எங்கள் வீட்டின் வருமானத்தின் ஒரு சிறு பகுதி பாலும் பாலை சார்ந்தும் இருந்தது. பாலின் தரத்தை கவனத்தில் கொண்டு எங்கள் வீட்டு பால் சில கடைகளில் பிரதான இடம் பிடித்து இருந்தது... தரம் மட்டும் அல்ல நேரம் தவறாமையும் கூட... காலை 5 மணிக்கு என்றால் 5 மணிக்கு பால் கடையில் இருக்கும், காரணம் என் தத்தா அரசூரார், இந்த வலை தலத்தின் கதாநாயகன். 4 மணிக்கு எழுந்து பால் கறந்து... எனது மூத்த சகோ மூலம் பட்டுவாட செய்யப்படும்.
இது... பால் வாளியும் அம்மாவசையும்...
இப்படி பால் கொண்டு போகும் வாளி திரும்பி வரும்போது அதில் பண் அல்லது "ஆட்டுகால் கேக்" (மைதாவும் + ஜீனி-யில் செய்யப்பட்ட ஒரு திண்பண்டம்) உடன் திரும்பிவரும், அது வீட்டில் கடைக்குட்டியான எனக்கு, அது கடைசியில் என் சகோ-க்களால் முற்றுகையிடப்பட்டு ஒரு பகுதி எனக்கு வந்து சேரும். இதுல அம்மாவாசை எங்க வந்துதுன்னு பார்க்குறீங்களா? அம்மாவாசை அன்று நாங்கள் கொடுக்கும் பாலுக்கு கடைகாரர் பணம் கொடுக்க மாட்டர், பதிலுக்கு ஸ்வீட்ஸ் (ஓ இதுதான் பண்டமாற்று முறை போலும்) கிடைக்கும்.
ஆக அம்மாவாசை-ன்னா எங்களுக்கு கருப்பு தினம் இல்லை இனிப்பு தினம்.
இது... பால் வாளியும் ரயிலடியும்...
நான் வளர்கிறேனே மம்மி... பால் குடிச்சிகிட்டு இருந்த நான் வளர்ந்து பால் வாளி தூக்கும் நாட்கள்... பல நாட்கள் கோபப்பட்டு இருக்கிறேன்... ஏன் இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்று, குளிரில்... மழையில்... நாள் தவறாமல் இந்த வேலை... மழை நாட்களில் குடை பிடிது கொண்டு போக முடியாது... தாத்தா யூரியா சாக்கு பையை இரண்டாக மடித்து குடை போல் போட்டு அனுப்புவார்... ரெண்டு கைல பால் வாளிய வச்சுகிட்டு கொடைய எப்படி பிடிக்க முடியும்? அதனால இந்த சாக்கு குடை ஏற்பாடு.
பால்வாளிக்கு ரயிலடில என்ன வேலை? ரயிலடி எங்கே? ரயிலடி... அதாங்க எங்க ஊர் ரயில்வே ஸ்டேசன்... எங்க வீட்டுக்கும் கடைத்தெருவிற்க்கும் இடையில், அங்க நிறைய வாதாம் மரம் ( நாட்டு பாதாம்) இருக்கும், அதில் வந்து தங்கும் பறவைகள் மற்றும் அணில்கள் இரவு முழுதும் எனக்காக பறித்து போட்ட பழங்கள், கொஞ்சம் தாமதமா போனா கிடைக்காது, அந்த வாதாம் கொட்டைக்கு அவ்வளவு டிமாண்ட்... நான் என் ரெண்டு வாளியும் முழுவதும் நிரப்பி கொண்டு வருவேன்... ஹும் சரியான "பொருக்கி பையன்" என்னமா பொருக்கி இருக்கேன்... பிறகு அதை காயவைத்து, உடைத்து... அப்பப்பா... அது ஒரு வாரம் நடைபெறும்... கடைசியில் வாதம் பருப்பு என் பையில்... கையில்... வாயில்...
இதில் வேடிக்கை என்னன்னா இந்த வாதாம் பருப்பிற்க்காக என்னை நண்பனாக வைத்துக்கொள்ள பள்ளியில் போட்டா போட்டி... இருக்காத பின்ன? எல்லோருக்கும் கொடுக்க நான் என்ன இளிச்சவாயான?
இவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.
கொவூகி
கொவூகி குருமா...
பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.
தே.பொ:
1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை:
1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.
இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.
பெயரை பார்த்து பயப்படாதீங்க... நாம கரோகி ஸாங்க் மாதிரி... கொஞ்சம் ரெடி மேட்... கொஞ்சம் ஃபிரஸ்... கொவூகி ரெடி.
தே.பொ:
1. வெள்ளை கொண்டை கடலை - 1 சிறிய கப் (ஊரிய பின் வேக வைத்தது)
2. உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக, கொ.க அளவுக்கு, வெட்டியது)
3. தக்காளி - 2 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
4. வெங்காயம் - 1 நடுத்தர அளவு (சிறிய துண்டுகளாக வெட்டியது)
5. இஞ்சி பூண்டு விழுது - 1/4 டே.ஸ்
6. ஆச்சி சிக்கன் மசாலா - 1 டே.ஸ்
7. கரம் மசாலா - சிறிதளவு9. பச்சை கொ.மல்லி - 1 இனுக்கு (பொடிதாக நறுக்கியது)
8. எண்ணை - 5 டே.ஸ்
9. உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை:
1. வாணலியில் எண்ணை சூடானவுடன் வெங்காயம் + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
3. தக்காளி + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு வதக்கவும்
4. வதங்கிய மசாலா கலவையை ஸ்மாஸர் வைத்து நசுக்கி மசாலாவை விழுதாக மாற்றவும் (கையில் தெம்பு இல்லன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாம் - சுவை கொஞ்சம் குறையும்) நசுக்கினா அம்மா அம்மியில் அரைத்து செய்தது போல இருக்கும்
5. நறுக்கிய உ.கி சேர்த்து, வாணலியை மூடி ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் (சில உ.கி முன்ன பின்ன வேகலாம்)
6. கொ.க + 1/2 டே.ஸ் ஆச்சி மசாலா + பிஞ்ச் கரம் மசாலா + பிஞ்ச் உப்பு போட்டு மேலும் ஒரு 5 நிமிடம் - மிதமான சூட்டில் - வேக வைக்கவும் (கொ.க முன்பே வேக வைத்தது, இந்த 5 நிமிடம் மசாலாவுடன் கலக்க)
7. பச்சை கொ.மல்லி சேர்த்தால் குருமா ரெடி.
இத நீங்க டிரை அல்லது கிரேவி எப்படி வேணுமோ அப்படி பண்ணிக்கலாம்... தலையெழுத்து நீங்க ஊத்துர தண்ணியில இருக்குஇத எதுகூட வேணும்னாலும் கூட்டணி வைச்சுக்கலாம்... பிரட், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா... எதோடு வேண்டுமானாலும்... ஏன்னா கொவூகி கூட்டணி அப்படி... கொ.கி + உ.கி + தக்காளி.
அன்பே... ராமதாசு...
டாக்டர் மு.க-வும் டாக்டர் ராமதாஸும் பல விசயங்களில் மோதி கொண்டு இருக்கிறார்கள்... இதை டாக்டர் மு.க ஒரு பாட்டாக பாடுகிறார்...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...
என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...
ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...
மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
படம்: அன்பே... ஆருயிரே...
மூலப்பாடல்: மரம்கொத்தியே... நீ மரம்கொத்தியே...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
குழு (ஆற்காட்டார், பொன்முடி, ...):
கட்சியோடு கட்சி கட்டி புடிக்கனும்
தொடர்ந்து இருக்கனும் கூட்டணி...
ஒன்னுக்குள்ள ஒன்னா ஒட்டி கிடக்கனும்
தமிழ்னாட்டை அடிக்கனும் கொள்ளை...
மு.க:
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
என் பார்ட்டியும்... உன் பார்ட்டியும்
ஒரு ஆறுவிடாம அள்ளுரானுவோ மண்ணை...
என் பார்ட்டி மந்திரிங்க மட்டும்
அதிகமா சுருட்டும் இடம் சென்னை...
ராம:
எம்.பி சீட்டும் குடுக்க மாட்டேங்குர...
டாஸ்மாக்குல பங்கும் குடுக்க மாட்டேங்குர...
பின்ன எதுக்கு இந்த கூட்டணி...
மு.க:
ஆட்சி கூட்டணிய நீ கொள்ளை கூட்டணின்னு புரிஞ்சிகிட்டது தவறு...
அரசியல்ல நான் ஒரு சூத்ரதாரி என்பது வரலாறு... வரலாறு...
மரம்வெட்டியே... நீ மரம்வெட்டியே...
விரட்டுகிறாய் என்னை...
அறிக்கை விட்டு அறிக்கை விட்டு...
மிரட்டுகிறாய் என்னை...
சினிமாவுக்கு பாட்டு எழுதுவது எப்படி?
நான் கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்களின் பேட்டியை படித்தும் கேட்டும் இருக்கிறேன்... சமீபத்தில் யுக பாரதி-யின் பேட்டி கூட.
ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.
இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.
படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.
சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.
படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ
சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.
பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)
சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?
சரணம்:1
ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?
பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?
ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(பெண் - பல்லவி...கோரஸ்)
சரணம்:2
பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...
ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.
http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related
ஆர்வம், முயற்சி, கற்பனை இதோடு கொஞ்சம் அதிஷ்டம்... பிறகு என்ன நீங்களும் கவிஞர்தான்.
இருந்தாலும் சில அடிப்படை விசயங்கள் தெரிந்து கொண்டு ஒரு வேலை செய்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது பாருங்க... அதான் இந்த வகுப்பு.
படத்தின் இயக்குனர் பாடல் காட்சிக்கான சூழலை சொல்லுவார், அதை வைத்து ஒரு பல்லவி இரண்டு மூன்று சரணம் எழுத வேண்டும், மற்றதை இசையமைப்பாளர் பார்த்துக்கொள்வார். ஆக "பல்லவி"-யும் "சரணம்"-மும் தான் சினிமா பாடலுக்கான இலக்கணம். துள்ளல் பாடல்கள், அதாங்க "குத்து பாட்டு" இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது.
சரி, தியரி வகுப்பு முடிஞ்சிடுச்சி, அடுத்து பிராக்டிகள். நம்ம அத ஒரு உதாரணத்தோட பார்த்தோம்னா பட்டுன்னு புரிஞ்சிக்குவீங்க.
படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல் தூவுதோ
சூழல்: நாயகனும் நாயகியும் பாடுர டூயட் பாட்டு. நாயகன் நாயகிய தன் வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். தன் காதலை சொல்லுறார், தான் அவளுக்காகவும் தன் குழந்தைக்காவும் என்ன என்ன வாங்கி வச்சிருக்கேன்னு காண்பிக்கிறார். இது எல்லாத்தையும் பார்த்த நாயகிக்கு காதல் வருது, அப்ப இந்த பாட்டு வருது.
பல்லவி: (காதல் பாடல்களில் பெரும்பாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பல்லவி-தான், மாறுபட்ட கருத்தை வலியுறுத்தும் போதுதான் ரெண்டு பல்லவி)
சஹானா சாரல் தூவுதோ...
சஹானா பூக்கள் பூத்ததோ?
சரணம்:1
ஆண்:
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா...
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேனீர் கொண்டதோ?
பெண்:
கனவோ?, நிஜமோ?
காதல் மந்திரமோ?
ஆண்:
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(பெண் - பல்லவி...கோரஸ்)
சரணம்:2
பெண்:
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு...
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியால்
புலன்களை திறந்துவிடு...
ஆண்:
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிறப்பாட்டுமா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது...
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
கோரஸ்:
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
தீம் தானனா... தீம் தானனா... தினனனனா...
இப்ப பாட்ட கேட்டு பாருங்க... படம் அப்படியே நம் கண் முன்னாடி ஓடும். ஒரு நல்ல இயக்குனர் இத சீன் பை சீன் கண்ணுல ஓட்டுனாதான் பின்னாடி செல்லுலாய்ட்-ல ஓட்ட முடியும்.
http://www.youtube.com/watch?v=YKvjPXns3jw&feature=related
மண்டகுள்ள மணியடிக்குது...
தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை...
திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...
உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...
இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...
அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...
எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...
திராவிட கட்சிகள் இதுவரை அடித்த கொள்ளை... கூட்டுக் கொள்ளை, குடும்பக் கொள்ளை...
உண்மைதான்... ஆனா இப்ப டிரெண்ட் ரொம்ப மாறிடுச்சி... கொள்ளை அடிச்ச கும்பல் இப்ப கொஞ்சம் செய்யலாமுன்னு பாக்குது...
இப்ப கட்சிய ஆரம்பிச்ச தலிவருங்கோ எல்லாம் இன்ஸ்டண்ட்டா சி.எம் ஆயிடலாமுனு கன்வு கண்டுகிராங்கப்பா... அத்துதான் ஒரே டவுட்டா இருக்குதுப்பா...
அவனுங்க 5 பீரியட்ல போட்ட ஆட்டைய இவனுவோ 5 வருசத்துல போட்டுடுவானுவோ போலருக்கே... டெக்னாலஜி ஈஸ் ஸோ இம்ப்ரூவ்ட்பா... அத்தான் பயமாகீது... கட்சி மொதா கூட்டதுலேயே... பொண்டாட்டி, பொண்ணு, மச்சான், மாமன்-னு என்றி குடுக்க சொல்லோ...
எனக்கு மண்டகுள்ள மணியடிக்குது நைனா...
தவளையின் காதல்...
இரவு நிலவை...
தன் காதலியாக நினைத்து...
கானம் பாடி அழைத்தது...ரிதப்...ரிதப்...
வெட்கிய நிலவு...
மேக மூட்டத்தில் மறைந்தது...
சாரலை தூது விட்டது...சலசல...சலசல...
தவளையே...
உன் கரகரத்த குரலுக்கு இந்த சாரல்... வெண்ணை
மனமொத்த காதலுக்கு மொத்தமாக தருகிறேன்...என்னை.

தன் காதலியாக நினைத்து...
கானம் பாடி அழைத்தது...ரிதப்...ரிதப்...
வெட்கிய நிலவு...
மேக மூட்டத்தில் மறைந்தது...
சாரலை தூது விட்டது...சலசல...சலசல...
தவளையே...
உன் கரகரத்த குரலுக்கு இந்த சாரல்... வெண்ணை
மனமொத்த காதலுக்கு மொத்தமாக தருகிறேன்...என்னை.

அமெரிக்காவில்... அடக்க விலை
சேல் ப்ரைஸ் (Sale Price)...ஸ்லிப்ப பார்க்கனும்... சிந்திக்க கூடாது.
நான் முன்பே சொல்லி இருக்கேன்... எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன்னு. ஆனா அமெரிக்காவுல எப்ப பார்த்தாலும் சேல்... சேல்... சேல். மாதத்தில் குறைந்தது ஒரு சேல் அது எப்படி சாத்தியம் ஆகிறது என நம்ம "அடக்க விலை" ஆராய்ச்சியை இங்கயும் செஞ்சி பார்த்தேன்.
இப்ப நான் "அரசூரில் அடக்க விலை" -க்கு கேட்ட மாதிரி எந்த அம்மாவ இல்ல தத்தாவ போய் கேட்க முடியும்? தேவையே இல்லை... இப்ப என்கிட்ட இருக்கு படிப்பறிவு... பட்டறிவு...இனையம் எல்லாம் இருக்கு. கோபால் பல் பொடி வியாபாரம் போல... இந்தியா, சிங்கபூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஷாப்பிங்க் அனுபவம் தான்.
சிங்கப்பூர், உலக பொருளாதார சந்தைக்கு பெயர் எடுத்த ஊர். அங்கு ஓரளவுக்கு விலை, தரம் எல்லாம் நிரந்தரம். சரி ஒரு நல்ல பிராண்டட் பொருள எடுத்துக்கொள்வோம்... நைக்/ரீபோக் டி.ஷர்ட், அல்லது சார்லி/ஃபேரன்ஹீட் (C&D) பர்ஃபியூம் இப்படி சில. ஒரு பொருள் சிங்கபூர்ல 60 டாலர்னா அது அமெரிக்கவுல 40 டாலர் இருக்க வேண்டும்... கிட்ட தட்ட 1.5 அயல்னாட்டு பண மாற்றுவிகிதப்படி.
ஆனால் அது அமெரிக்காவில் 80 டாலருக்கு குறையாமல் விற்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு... ஏன்?
கொள்ளையடிக்கிறார்களா? இல்லை இல்லவே இல்லை. அமெரிக்காவில் "நோ கொஸ்டீன்ஸ் ஆஸ்க்ட்" ரிட்டர்ன் பாலிசி... கஸ்டமர் ஸேட்டிஸ்ஃபேக்ஸன். இப்ப புரியுதா? கடையில் எப்படி நீங்க திருப்பி கொடுக்கும்போது கேள்வி கேட்பது இல்லியோ... அதே மாதிரி கஸ்டமராகிய நம்மலும் அவங்க அதிகம் வெச்சு விக்கிற விலைய பத்தி கேள்வி கேட்க கூடாது. லாஜிக் கரெக்ட்டா?
லாஜிக் இருக்கட்டும்... அடக்க விலை?
இன்னுமா புரியல? சேல் ப்ரைஸ்தான் காஸ்ட் ப்ரைஸ். அதனாலதான் மாதத்தில் குறைந்தது ஒரு நாள் ஏதாவது ஒரு சேல் நடக்குது. கடைகாறார்களின் அடக்க விலை ஃபார்முலா இதுதான். அவங்க ஸ்டாக் பண்ணும் பொருளில் பாதி விற்றாலே போதும். முழு ஸ்டாக்கோட ஆர்.ஓ.ஐ கிடைச்சுடும். நீங்க பொருள் வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால்... சந்தோஷம் கொடுங்க கொடுங்க நாங்க 50% சேல்ல இதையும் வித்துடுவோம்னு சொல்லி வாங்கி கொள்வார்கள்.
குறள்: (கற்க கசடற...)
பாருங்க சேல்பாருங்க சேல் போட்டபின்
வாங்குங்க தேவைக் கேற்ப.
பி.கு: ஏம்ப்பா நான் ரொம்ப ஏமாந்த சோனகிரிப்பா... சேல் பார்க்க தெரியாது... (ஹி...ஹி உபயோகபடுத்துன) பொருள திறுப்பி கொடுக்க மனசு வறாது... சாதாரண நாள்ல எனக்கு பாதி விலைல கொடுங்கப்பா.
நான் முன்பே சொல்லி இருக்கேன்... எனக்கு ஒரு பொருளை வாங்கும்போது அட இது இவ்வளவு மிக அதிகமாக இருக்கேன்னு நினைக்க மாட்டேன்... அதுக்கு பதிலா இந்த பொருள் அந்த விலைக்கு தகுதியான பொருளான்னு பார்ப்பேன்னு. ஆனா அமெரிக்காவுல எப்ப பார்த்தாலும் சேல்... சேல்... சேல். மாதத்தில் குறைந்தது ஒரு சேல் அது எப்படி சாத்தியம் ஆகிறது என நம்ம "அடக்க விலை" ஆராய்ச்சியை இங்கயும் செஞ்சி பார்த்தேன்.
இப்ப நான் "அரசூரில் அடக்க விலை" -க்கு கேட்ட மாதிரி எந்த அம்மாவ இல்ல தத்தாவ போய் கேட்க முடியும்? தேவையே இல்லை... இப்ப என்கிட்ட இருக்கு படிப்பறிவு... பட்டறிவு...இனையம் எல்லாம் இருக்கு. கோபால் பல் பொடி வியாபாரம் போல... இந்தியா, சிங்கபூர், மலேசியா மற்றும் அமெரிக்க ஷாப்பிங்க் அனுபவம் தான்.
சிங்கப்பூர், உலக பொருளாதார சந்தைக்கு பெயர் எடுத்த ஊர். அங்கு ஓரளவுக்கு விலை, தரம் எல்லாம் நிரந்தரம். சரி ஒரு நல்ல பிராண்டட் பொருள எடுத்துக்கொள்வோம்... நைக்/ரீபோக் டி.ஷர்ட், அல்லது சார்லி/ஃபேரன்ஹீட் (C&D) பர்ஃபியூம் இப்படி சில. ஒரு பொருள் சிங்கபூர்ல 60 டாலர்னா அது அமெரிக்கவுல 40 டாலர் இருக்க வேண்டும்... கிட்ட தட்ட 1.5 அயல்னாட்டு பண மாற்றுவிகிதப்படி.
ஆனால் அது அமெரிக்காவில் 80 டாலருக்கு குறையாமல் விற்க்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு... ஏன்?
கொள்ளையடிக்கிறார்களா? இல்லை இல்லவே இல்லை. அமெரிக்காவில் "நோ கொஸ்டீன்ஸ் ஆஸ்க்ட்" ரிட்டர்ன் பாலிசி... கஸ்டமர் ஸேட்டிஸ்ஃபேக்ஸன். இப்ப புரியுதா? கடையில் எப்படி நீங்க திருப்பி கொடுக்கும்போது கேள்வி கேட்பது இல்லியோ... அதே மாதிரி கஸ்டமராகிய நம்மலும் அவங்க அதிகம் வெச்சு விக்கிற விலைய பத்தி கேள்வி கேட்க கூடாது. லாஜிக் கரெக்ட்டா?
லாஜிக் இருக்கட்டும்... அடக்க விலை?
இன்னுமா புரியல? சேல் ப்ரைஸ்தான் காஸ்ட் ப்ரைஸ். அதனாலதான் மாதத்தில் குறைந்தது ஒரு நாள் ஏதாவது ஒரு சேல் நடக்குது. கடைகாறார்களின் அடக்க விலை ஃபார்முலா இதுதான். அவங்க ஸ்டாக் பண்ணும் பொருளில் பாதி விற்றாலே போதும். முழு ஸ்டாக்கோட ஆர்.ஓ.ஐ கிடைச்சுடும். நீங்க பொருள் வேண்டாம் என்று திருப்பி கொடுத்தால்... சந்தோஷம் கொடுங்க கொடுங்க நாங்க 50% சேல்ல இதையும் வித்துடுவோம்னு சொல்லி வாங்கி கொள்வார்கள்.
குறள்: (கற்க கசடற...)
பாருங்க சேல்பாருங்க சேல் போட்டபின்
வாங்குங்க தேவைக் கேற்ப.
பி.கு: ஏம்ப்பா நான் ரொம்ப ஏமாந்த சோனகிரிப்பா... சேல் பார்க்க தெரியாது... (ஹி...ஹி உபயோகபடுத்துன) பொருள திறுப்பி கொடுக்க மனசு வறாது... சாதாரண நாள்ல எனக்கு பாதி விலைல கொடுங்கப்பா.
Subscribe to:
Posts (Atom)