிட்டாய்ங்க... அது நமக்கு சரியா வராதுல்ல. இருந்தாலும் நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லனும்ல்ல. அது ஒன்னும் பெரிய விசயம் இல்ல... அது நம்ம பொம்பள பிள்ளைக ஆம்பிளைங்கள குத்தி குத்தி (முடிஞ்சா கொண்டை ஊசியால இல்லன்னா வார்த்தையால) பேசுரது... அதாங்க பஞ்ச் டயலாக்.

சுகி சிவம்: நான் சக்தி உபாசகன். பெண்களை அன்னை உமயவளுக்கு ஒப்பானவர்களாக கருதுபவன். அவர்கள் எடுக்கும் முடிவு நல்ல முடிவு... அவர்கள் இன்று எடுக்கும் முடிவால் பின் நாளில் என்ன நல்லது கெட்டது நடக்கும் என்று யோசித்து எடுக்கும் முடிவு. பின் வருவதை முன் கூட்டியே யோசிப்பவர்கள். பின் விளைவை நினைக்கும், யோசிக்கும் முன் புத்தி உடையவர்கள்.

ஏது... நம்ம சுகி சிவம் அய்யா சொல்லுறத பார்த்தா இதுக்கு பின்னால சுவையான பல விசயம் இருக்கும் போல... என்னன்னு பார்த்துடுவோமா? பாஞ்சாலி முன் புத்தியோட யோசிச்ச விசயத்த பார்ப்போமா?

சாக்கு-போக்கு: இதை வீட்டுக்கு வந்த காவலர்களிடம் சொல்லாம சபைல வந்து சொல்லியிருந்தா கணவர்கள் மற்றும் அங்க உள்ள பெருசு எல்லாம் என்ன சொல்லியிருக்கும்? யாம்மா நீ எல்லாம் ஒரு குடும்ப பெண்தானா? இதை உன்னை அழைக்க வந்த காவலர்களிடம் சொல்லியிருந்தால் உன்னை இங்கு அழைத்து வந்திருக்க மாட்டர்களே... உன் கணவர்களுக்குதான் அறிவில்லை பெண்ணை வைத்து சூது ஆடிவிட்டர்கள்... நீயாவது இங்கு வருவதை தவிர்த்திருக்கலாமே என்று பிளேட்டை மாத்தி போட்டு இருப்பார்கள். இப்ப சொல்ல முடியாதுல்ல. அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி-ன்னு பாஞ்சாலி பஞ்ச் போட்டிருக்கும்.

ஆன்றோர்களே-சான்றோர்களே:
கண்ணனை கூப்பிடுவதற்க்கு முன் கணவன்களை கூப்பிடுகிறாள்...காப்பற்ற சொல்லி (குத்து பாட்டு)
சபைக்கு வந்திருக்கா பாஞ்சா
உங்களுக்கு இருக்கா மாஞ்சா
வாங்கடா அஞ்சா... நெஞ்சா...

கணவனுக்கு முன் கண்ணனை கூப்பிட்டிருந்தால்...ஏய் நாங்க ஐஞ்சு பேரும் இல்லாம யாரடி அவன் கண்ணன்? எங்கள எல்லாம் என்ன கையாலாவதவன்னு நினைச்சியான்னு ஊடு கட்டியிருப்பாங்க. ஹும் பஞ்சாத்தாவ வெச்சு மங்காத்தா ஆடுன அஞ்சாம்பிளையும் அவுட்.

ஆண்டவனை கூப்பிடுவதற்க்கு முன் அரசவை அறிவாளிகளை கூப்பிடுகிறாள்... நாட்டமை வேட்டிய தூக்கி போடுங்க... என் மானத்தை காப்பாத்துங்கன்னு.

ஆத்தா... இதே மங்காத்தவா இருந்து 2-ண்ட போடு ரம்மி சேரும், 5-அ போடு பட்டை சேரும்-ன்னா போட்டுடலாம். உன் புருஷனுக்கு அதெல்லாம் போட்டும் அவுட்டாயிட்டனுவோ. எஞ்சி இருப்பது வேட்டி மாட்டும்தான் அதையும் உன்கிட்ட கொடுத்துட்டா உன் மானம் போகுதோ இல்லயோ எங்க கோ-மனம் போயிடும், துரியோதனன பத்தி உனக்கு தெரியாதுன்னு பம்மிட்டாங்க.

நாட்டாமைய எல்லாம் கூப்பிடாம இருந்தா என்ன பண்ணியிருக்கும் பெருசெல்லாம். எவனோ கண்ணனாம்ல்ல... எங்கள மீறி சபைக்கு வந்துட முடியுமா? வந்தாலும் துரியோதனன்தான் அவன் பேச்ச கேட்டுடுவானா? சுத்து பட்டி பதினெட்டுலயும் துரியோதனன அடக்க எங்கள விட்டா ஆள் இருக்கா?-ன்னு சொம்ப தூக்கிவிட்டுகிட்டு கிளம்பி இருக்கும். இப்ப நாட்டமை எல்லாம் தலைய நட்டுகிச்சி.

பாஞ்சாலிக்கு தெரியாதா இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் அவனுக்கு வீடும் சபையும் ஒன்றுதான். இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... பெண் புத்தி பின் - வருவதை முன் கூட்டியே யோசிக்கும் முன் - புத்தியா இல்லையா என்று.

ஓபாமா பிரஸிடண்சி லாண்ட்ரி லிஸ்ட்...

(பிரசிடண்ட் எலெக்டட் ஒபாமாவின் குறைந்த பட்ச செயல் திட்டம் - கலைஞ்சர் கருநாநிதியின் திட்டங்களில் இருந்து)

1. சனவரி திங்கள் பதவி ஏற்க்கும் போது முதல் கையெழுத்து - டாலருக்கு 5 எல்.பி அரிசி... இல்லை இல்லை ஒசாமாவுக்கு வாய்க்கரிசி...வாய்க்கு அரிசி

2. சமத்துவபுரம் - போஃர் குளோஸர்-ல வீடு போனவர்கள் அனைவருக்கும் இலவச வீடு

3. குறு நில விவசாயிகளுக்கு அசலுடன் வட்டியும் தள்ளுபடி - $250,000 வரை முதலீடு செய்து தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், மேலும் வருகிற நான்கு ஆண்டுககளுக்கு அவர்கள் ஸ்டேட் மற்றும் பெடரல் டாக்ஸ் கட்ட தேவை இல்லை.

4. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவச கேஸ் அடுப்பு - குடும்ப வருமானம் $50,000 வரை உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கேலன் கேஸ் மற்றும் $50 யுட்டிலிட்டி கூப்பன்.

5. குடும்ப அட்டை (ரேசன் கார்ட்) உள்ளவர்களுக்கு இலவச கலர் டி.வி - 2008-ல் எஸ்.எஸ்.என்னுடன் டாக்ஸ் பைஃல் பண்ணியவர்களுக்கு 1080பி ஹெச்.டி. டி.வி

நேற்று பெயில் அவுட்... இன்று பவல் அவுட்

(ரிப்பளிக்கன் பார்டியின் சார பாலின் கலந்து கொண்ட எஸ்.என்.எல் நிகழ்ச்சியை அதிக நேயர்கள் பார்த்தார்கள் என்பதை தொடர்ந்து... டுனைட் ஷோ-வில் ஜேலெனோ வோடு செனேட்டர் மெக்கைன்)

ஜே.லெனோ: செனேட்டர் மொக்கையன்... என்ன நடக்குது உங்க பார்ட்டியில

செ.மொ: என்ன என்னமோ நடக்குது ஜே. நீங்க எத கேட்குறீங்க?

ஜே: இப்போ காலின் பவல் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ணி இருக்காரே அத பத்திதான்

மொ: ஓ அதுவா... நான் மீட்டிங்க்ல பெயில் அவுட்-ன்னு சொன்னத அவர் பவல் அவுட்-ன்னு சொன்னேன்னு தப்ப புரிஞ்சிகிட்டு வெளியே போயிட்டரு

ஜே: சரி அதனால உங்களுக்கு பாதிப்பு இருக்குமே என்ன பண்ண போறீங்க

மொ: உண்மைதான் ஜே... ஆனா அந்த கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்கு

ஜே: என்ன அது?

மொ: இராக் போருக்கு சூத்திரதாரி பவல் தான், அதனால் அவர வெளியேத்திட்டோம்ன்னு சொல்லி சரிஞ்ச வாக்கை கைப்பத்திடுவோம்ல

ஜே: இப்படி சொன்னா அதிபர் புஸ் பேர் கெட்டுடுமே...

மொ: ஜே... காத குடுங்க உங்களுக்கு மட்டும் ஒரு ரகஸியம் சொல்ரேன்...

ஜே: சும்மா சொல்லுங்க மொக்கை, எனக்கு சப்ப வாய் மட்டும் இல்ல ஒட்ட வாவயும் கூட, நீங்க சொல்லாட்டி அத நான் சொல்லிடுவேன்

மொ: பவல் எண்டார்ஸ் பண்ணுன மாதிரி அடுத்த வாரம் புஸ் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ண போறார்

ஜே: ஐய்யோ...

மொ: என்ன நொய்யோ... இராக் போருக்கான சூத்திரதாரி பவல், எட்டு வருஷமா அமெர்க்காவ ஆட்டைய போட்ட புஸ் மற்றும் ஒசாமா பிஃரண்ட ஒபாமா கூட்டணிக்கா உங்கள் ஓட்டுன்னு கேட்டு பிளேட்ட மாத்தி ஆட்சிய பிடிக்க போரேன் ஜே

100-த்துல 25 பேர் ரொம்ப நல்லவங்க...

டாக்ஸ் ஆபீசர்: அமெரிக்காவில் எழுபத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் பிஃராட் (பாஃல்ஸ் கிளைம்) பண்ணுகின்றனர்.

குசும்பு குப்புசாமி: சந்தோச படுங்க இருவத்தி ஐந்து சதவீதத்தினர் சரியா பண்ணுராங்கள்ல?

டா.ஆ: நீங்க வேற அந்த பாக்கி இருவத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் கட்டுறதே இல்ல...

கு.கு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...

நம்ம ஊருல ஒருவர் உண்மை இல்லாத ஒரு விசயத்தை தேன் ஒழுக பேசும் போது சொல்லப்படும் வாசகம் இது... பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...என்று.

இது இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது பாருங்கள்.

நான் பத்து ரூபாய்க்கு வாங்குன ஸ்டாக் இன்று நூரு ரூபாய் போகுதாம்... எங்கடா பணத்த கண்ணுல காமிங்கன்னா... அதான் பேப்பர்ல இருக்குல்லன்னு சொன்னாங்க... இன்னிக்கு அது ஒரு ரூபாய்க்கு போகுதாம்.

அடேய் ஊகத்துல வணிகம் பண்ணி பல பேர சோகத்துல தள்ளிட்டீங்களே...

காம்ரேடும் கார்ப்பரேட்டும்...

அன்று...
சோவியத் ரஷ்யாவில் காம்ரேடுகள் காணாமல் போயினர்...
இன்று...
அமெரிக்காவில் கார்ப்பரேட்கள் காணாமல் போகின்றனர்...

காம்ரேடும் கார்ப்பரேட்டும் கைகோர்த்தால்?

நேற்று, இன்று நாளை...
என்றும்...
இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து இருந்தும்...
நம் கனவு...
காணாமல் போயிற்று...
நம் கனவு...
கைகூடாமல் போயிற்று... ஏன்?

காம்ரேட் அரசியல்வாதிகளின்...
கார்ப்பரேட் அலுவலர்களின்...
கூட்டு கொள்ளை...

ஓ... இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து...
கார்ப்பரேட் கரப்ஸன்