என்ன...
நான் எழுதியது என்ன...
உன்னக்காக எழுதியது என்ன...
கடிதம்...
என்ன கடிதம்...
காதல் கடிதம்...
கவிதை...
என்ன கவிதை...
காதல் கவிதை...
கசக்கிவிடாதே...
காகிதமென்று கசக்கிவிடாதே...
கவிதையென்று கசக்கிவிடாதே...
கசங்கபோவது...
காகிதமும் இல்லை...
காதல் கவிதையுமில்லை...
அது... காதலால் கசிந்துருகிய என் கணத்த இதயம்.
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
மனை உச்சவரம்பு
நில உச்சவரம்பு சட்டம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்... 1963 இல்லை அந்த கால கட்டத்தில்... ஒருவர் எவ்வளவு நிலம் வைத்து இருக்கலாம் என நிர்ணயம் செய்தார்கள்... பினாமிகள் உருவான அல்லது உருவாக்கப்பட்ட காலம்... பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, வண்டியோட்டி என்று பல பேரிடம் பட்டா பங்கு போடபட்டது. எது எப்படியோ பெரிய நில சுவாந்தார்கள் மேலும் நிலம் வாங்கினால் நமக்கு சங்கு... உள்ளதை காப்பற்றி கொண்டால் போதும் என்ற நிலமை.
அது போல் தற்பொழுது ஒருவர் ஓன்றீரண்டு (வீட்டு)மனைதான் வைத்து இருக்க வேண்டும் என் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... வீடு என்பது ஒரு நடுத்தர வர்கத்தின் கனவு, எந்த ஒரு சாதாரண மனிதனும் ஆசைப்படும் விசயம்... அதை முன்பெல்லாம் அழகாக சொல்வார்கள்... "குந்த ஒரு குச்சி, கொழுகுத்த ஒரு நிலம்" என்று. கிராமமோ நகரமோ... இப்போது 'முதலீடு' என்ற பெயரில் அந்த கனவு தகர்க்கப்பட்டு வருகிறது.
நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து கேட்டு இருக்கிறேன்... புதிதாக வீடு வாங்கி குடியேரும் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியை. அந்த மகிழ்ச்சி வரும் காலங்களில் வெறும் கைகூடா கனவாக ஆகிவிடுமோ?
அது போல் தற்பொழுது ஒருவர் ஓன்றீரண்டு (வீட்டு)மனைதான் வைத்து இருக்க வேண்டும் என் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்... வீடு என்பது ஒரு நடுத்தர வர்கத்தின் கனவு, எந்த ஒரு சாதாரண மனிதனும் ஆசைப்படும் விசயம்... அதை முன்பெல்லாம் அழகாக சொல்வார்கள்... "குந்த ஒரு குச்சி, கொழுகுத்த ஒரு நிலம்" என்று. கிராமமோ நகரமோ... இப்போது 'முதலீடு' என்ற பெயரில் அந்த கனவு தகர்க்கப்பட்டு வருகிறது.
நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து கேட்டு இருக்கிறேன்... புதிதாக வீடு வாங்கி குடியேரும் குடும்பத்தினர் அடையும் மகிழ்ச்சியை. அந்த மகிழ்ச்சி வரும் காலங்களில் வெறும் கைகூடா கனவாக ஆகிவிடுமோ?
திரி சூலம்...
என்னமோ நான் இங்க பழைய சிவாஜி படத்தை பத்தி (மூன்று வேடம்) சொல்ல போரேன்னு நினைக்காதீங்க... இது நான் எழுதிய(தாக சொல்லப்பட்ட) காதல் கடிதத்தின் கையொப்பம்... அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு-பி கிளாஸ்... கோ எஜுகேஸன்... ஏ-செக்ஸ்ன் (மகளிர் மட்டும்) ஃபுல் ஆனா பி-செக்ஸன்-னுக்கு மாணவிகள் அனுப்புவது வழக்கம், இல்லைன்னா மாணவர் மட்டும்தான். ஆனா நான் படிச்ச 5 வருசம் வரைக்கும் (6-லிருந்து 10-வரை) 9-பி செக்ஸன் கோ-எட்தான்.
இந்த பி-செக்ஸன்ல இடம் கிடைக்காதான்னு காத்து கிடந்தவர்கள் பல பேர்... நான் இல்லீங்கோ... ஏன்னா என் "பவுண்டேஸனே" பி-ல இருந்துதான், 6-பி, 7-பி, 8-பி... ஆக வேறு மிட்டில் ஸ்கூல்லேருந்து புதுசா "எங்க" ஹை ஸ்கூலுக்கு வர பொண்ணுங்கள தவிர, பழைய பி-செக்ஸ்ன் மாணவர்கள் தாக்கு பிடிக்கனும்னா அவன் நல்லா படிக்கிற பையனா இருக்கும்... ஏன்னா கிளாஸ் டீச்சர் அவங்க செக்ஸன் நல்ல பேர் எடுக்கனும்கிற ஸ்டேடஜிய வச்சு, கழிசடைகலை சி-க்கும் டி-க்கும் கழிச்சி கட்டிடுவாங்க... இப்ப தெரியுதா நான் ஏன் கவலைபடுலேன்னு... சரி அதவிடுங்க... உங்க காதுல வர புகை இங்க அடிக்குது.
ஒரு நாள் காலை வழக்கம் போல் நான் வகுப்பில் (முதல் பெஞ்ச்ல) உட்கார்ந்து இருந்தேன், பசங்க எல்லம் ஒரு பக்கம்... வாசல் அருகில், பெண்கள் உள்பக்கம் உட்கார வைக்கப்பட்டு இருப்பார்கள்... எல்லா பெண்களும் எங்கள கடந்து தான் செல்ல வேண்டும்... அப்ப புதுசா திருச்சி-யில் இருந்து வந்த ஒரு பொண்ணு, அவங்க பேரு இந்திரா... கண்ணு நிறைய "ஐ-டெக்ஸ்" மை விட்டு பார்க்கவே பயமா இருக்கும்... என்ன ஒரு லுக்... அதாங்க ஒரு முறை முறைச்சிட்டு போனாங்க... சரி, அது மூஞ்சி அப்படித்தான் என்று நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல... அதோட எனக்கு அந்த கிளாஸுல ரெண்டு போட்டியாளர்கள்... அதுல இது ஒரு பெண்... சரி எதுலயோ நம்ம அதிகமா மார்க் வாங்கிட்டோம் போல... அங்க புகையுதுன்னு நினைச்சிகிட்டேன்.
பள்ளி மணி ஓலித்தது... பிரேயர் முடிந்து வகுப்பிற்கு வந்தோம், என் வகுப்பு ஆசிரியர் (அவர் ஒரு மாக்கான்... நல்லா பாடம் நடத்துவார் ஆனால் அடிக்கும் போது வாட்ச கயட்டி வச்சுட்டு அடிப்பார்... நீங்களே யோசிச்சி பாருங்க அடி எப்படி இருக்கும்னு) வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் கழித்து வந்தார், வந்தவர் வெங்கடேஸ், ராஜா, பழனி மூன்று பேரும் வகுப்பு வெளியில் முட்டி போடுங்கன்னார்... எங்களுக்கு ஒன்னும் புரியல... ஏன்னு கேட்ட பின்னி எடுத்துடுவார்... சரின்னு 45 நிமிஷம் முட்டி போட்டோம்... இதுல என்ன கொடுமைன்னா இந்த 9-பி இருக்கே அது எங்க ஸ்கூலோட லேடீஸ் எண்ட்றன்ஸ்... அன்று லேட்டா வந்த எல்லா பொண்ணுங்களும் எங்கள பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு... மானம் போய் விட்டது.
வகுப்பு முடியும் நேரம் மூனு பேரையும் உள்ள கூப்பிட்டு வெங்கடேஸ் மூஞ்சியில் விட்டெரிந்தார் ஒரு பேப்பரை... படிக்க வந்தீங்களா இல்ல லவ் பண்ண வந்தீங்களா என கேட்டு ஒரு அடி (அவன் கொஞ்சம் குசும்பன்) வேறு அவனுக்கு, எனக்கு தெரியும் அவர் என்னை அடிக்க மட்டார் என்று... ஏன்னா நம்ம "பேக்கிரவுண்ட்" அப்படி... அங்க உள்ள வாத்தியார்ல பாதி பேர் எங்க அப்பா ஃபிரண்ட்... அதோட என் சகோதரிகள்... ஒன்னா... ரெண்டா... நாலு பேர் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார்கள்... அவர் பங்குக்கு ஒரு முறை முறைத்துவிட்டு... அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார். அடுத்து வந்த சகுந்தலா டீச்சரிடம்... இந்த பசங்க மன்னிப்பு கேட்டா உள்ள விடுங்க இல்ல வெளியில் நிற்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
அப்பாட, சகுந்தலா டீச்சர் வந்தது பெரிய ஆறுதல்... நான் அவர்கள் செல்ல குட்டி... என்னடா இதெல்லாம் என்றார்கள்... அப்போதுதான் அந்த "லவ் லெட்டர்" என் கைக்கு வந்தது... அதில் சில வாசாகம்... ஞாபகம் இல்லை... முடிவில் இருந்ததுதான் நம்ம " நெஞ்சில் நின்ற" வரிகள்...
இப்படிக்கு,
(திரிசூலம்)
வெங்கடேசன்
வே.இராஜா
பழனி
உடனே டீச்சரிடம் சொன்னேன்... இது எங்கள் கையெழுத்து இல்லை... வேறு யாரோ எங்கள் பெயரை "பஞ்சர்" பண்ணிவிட்டார்கள் என்று. முட்டி போட்ட அவமானம்... மூலை பர பரத்தது... யார் அந்த கள்ளன்/கள்ளி? மட மட வென்று பட்டியல் இட்டோம்... நம் மூவரின் பொது எதிரி யார்... நிட்சயம் பெண் இல்லை... பிறகு... வெங்கடேஸ் கிளாஸ் லீடர்... கிளாசில் பாதி பேர் அவனுக்கு எதிரி... பழனி... கோபம் வந்தால் பட் என்று அடித்து விடுவான்... அவனிடம் அடி வாங்கியவர் கடைசி ரெண்டு பெஞ்ச்... எனக்கு ஒருவன் கூட இல்லை... மீண்டும் ஒரு முறை படிதேன் அந்த கடிதத்தை... உடனே கேட்டேன்... டேய் கனகசபை எங்கே?
ஆகா பாதி கண்டு பிடித்து விட்டேன்... மனதிற்க்குள் என் தமிழ் ஆசானுக்கு நன்றி சொன்னேன்... தமிழில் பெயர் எழுத சொல்லி வர்புறுத்தியவர் அவர்தான். தமிழ் கட்டுரை நோட் திருத்துவது எனக்கு கொடுக்கப் பட்டு இருந்தது... ஓரளவுக்கு எல்லோருடைய கையெழுத்தும் எனக்கு அத்துபடி... வெங்கடேஸிடம் கத்தினேன்... டேய் நம்ம வகுப்புல "வே"-வன்னாவுல உள்ள ரெட்டை சுழி-ய/கொம்ப "எட்டு" மாதிரி போடுர ஓரே ஒருத்தன் கனகசபை... இது அவனோட எழுத்து-ன்னு சொன்னேன். லவ் லெட்டர் கொடுத்தானே... இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்தானா-ன்னு கேட்டேன்... லீடர் வெங்கடேஸுக்கு சந்தோஷம் தாங்கள... எடுறா சைக்கிள... விடுறா வல்லத்துக்கு என்றான்.
கனகசபையோட வீடு வல்லம் என்ற ஊர்... 5 கி.மி போயி... ஆளுக்கு 4 அரை விட்டுட்டு... அவன் கட்டுரை நோட்டோட வந்து சேர்ந்தோம்... ஆதாரம் வேணும்ல்ல?
நாங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நன்றி சொன்னேன்... பரலோகம் சென்று விட்ட என் தந்தை "வேணு" விற்கு.
இந்த பி-செக்ஸன்ல இடம் கிடைக்காதான்னு காத்து கிடந்தவர்கள் பல பேர்... நான் இல்லீங்கோ... ஏன்னா என் "பவுண்டேஸனே" பி-ல இருந்துதான், 6-பி, 7-பி, 8-பி... ஆக வேறு மிட்டில் ஸ்கூல்லேருந்து புதுசா "எங்க" ஹை ஸ்கூலுக்கு வர பொண்ணுங்கள தவிர, பழைய பி-செக்ஸ்ன் மாணவர்கள் தாக்கு பிடிக்கனும்னா அவன் நல்லா படிக்கிற பையனா இருக்கும்... ஏன்னா கிளாஸ் டீச்சர் அவங்க செக்ஸன் நல்ல பேர் எடுக்கனும்கிற ஸ்டேடஜிய வச்சு, கழிசடைகலை சி-க்கும் டி-க்கும் கழிச்சி கட்டிடுவாங்க... இப்ப தெரியுதா நான் ஏன் கவலைபடுலேன்னு... சரி அதவிடுங்க... உங்க காதுல வர புகை இங்க அடிக்குது.
ஒரு நாள் காலை வழக்கம் போல் நான் வகுப்பில் (முதல் பெஞ்ச்ல) உட்கார்ந்து இருந்தேன், பசங்க எல்லம் ஒரு பக்கம்... வாசல் அருகில், பெண்கள் உள்பக்கம் உட்கார வைக்கப்பட்டு இருப்பார்கள்... எல்லா பெண்களும் எங்கள கடந்து தான் செல்ல வேண்டும்... அப்ப புதுசா திருச்சி-யில் இருந்து வந்த ஒரு பொண்ணு, அவங்க பேரு இந்திரா... கண்ணு நிறைய "ஐ-டெக்ஸ்" மை விட்டு பார்க்கவே பயமா இருக்கும்... என்ன ஒரு லுக்... அதாங்க ஒரு முறை முறைச்சிட்டு போனாங்க... சரி, அது மூஞ்சி அப்படித்தான் என்று நான் ஒன்னும் சீரியஸா எடுத்துக்கல... அதோட எனக்கு அந்த கிளாஸுல ரெண்டு போட்டியாளர்கள்... அதுல இது ஒரு பெண்... சரி எதுலயோ நம்ம அதிகமா மார்க் வாங்கிட்டோம் போல... அங்க புகையுதுன்னு நினைச்சிகிட்டேன்.
பள்ளி மணி ஓலித்தது... பிரேயர் முடிந்து வகுப்பிற்கு வந்தோம், என் வகுப்பு ஆசிரியர் (அவர் ஒரு மாக்கான்... நல்லா பாடம் நடத்துவார் ஆனால் அடிக்கும் போது வாட்ச கயட்டி வச்சுட்டு அடிப்பார்... நீங்களே யோசிச்சி பாருங்க அடி எப்படி இருக்கும்னு) வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் கழித்து வந்தார், வந்தவர் வெங்கடேஸ், ராஜா, பழனி மூன்று பேரும் வகுப்பு வெளியில் முட்டி போடுங்கன்னார்... எங்களுக்கு ஒன்னும் புரியல... ஏன்னு கேட்ட பின்னி எடுத்துடுவார்... சரின்னு 45 நிமிஷம் முட்டி போட்டோம்... இதுல என்ன கொடுமைன்னா இந்த 9-பி இருக்கே அது எங்க ஸ்கூலோட லேடீஸ் எண்ட்றன்ஸ்... அன்று லேட்டா வந்த எல்லா பொண்ணுங்களும் எங்கள பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு... மானம் போய் விட்டது.
வகுப்பு முடியும் நேரம் மூனு பேரையும் உள்ள கூப்பிட்டு வெங்கடேஸ் மூஞ்சியில் விட்டெரிந்தார் ஒரு பேப்பரை... படிக்க வந்தீங்களா இல்ல லவ் பண்ண வந்தீங்களா என கேட்டு ஒரு அடி (அவன் கொஞ்சம் குசும்பன்) வேறு அவனுக்கு, எனக்கு தெரியும் அவர் என்னை அடிக்க மட்டார் என்று... ஏன்னா நம்ம "பேக்கிரவுண்ட்" அப்படி... அங்க உள்ள வாத்தியார்ல பாதி பேர் எங்க அப்பா ஃபிரண்ட்... அதோட என் சகோதரிகள்... ஒன்னா... ரெண்டா... நாலு பேர் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தார்கள்... அவர் பங்குக்கு ஒரு முறை முறைத்துவிட்டு... அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார். அடுத்து வந்த சகுந்தலா டீச்சரிடம்... இந்த பசங்க மன்னிப்பு கேட்டா உள்ள விடுங்க இல்ல வெளியில் நிற்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
அப்பாட, சகுந்தலா டீச்சர் வந்தது பெரிய ஆறுதல்... நான் அவர்கள் செல்ல குட்டி... என்னடா இதெல்லாம் என்றார்கள்... அப்போதுதான் அந்த "லவ் லெட்டர்" என் கைக்கு வந்தது... அதில் சில வாசாகம்... ஞாபகம் இல்லை... முடிவில் இருந்ததுதான் நம்ம " நெஞ்சில் நின்ற" வரிகள்...
இப்படிக்கு,
(திரிசூலம்)
வெங்கடேசன்
வே.இராஜா
பழனி
உடனே டீச்சரிடம் சொன்னேன்... இது எங்கள் கையெழுத்து இல்லை... வேறு யாரோ எங்கள் பெயரை "பஞ்சர்" பண்ணிவிட்டார்கள் என்று. முட்டி போட்ட அவமானம்... மூலை பர பரத்தது... யார் அந்த கள்ளன்/கள்ளி? மட மட வென்று பட்டியல் இட்டோம்... நம் மூவரின் பொது எதிரி யார்... நிட்சயம் பெண் இல்லை... பிறகு... வெங்கடேஸ் கிளாஸ் லீடர்... கிளாசில் பாதி பேர் அவனுக்கு எதிரி... பழனி... கோபம் வந்தால் பட் என்று அடித்து விடுவான்... அவனிடம் அடி வாங்கியவர் கடைசி ரெண்டு பெஞ்ச்... எனக்கு ஒருவன் கூட இல்லை... மீண்டும் ஒரு முறை படிதேன் அந்த கடிதத்தை... உடனே கேட்டேன்... டேய் கனகசபை எங்கே?
ஆகா பாதி கண்டு பிடித்து விட்டேன்... மனதிற்க்குள் என் தமிழ் ஆசானுக்கு நன்றி சொன்னேன்... தமிழில் பெயர் எழுத சொல்லி வர்புறுத்தியவர் அவர்தான். தமிழ் கட்டுரை நோட் திருத்துவது எனக்கு கொடுக்கப் பட்டு இருந்தது... ஓரளவுக்கு எல்லோருடைய கையெழுத்தும் எனக்கு அத்துபடி... வெங்கடேஸிடம் கத்தினேன்... டேய் நம்ம வகுப்புல "வே"-வன்னாவுல உள்ள ரெட்டை சுழி-ய/கொம்ப "எட்டு" மாதிரி போடுர ஓரே ஒருத்தன் கனகசபை... இது அவனோட எழுத்து-ன்னு சொன்னேன். லவ் லெட்டர் கொடுத்தானே... இன்னிக்கு லீவ் லெட்டர் கொடுத்தானா-ன்னு கேட்டேன்... லீடர் வெங்கடேஸுக்கு சந்தோஷம் தாங்கள... எடுறா சைக்கிள... விடுறா வல்லத்துக்கு என்றான்.
கனகசபையோட வீடு வல்லம் என்ற ஊர்... 5 கி.மி போயி... ஆளுக்கு 4 அரை விட்டுட்டு... அவன் கட்டுரை நோட்டோட வந்து சேர்ந்தோம்... ஆதாரம் வேணும்ல்ல?
நாங்கள் நிரபராதி என்று நிரூபித்த பின் நன்றி சொன்னேன்... பரலோகம் சென்று விட்ட என் தந்தை "வேணு" விற்கு.
பால் வாளி...
எங்கள் வீட்டின் வருமானத்தின் ஒரு சிறு பகுதி பாலும் பாலை சார்ந்தும் இருந்தது. பாலின் தரத்தை கவனத்தில் கொண்டு எங்கள் வீட்டு பால் சில கடைகளில் பிரதான இடம் பிடித்து இருந்தது... தரம் மட்டும் அல்ல நேரம் தவறாமையும் கூட... காலை 5 மணிக்கு என்றால் 5 மணிக்கு பால் கடையில் இருக்கும், காரணம் என் தத்தா அரசூரார், இந்த வலை தலத்தின் கதாநாயகன். 4 மணிக்கு எழுந்து பால் கறந்து... எனது மூத்த சகோ மூலம் பட்டுவாட செய்யப்படும்.
இது... பால் வாளியும் அம்மாவசையும்...
இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.
ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.
இது... பால் வாளியும் ரயிலடியும்...
நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.
பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...
இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?
இது... பால் வாளியும் அம்மாவசையும்...
இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.
ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.
இது... பால் வாளியும் ரயிலடியும்...
நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.
பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...
இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?
கொவூகி
கொவூகி குருமா...
பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.
தே.பொ:
1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை:
1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.
இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.
பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.
தே.பொ:
1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை:
1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.
இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.
அன்பே... ராமதாசு...
டாக்டர் மு.க-வும் டாக்டர் ராமதாஸும் பல விசயங்களில் மோதி கொண்டு இருக்கிறார்கள்... இதை டாக்டர் மு.க ஒரு பாட்டாக பாடுகிறார்...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...
என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...
ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...
மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...
என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...
ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...
மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி?
நான் கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்களின் பேட்டியை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... சமீபத்தில் யுக பாரதி-யின் பேட்டி கூட.
ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.
இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.
படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.
சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.
படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ
சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.
பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)
சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?
சரணம்:1
ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?
பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?
ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(பெண் - பல்லவி...கோரஸ்)
சரணம்:2
பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...
ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.
http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related
ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.
இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.
படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.
சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.
படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ
சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.
பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)
சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?
சரணம்:1
ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?
பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?
ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(பெண் - பல்லவி...கோரஸ்)
சரணம்:2
பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...
ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.
http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related
Subscribe to:
Posts (Atom)